ஒரு குளியலறை, 12 இரட்டைப் படுக்கையறைகள் கொண்ட உப்பு மாளிகை! கரிக்குமோ? No No!

Palacio de Sal
Palacio de SalImg Credit: visit latin america
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் 'சாலர் டி உயினி' (Salar de Uyuni) என்னும் உலகின் பெரிய உப்புப்படுகை அமைந்திருக்கிறது. பொலிவியாவின் தலை நகரான லா பாசில் இருந்து 350 கி.மீ. (220 மைல்) தொலைவில் அமைந்திருக்கும் இந்த உப்புப்படுகையில், உப்புப் பாளங்களைக் கொண்டு உலகின் முதல் உப்பு விடுதி கட்டப்பட்டது. ‘உப்பு மாளிகை’ (Palacio de Sal) என்று அழைக்கப்படும் இந்த உணவு விடுதி, டான் ஜுவான் க்வீசடா என்ற கட்டுமான வல்லுநரால் கட்டப்பட்டது.

உலகின் முதல் உப்பு விடுதி பொலிவியாவில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் வேறு சில இடங்களிலும் சில உப்பு விடுதிகள் கட்டித் திறக்கப்பட்டன. இருப்பினும், பொலிவியாவிலுள்ள பேலசியோ டி சால் என்றழைக்கப்படும் உப்பு மாளிகைதான் உலகின் மிகப் பெரியது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இந்த விடுதிக் கட்டிடத்தில் ஏற்படும் சில சேதங்கள், மழைக்காலம் முடிந்த பின்பு மறுசீரமைக்கப்படுகிறது.

பொலிவியாவில் அமைந்திருக்கும் ‘சாலர் டி உயினி’ உப்புப் படுகையே உலகின் மிகப்பெரிய உப்புப் படுகையாகும். தென்மேற்கில் ஆந்தீஸ் மலைத்தொடருக்கு அருகில் 3,656 மீட்டர் (11,995 அடி) உயரத்தில் அமைந்திருக்கும் இந்த உப்புப் படுகை 10,582 சதுர கி.மீ (4,086 சதுர மைல்) பரப்பளவு கொண்டது.

இதனை ஒளிப்படம் எடுப்பதற்காகவே, உலகம் முழுவதுமிருந்து பல ஒளிப்படக்கலைஞர்கள் இப்பகுதிக்குச் சுற்றுலா வந்து செல்கின்றனர். இதே போன்று, இயற்கையழகை விரும்புபவர்கள் பலரும் இப்பகுதிக்குச் சுற்றுலா வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டுக்கு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சாலர் டி உயினி உப்புப் படுகையைப் பார்வையிட நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்லும் வரை தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி இல்லாமல் இருந்த நிலையில், நிலக் கட்டுமானப் பொருட்கள் எதுவும் கிடைக்காத இந்த ஒதுக்குப்புறமான பகுதியில் உப்புப் பாளங்களைக் கொண்டு ஒரு விடுதியைக் கட்டலாம் என்ற முடிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா – மனதைத் திறக்கும் மந்திர சாவி!
Palacio de Sal

அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் 1993 முதல் 1995 வரையிலான காலத்தில் சாலர் டி உயினி உப்புப் படுகையின் மையப்பகுதியில் உப்புப் பாளங்களைக் கொண்டு உப்பு மாளிகை கட்டப்பட்டது. 12 இரட்டைப் படுக்கையறைகளுடன் ஒரு பொதுவான குளியலறையைக் கொண்டு கட்டப்பட்ட இந்த விடுதியும் சுற்றுலாத்தலமானது. இருப்பினும், சாலர் டி உயினி உப்புப் படுகையின் மையப்பகுதியில் இந்த விடுதி அமைக்கப்பட்டிருந்ததால், இப்பகுதியில் நலவாழ்வு சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சுழல் மாசுபாடு காரணமாக, 2002 ஆம் ஆண்டில் இந்த விடுதி கலைக்கப்பட்டது.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டில் சாலர் டி உயினி உப்புப் படுகையின் கிழக்கு ஓரத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு, அரசின் அனைத்துச் சுற்றுச்சூழல் நடைமுறைகளையும் பின்பற்றி, ‘உப்பு மாளிகை’ (Palacio de Sal) புதிதாகக் கட்டப்பட்டது. இந்த உப்பு மாளிகை 35 செ.மீ (14 அங்குலம்) கனமுடைய 1 மில்லியன் (10 இலட்சம்) உப்புப் பாளங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இம்மாளிகையின் தரை, சுவர், கூரை, கட்டில், மேசை, இருக்கை மற்றும் அறைகலன்கள் என அனைத்தும் உப்பால் செய்யப்பட்டவைகள்தான். இங்கிருக்கும் நீராவிக் குளியலறை, நீர்ச்சுழல் குளியலறை, நீச்சல் குளம் என்று அனைத்தும் உப்புப் பாளங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டவைதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com