கடற்கரைப் பயணம்: மனம், உடல், வாழ்வுக்கு ஒரு வரப்பிரசாதம்!

A beautiful experience
Beach trip...
Published on

னித வாழ்க்கையில் பயணம் ஒரு அழகான அனுபவமாகும். அது நம்மை புதுமையான உலகிற்கு அழைத்துச்செல்லும். குறிப்பாக, கடற்கரைப் பயணம் (Beach trip) என்பது மனிதனுக்கு தனித்துவமான நினைவுகளை தரும் ஒன்று. பயணம் என்பது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒரு புதிய உற்சாகத்தை அளிக்கக் கூடியது. கடல் கரையில் நின்றவுடன் கேட்கும் அலைகளின் ஓசை, கரையைத் தாக்கி பின்வாங்கும் அலைகள், அந்த நீலக்கடலின் அழகு இவை அனைத்தும் மனதை கவரும் ஒரு அற்புதக் காட்சி.

கடற்கரைப் பயணத்தில் காலை நேரம் மிகவும் இனிமையானது. சூரியன் உதயமாகும் வேளையில் வானம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் ஒளிர்வதைப் பார்ப்பது ஆனந்தமான அனுபவம். பறவைகள் கூட்டமாக பறப்பதும், அலைகளின் மேல் ஒளிரும் சூரிய கதிர்களும் இயற்கையின் அழகை வெளிப்படுத்துகின்றன.

அலைகள் இடைவிடாமல் கரையைத் தாக்கும்போது, அவை ஒருவித இசையைப் போலக் கேட்கின்றன. அது மனதை அமைதிப்படுத்தும் ஓசை. கடற்காற்று முகத்தை வருடும்போது, உடல் சோர்வுகள் அகன்று புத்துணர்ச்சி பெறும். சிறுவர்கள் மணற்கரையில் விளையாடும் காட்சியும், மணலால் கோட்டைகள் கட்டும் சந்தோஷமும் பயணத்தை மேலும் அழகாக்குகின்றன.

கடற்கரைப் பயணத்தில் உணவின் சுவையும் தனித்துவமானது. மீன் வறுவல்கள், கடல் உணவுகள் போன்றவை அங்கே கிடைக்கும் சிறப்புகள். மேலும், கடற்கரைக்கு அருகே உள்ள சிறிய கிராமங்கள், மீனவ மக்கள் வாழ்வு ஆகியவை ஒரு புதிய அனுபவத்தைத் தருகின்றன.

கடற்கரை தின்பண்டங்கள்

கடற்கரைப் பயணத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று அங்கே கிடைக்கும் சுவையான தின்பண்டங்கள். கடல் உணவுகள் சுவைக்க சுவை தருகின்றன.

மலைப்பொரி, காரத்தீனி, வறுக்கப்பட்ட கடலை போன்ற எளிய உணவுகள் சிறு பசியை அடக்கும். மாங்கனி சில்லி, தட்டைப்பழம், எலுமிச்சை சாறு, பனங்கிழங்கு போன்றவை கடற்கரையில் அடிக்கடி விற்கப்படும் சிற்றுண்டிகள். சில இடங்களில் பஜ்ஜி வகைகள் மிளகாய், சுண்டல் போன்ற பாரம்பரிய உணவுகளும் கிடைக்கின்றன. இந்தச் சிற்றுண்டிகள் கடற்காற்றுடன் கலந்து வரும்போது, அதன் சுவை பல மடங்கு அதிகரிக்கிறது. உண்மையில், தின்பண்டங்களே பயண நினைவுகளை இன்னும் இனிமையாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
சோத்துப்பாறை அணை: குடும்பத்துடன் ஒரு ஜாலி டிரிப் போகலாமா?
A beautiful experience

கடற்கரை காற்றின் சுகம்

உடல் சுகம்: கடலிலிருந்து வீசும் காற்று சுத்தமானதும் குளிர்ச்சியானதுமாக இருக்கும். அது உடலில் படும்போது சோர்வை போக்கி புத்துணர்ச்சி தருகிறது. மேலும், கடற்கரை காற்றில் அதிகமான நெகட்டிவ் அயான்கள் (Negative Ions) இருப்பதால் சுவாசிக்கும் போது நுரையீரல் சுத்தமாகி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

மனஅமைதி: கடற்கரை காற்று நம் மனதுக்கு ஒரு இயற்கையான மருந்து போல வேலை செய்கிறது. மெதுவாக வீசும் குளிர்ந்த காற்று நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து அமைதியை அளிக்கிறது. அதனால் தான் பலர் கடற்கரையில் உட்கார்ந்து காற்றை அனுபவித்து தியானம் செய்ய விரும்புகிறார்கள்.

ஆரோக்கிய நன்மைகள்: கடற்கரை காற்றில் சுவாசிப்பது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது. மன உற்சாகத்தை அதிகரித்து சோர்வை போக்குகிறது.

இந்தப் பயணத்தில் நாம் காணும் அலைகள் வாழ்க்கைக்கே ஒரு பாடமாக அமைகின்றன. அலைகள்போல மனிதனும் எத்தனை முறை பின்வாங்கினாலும், மீண்டும் முன்னேற வேண்டும் என்ற உணர்வை தருகின்றன.

இதையும் படியுங்கள்:
விமானப் பயணத்தின் பாதுகாப்பு (Air travel safety) விதிகளை மீறினால் என்னவாகும்?
A beautiful experience

கடற்கரைப் பயணம் என்பது சிரிப்பும் சுகமும் மட்டுமல்ல, இயற்கையின் அற்புதங்களை உணரவும், மனதிற்கு அமைதியைப் பெறவும், அங்குள்ள உணவின் சுவையை அனுபவிக்கவும் உதவும் ஒரு இனிய அனுபவம். அலைகளின் அழகு மனித வாழ்க்கையில் புதுமையும் பொறுமையும் கற்றுக்கொடுக்கும் ஒரு இயற்கை பாடமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com