கோடை காலத்திலும் பனிப்பொழியும் 8 இடங்கள்!

Tourism awareness
Best tourist destinations
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

கோடை காலத்தில் கொளுத்தும் வெயில்தான் நாம் அறிந்தது. ஆனால் கோடையிலும் பனி பொழியும் இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வகையில் கோடையிலும் பனிப்பொழியும் 8 சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1.யும்தாங் பள்ளத்தாக்கு:

இந்தியாவின் அழகிய இடங்களில் ஒன்றாகவும் சிக்கிமின் மலர் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் சிக்கிமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யும்தாங் பள்ளத்தாக்கு, கோடைக் காலங்களிலும் பனிப்பொழிவைப் பெறுகிறது. இதற்கு அருகில் லாச்சுங் பள்ளத்தாக்கு ,ஜீரோ பாயிண்ட் ஆகியவை உள்ளன.

2.பஹல்காம் :

இமயமலை மலைகள் மற்றும் உயரமான பைன் காடுகளுடன் மெல்லிய பனியால் மூடப்பட்டிருக்கும் , கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் காஷ்மீரில் வசதியாக அமர்ந்திருக்கும் பஹல்காம், கோடைக்கு ஏற்ற குளுகுளு பனிப்பிரதேசமாக உள்ளது.

3.ட்ராஸ் பள்ளத்தாக்கு:

லடாக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் ட்ராஸ் பள்ளத்தாக்கு10990 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் கோடையிலும் பனிப்பொழிவை காண முடியும் .

4.லே:

குளிர்காலத்தில் உறைந்தும் கோடை காலத்தில் பனிப்பொழிவை காணும் சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும் லே சில முக்கிய சாகச விளையாட்டு ஸ்பாட் ஆக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான அனுபவங்களைத் தரும் உலகின் 7 அதிசய ஹோட்டல்கள்!
Tourism awareness

5.குல்மார்க்:

ஜம்மு மற்றும் காஷ்மீர் இமயமலைச் சிகரங்களின் பின்னணியில் இருக்கும் குல்மார்க் குளிர்காலத்தில் மட்டுமல்ல, கோடை காலங்களிலும் இனிமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலையைக் கொண்டுள்ளது .

6.முன்சியாரி:

உத்தரகாண்ட் பித்தோராகர் மாவட்டத்தில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ள முன்சியாரி பனி படர்ந்த சிகரங்களால் சூழப்பட்டிருப்பதால், கோடைக்காலத்தில் கொளுத்தும் வெப்பத்தை மறந்து, சில்லென்று இருக்கலாம்.

7.ஜூலுக் :

கிழக்கு சிக்கிமில் உள்ள ஜூலுக் கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அமைதியான இமயமலை கிராமம் கஞ்சன்ஜங்கா உட்பட லுங்துங், கலாபோக்ரி ஏரி , நாதாங் பள்ளத்தாக்கு ஆகியவற்றுடன் பனி படர்ந்து காணப்படுகிறது.

8.ரோஹ்தாங் கணவாய்:

உயரமான மலைப்பாதைகளில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் பிர் பஞ்சால் மலைத்தொடரில் 13050 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பாஸ்குலு பள்ளத்தாக்கு, லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள இது மே முதல் நவம்பர் வரை பனிபடர்ந்து காணப்படுகிறது.

மேற்கூறிய 8 இடங்களும் கோடை காலத்திற்கு ஏற்ற பனிப்பொழியும் இடங்களாக இந்தியாவில் இருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com