இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மாஞ்சோலை
மாஞ்சோலை

கோடைக்காலத்தில் நாம் ஊட்டி, கொடைக்கானல், இந்த இரண்டு ஊர்களை மட்டும்தான் மையப்படுத்தி பெரும்பாலானோர் சுற்றுலா செல்வோம். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரியும் தங்கும் இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிவார்கள். 

ஆஹா வேறு எங்காவது சென்றிருக்கலாமே அமைதியாக அழகாக கோடைக் காலத்தில் பயணத்தை அனுபவித்து விட்டு வரலாமே என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள். ஆனால் திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகான மலையாக மாஞ்சோலை உள்ளது. மாஞ்சோலையில் இயற்கை அழகின் அருமைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன.

தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது.

மாஞ்சோலை அதன் அழகான வானிலைக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மாஞ்சோலை மலை உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசமாக விளங்கும்.

இதையும் படியுங்கள்:
அறியாமையும் கை கொடுக்கும்..!
மாஞ்சோலை

பச்சை வண்ணம் தேயிலை தோட்டங்களைப் பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். சுற்றியுள்ள மலைகள் மற்றும் காடுகளின் சில அற்புதமான காட்சிகளை நீங்கள் ரசிக்கக்கூடிய பல வாய்ப்புகள் இங்கு உள்ளன.

நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடு ஆகியவை உள்ளன. இந்த மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் வழியாக நாம் நடந்து சென்றாலே ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசிக்க முடியும்.

மாஞ்சோலை
மாஞ்சோலை

அமைதியான சூழ்நிலையில் தங்க விரும்பும் அனைவரும் நிச்சயம் காண வேண்டிய இடமாக இந்த மாஞ்சோலை விளங்குகிறது. மாஞ்சோலை சுமார் 1162 மீட்டர் உயரத்தில் உள்ள மலை ஆகும். இந்த இடம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பிரபலமானது, அவற்றில் பம்பாய் பர்மா தேயிலைத் தோட்டம் மிக முக்கியமானது.

அதன் அழகிய அழகு காரணமாக, இந்த இடம் ஊட்டிக்கு இணையான அந்தஸ்தை பெறுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றை வரும் வழியில் கண்டு மகிழலாம்.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி

இவற்றுடன் மலைக்கு மேலே கண்டு ரசிக்கக் கோதையாறு, குதிரைவெட்டி, நாலுமுக்கு மற்றும் ஊத்து போன்ற இடங்களும் உள்ளன. இங்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் கூறும் கட்டுப்பாட்டின் பெயரிலேயே சுற்றுலா பயணிகள் சென்று வர முடியும்.

இந்த ஆண்டு டூர் பிளான் இன்னும் முடியவில்லை என்றால் கண்டிப்பாக மாஞ்சோலை செல்லுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவமும் இயற்கையான சூழ்நிலையில் மன நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com