பெங்களூரின் அடையாளமான லால்பாக்கிற்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா?

payanam articles
lalbagh park
Published on

பெங்களூருக்கு அழகு சேர்க்கும் இடங்களில் ஒன்று லால் பாக். தாவரவியல் பூங்கா ஹைதர் அலி மைசூரை ஆண்டபோது 1770 ம் ஆண்டு இந்த பார்க்யை விரிவுபடுத்தினார். 40 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த பார்க்கிற்கு அவர்தான் டெல்லி, லாகூர், ஆற்காடு போன்ற இடங்களில் இருந்து விதவிதமான மலர் செடிகளையும் மற்றும் மரங்களையும் இங்கு கொண்டு வந்தார்.

ஹைதர் அலி ஒருமுறை தன் மகன் திப்பு சுல்தானை இந்த பார்க்கிற்கு சுற்றிப் பார்க்க அழைத்து வந்தார். அப்போது சிறுவன் திப்பு சுல்தான் பார்க்யை பார்த்து விட்டு தொடர்ந்து "லால் பாக், லால் பாக்"என்று கத்திகொண்டே இருந்தான். காரணம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஹைதர் அலியால் கோடைக்கால அரண்மனையில் அமைக்கப்பட்ட ஒரு லால்பாக் முதலில் இருந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது போரின்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. அதுபோல இந்த தோட்டம் இருக்கிறது என்றே சிறுவனாக இருந்த திப்பு சுல்தான் லால்பாக் என்று சபதமிட்டார். எனவேதான் இந்த பார்க்கிற்கு "லால் பாக்"என்று பெயர் வந்தது என்கிறார்கள். திப்பு சுல்தான் ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த பார்க்யை மேலும் விரிவுபடுத்தினான்.

பிரிட்டிஷ் பேரரசு இந்த இடத்தை 1856 ஆம் ஆண்டு தாவரவியல் பூங்காவாக அறிவித்தது. முகலாய ஆட்சியாளர்களைத் தவிர, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் தோட்டத்தைப் பராமரிப்பதில் உதவினர்.

பெங்களூர் வரும் முக்கியஸ்தர்கள் அனைவரும் தங்கள் நினைவாக ஒரு மரத்தை இங்கு நடுவதை கெளரவமாக கருதி செய்தனர். ரவீந்தரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்றபோது 1919 ல் பெங்களூர் மக்கள் அவருக்கு இங்குதான் பாராட்டு விழா நடத்தினார்கள். அப்போது ரவீந்திரநாத் தாகூர் தன் நினைவாக அங்கு அத்தி மரத்தை நட்டார்.

இதையும் படியுங்கள்:
மனதை கொள்ளை கொள்ளும் அழகிய கடற்கரைகள்… கோவா! கோவா!
payanam articles

லால்பாக் பெங்களூருவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். நகரின் மையப்பகுதியில் 240 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பரந்த தோட்டமான லால்பாக், இந்தியாவின் மிகப்பெரிய வெப்பமண்டல தாவரங்கள் மற்றும் துணை வெப்பமண்டல தாவரங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் பல நூற்றாண்டுகள் பழமையான மரங்களும் அடங்கும்.

இங்குள்ள லால்பாக் கண்ணாடி மாளிகை என்பது லண்டனின் ஹைட் பூங்காவில் உள்ள கிரிஸ்டல் பேலஸைப்போல ஈர்க்கப்பட்ட கண்ணாடி மற்றும் இரும்பு அமைப்பு கொண்ட ஒரு பிரம்மாண்டமான மாளிகை. லால்பாக் கண்ணாடி வீடு 1989 இல் கட்டப்பட்டு 2004 இல் புதுப்பிக்கப்பட்டது, மேலும் லால்பாக் பார்வையாளர் களுக்கு இது முதன்மையான ஈர்ப்பாக உள்ளது.

லால்பாக்கின் தெற்குப் பகுதியில் நடைபாதைகள், பாலம் மற்றும் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியுடன் கூடிய ஒரு பெரிய ஏரி உள்ளது. போன்சாய் தோட்டம், மலர் கடிகாரம், செம்பருத்தி தோட்டம் ஆகியவை லால்பாக் தாவரவியல் பூங்காவிற்குள் பார்க்க வேண்டிய பிற சுவாரஸ்யமான இடங்களாகும்.

குடியரசு தினம் (ஜனவரி 26) மற்றும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) ஆகியவற்றின்போது லால்பாக்கில் மலர் கண்காட்சி, கோடையில் மாம்பழ/பலாப்பழ விழாக்கள் நடைபெறுகின்றன.

லால்பாக் ஒவ்வொரு திசையிலும் 4 வெவ்வேறு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது, இதனால் பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எளிதாக உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும். மேற்கு வாயில் லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது, அதே நேரத்தில் இரட்டை சாலை நுழைவாயிலில் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்திய ரயில்வே பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்..!
payanam articles

லால்பாக் தாவரவியல் பூங்கா தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் (காலை 6 முதல் 9 மணி வரை மற்றும் மாலை 6 முதல் 7 மணி வரை) நுழைவு இலவசம். பகல் நேரத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com