மேகங்களை தொடும் உயரத்தில் ஒரு தேயிலை தோட்டம்.. கொழுக்குமலையின் பிரம்மாண்ட ரகசியங்கள்!

kolukkumalai
kolukkumalai
Published on

எப்போதும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று போர் அடித்து விட்டதா? இதுபோன்ற வழக்கமான இடங்களை தாண்டி, கொஞ்சம் த்ரில்லாகவும் அதே சமயம் ரொம்பவே அமைதியாகவும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என நீங்கள் பிளான் செய்தால், கொழுக்குமலை உங்களுக்கு ஒரு பெர்ஃபெக்ட்டான சாய்ஸ். 

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில், அதாவது தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு நடுவே சுமார் 8000 அடி உயரத்தில் இந்த இடம் கம்பீரமாக அமைந்துள்ளது. மாசற்ற தூய்மையான காற்றும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்ற தேயிலை தோட்டங்களும் நிறைந்த இந்த மலைப்பிரதேசத்தை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாரம்பரிய சுவை கலந்த தேநீர்!

இந்த மலையின் மிக முக்கியமான சிறப்பம்சமே இங்குள்ள அழகிய டீ எஸ்டேட் தான். இதுதான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தேயிலை தோட்டம் என பலரால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இங்கு பெரிய அளவிலான நவீன இயந்திரங்களை வைத்து சாதாரணமாக தேயிலை தூள் தயாரிப்பது கிடையாது. 

ஆர்த்தோடாக்ஸ் (Orthodox) எனப்படும் பல நூறு வருடங்களுக்கு முந்தைய பாரம்பரிய முறையை தான் இன்றும் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்கள். கைதேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கைகளாலேயே கொழுந்துகளை பறித்து, அதை கவனமாக காயவைத்து, உருட்டி பக்குவப்படுத்துகிறார்கள். இந்த உழைப்பினால் தான் இங்கு கிடைக்கும் டீயின் சுவையும் வாசனையும் வேற லெவலில் இருக்கிறது.

சாகசப் பயணம்!

இங்கு செல்வதற்கான பயணமே ஒரு மிகப்பெரிய சாகசம் தான். கேரளாவின் மூணாறு பகுதியிலிருந்து கரடுமுரடான மலைப்பாதைகளில் ஒரு ஓப்பன் ஜீப்பில் ஏறி பயணிப்பது ஒரு அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும். சுமார் இரண்டு மணி நேரம் வளைந்து நெளிந்து செல்லும் இந்த ஜீப் பயணம் உங்களை ரொம்பவே உற்சாகப்படுத்தும். 

அதிகாலையில் இங்கு சென்று சூரியன் உதிக்கும் அந்த காட்சியை பார்ப்பதற்காகவே பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிகிறார்கள். உங்கள் கால்களுக்கு கீழே பஞ்சு போன்ற மேகங்கள் கூட்டமாக மிதக்க, மெல்ல மெல்ல வானம் பல வண்ணங்களில் மாறுவதை நேரில் பார்ப்பது நிஜமாகவே ஒரு ரம்யமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இளஞ்சிவப்பு நகரத்தின் இதயத்துடிப்பு: ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ் ஒரு முழுமையான பார்வை!
kolukkumalai

அமைதியான தங்குமிடம்!

நகரத்தின் அந்த இரைச்சல் மற்றும் டென்ஷன் எதுவும் இல்லாமல் சில நாட்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க இது ஒரு அற்புதமான இடம். பெரிய ஆடம்பரமான ஹோட்டல்கள் இல்லாவிட்டாலும், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே உள்ள பழமையான பங்களாக்கள் மற்றும் சின்ன சின்ன தங்குமிடங்களில் தங்குவது மனதுக்கு இதமாக இருக்கும். எளிய உள்ளூர் மக்கள் செய்து கொடுக்கும் சூடான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே, அந்த பாரம்பரிய டீ ஃபேக்டரியை சுற்றிப் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் மலையேற்றம் செல்லும் போது காட்டெருமைகள் மற்றும் அரிய வகை பறவைகளை கூட ரொம்பவே அருகில் பார்த்து ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அறிவியலை மிஞ்சும் இயற்கை: மரணமில்லா வாழ்வும், மர்மமான பிறப்பும்!
kolukkumalai

கொழுக்குமலை, இயற்கையின் மடியில் ஒளிந்திருக்கும் ஒரு அழகிய தனி உலகம். காற்றில் கலந்திருக்கும் தேயிலையின் வாசம், எளிய மக்களின் அன்பான உபசரிப்பு, பனி மூடிய மலை முகடுகள் என எல்லாமே உங்களை ஒரு புதிய உலகத்திற்கு நிச்சயமாக அழைத்துச் செல்லும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com