காலத்தின் சுழலில் மறைந்த நகரமும், நினைவுகளாக மாறிய வயல்களும்!

green-fields
payanam articles
Published on

ரு காலத்தில் நம் கண்களில் ஒளிர்ந்த நகரம், இன்று நம் நினைவுகளில் மட்டும் ஒளிந்திருக்கிறது. காலம் ஓடிக்கொண்டே போகிறது; அதன் சுழலில் பல நகரங்கள் நம்மை விட்டு சென்றனவா அல்லது நாம்தான் அவற்றை விட்டு சென்றோமோ என்று சில நேரங்களில் தோன்றுகிறது.

ஒருகாலத்தில் தெருக்களில் குழந்தைகள் சிரித்த குரல், மாலை நேரத்தில் மண் வாசனை கலந்து வீசும் காற்று, சாயங்காலத்தில் விளக்குகள் மினுங்கிய பசுமையான பாதைகள் இவை அனைத்தும் இன்று நம் மனதில் மட்டும் மீதமுள்ள ஓர் ஓவியம் போல இருக்கிறது. அந்த நகரம் இனி அதே வடிவில் இல்லை; ஆனால் அதன் ஒலி, அதன் உயிர், அதன் சுவாசம் நம் உள்ளத்தில் இன்னும் காற்றாய் மிதக்கிறது.

நகரம் மாறிவிட்டது. வீதிகள் அகன்றன, பழைய வீடுகள் இடிந்தன, புதுப் பில்டிங்ஸ் எழுந்தன. ஆனால் அந்த நகரம் நமக்குள் இன்னும் சிறுவயது வாசனையுடன் உயிரோடு இருக்கிறது. அந்த தெருவில் நடந்த நட்பு, அந்த கோயில் விழாவின் ஓசை, அந்த சிற்றுண்டி கடையின் சூடு இவை அனைத்தும் இன்று நினைவாக மட்டும் வாழ்கின்றன.

ஒரு மழை துளி விழும்போது, மனம் அந்த நகரத்தின் மழைக்காலத்துக்கு திரும்பி செல்கிறது; ஒரு பழைய பாடல் ஒலிக்கும்போது, அந்த நகரத்தின் தெருக்களில் மீண்டும் நம்மை பயணிக்க வைக்கிறது. நம் உள்ளத்தில் அந்த நகரம் இன்னும் உயிரோடு இருக்கிறது.

நினைவுகளாக மாறிய நகரங்கள் நம்முள் தங்கியுள்ளன, ஒவ்வொரு மழை வாசனையிலும், ஒவ்வொரு காற்றின் நிழலிலும், ஒரு இனிய கடந்த காலத்தின் துடிப்பாகவே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பயணத்தின்போது செல்போனை பத்திரமாகப் பயன்படுத்த வழிகள்!
green-fields

நினைவுகளாக மாறிய வயல்கள்

ஒருகாலத்தில் பசுமையாக விரிந்திருந்த அந்த வயல்கள் இன்று நினைவுகளாக மட்டும் நம் மனதில் பசுமை ததும்புகின்றன. முற்பகலில் பறவைகளின் குரலோடு விழித்த பூமி, மாலை நேரத்தில் காற்றில் அசையும் நெற்பயிர்களின் நிழல், அந்தச் சூழல் இனி கனவாகிப் போய்விட்டது. அந்தக் காலத்தில் வயலின் வழியே நடந்து சென்றால் மண் வாசனை நம்மை தழுவும்; உழவன் நெற்றி வியர்வையால் ஒளிரும்; கால்நடைகள் மெதுவாக நகரும்; கூடவே குழந்தைகளின் சிரிப்புகள் காற்றில் கலந்து ஒலிக்கும். அந்த நேரத்தில் மண், நீர், மனிதன் மூவரும் ஒன்றாய் இருந்தனர். அந்த உறவின் நெஞ்செரிச்சலே இன்று “நினைவுகளாக மாறிய வயல்கள்” என்ற சொல்லின் வேதனை.

இப்போது அந்தப் பசுமை நிலங்கள், சிமெண்டு சுவர்களால் சூழப்பட்ட குடியிருப்புகளாக மாறிவிட்டன. பசுமையைப் பார்த்த கண்கள் இன்று கட்டிடங்களின் கண்ணாடி ஒளியில் மங்கிவிட்டன. நீரோடைகள் உலர்ந்தன; நெல் வாசனை மங்கியது; அதற்குப் பதிலாக வாகன ஒலி, புகை, தூசி மட்டுமே மீதமிருக்கின்றன.

மண்ணில் வேரூன்றி வாழ்ந்த மக்கள், இப்போது நகரத்தின் நெரிசலில் வேரற்ற மரங்களாய் தத்தளிக்கின்றனர். ஆனால், அவர்கள் மனத்தின் ஆழத்தில் இன்னும் அந்த வயல் பசுமை உயிரோடு இருக்கிறது.

நினைவில் வாழும் பசுமை

ஒரு மழை பெய்யும்போது நம் உள்ளத்தில் அந்த வயல் மீண்டும் பச்சை தழைக்கிறது. மண்வாசனை வந்தாலே, தந்தையோ, தாத்தாவோ உழவு செய்த நினைவு மிதந்து வருகிறது. அந்த வயல் நமக்கு உணவு கொடுத்தது, உயிர் கொடுத்தது. இன்று அது கொடுக்கிறதே நினைவுகள் மட்டும்.

இதையும் படியுங்கள்:
சோலோ ட்ராவல்: சொல்லப்படாத 10 கசப்பான உண்மைகள்!
green-fields

அவை வெறும் நிலமல்ல, அவை நம் வாழ்வின் ஆரம்பம், நம் வேர்கள், நம் அடையாளம். மண் பேசும் காலம் போய்விட்டது; ஆனால் மண்ணின் மொழி இன்னும் நம் இதயத்தில் ஒலிக்கிறது. அந்த ஒலியை மீண்டும் கேட்கும் ஆசையே, மனிதன் இன்றும் பசுமையைத் தேடிக் கொண்டிருப்பதற்கான காரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com