மேட்டூர் அணை கட்டப்பட்ட உண்மைக்கதை! நீங்கள் கேட்டிராத தகவல்கள்!!

payanam articles
Mettur Dam
Published on

ணையின் வரலாறினை பார்க்கும்போது மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 10ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு 9ஆண்டு கால உழைப்பின் பயனாக 1934ஆம் ஆண்டு கட்டிமுடிக்கபட்ட இவ்வணையின் அதிகபட்ச உயரம் 214அடி, இதன் நீர் தேக்கஅளவு 120 அடி உயரமாகும்.

3-1700 மீ நீளமும், 171அடி அகலம் கொண்ட 9347 கோடி கனஅளவு நீர் தேக்க கொள்ளளவு கொண்ட இந்த நீர்தேக்கத்திற்க்கான நீர்வரத்து கர்நாடக மாநிலத்தின் கபினிஅணை மற்றும் கிருஷ்ணராஜாசாகர அணைகளிலிருந்து பெறப்படுகின்றது.

16 கண் மதகுகள் கொண்ட இந்த அணையில் இரண்டு சுரங்க மின்நிலையங்கள் உண்டு. இவற்றில் முதல் மின்நிலையம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்திலும், இரண்டாம் மின்நிலையம் இந்திய குடியரசு ஆட்சியிலும் கட்டப்பட்டது.

மேட்டூர் அணை பற்றிய நினைவு கொள்ளத்தக்க குறிப்புகள் உள்ளன. 1801 பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபை இந்த அணையை கட்ட முயற்சி எடுத்தபோது, மைசூர் சமஸ்தானத்தின் எதிர்ப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டது.

எனினும் இரண்டாம் முறையாக 1835 சர் ஆர்தர்காட்டன் என்பவரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு மைசூர் சமஸ்தானத்தின் தொடர் எதிர்ப்பால் இம்முயற்சியும் இரண்டாம் முறையாக கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உலகின் 2வது பெரிய கொதிக்கும் ஏரி! சாகசப் பிரியர்களின் சொர்க்கம்!
payanam articles

ஆனால் 1923 திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் முயற்சியால் 1924 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்தவரும் அப்போது சென்னையில் வசித்து வந்தவருமான ஸ்டான்லி என்ற பொறியாளரைக் கொண்டு இவ்வணை கட்டப்பட்டது. அவரின் பெயரால் இவ்வணை ஸ்டான்லி அணை என்றழைக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தின் மேட்டூர் பகுதியில் இவ்வணை நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33கும் மேற்பட்ட கிராமங்கள் இணைத்து கட்டப்பட்ட அணையாகும். கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழ மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும், அதற்க்குப்பின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலும், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டஇரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அணையின் நடுவில் உள்ளது. அணையின் நீர்மட்டம் 80அடிக்கு கிழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழே குறையும்பபோது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும்.

சோழ மன்னர் ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்ட நந்தி முகப்பும் , அதற்கு பின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலும் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டஇரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குளிர்காலச் சுற்றுலா: இப்போதே பிளான் செய்யுங்கள்!
payanam articles

10-1934 ஆம் ஆண்டில் முதன் முறையாய் ஸ்டான்லி நீர் தேக்கம் நீரில் நிறைந்தது. நீர் இருந்தாலும், குறைந்தாலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதோடு சிதைந்த, காலத்தின் அழியா நினைவு சின்னங்களையும் தன்னுள் அடக்கி நின்று காலத்தின் பெருமையை உணர்த்தி மக்கள் மனதை குளிர் விக்கின்றது மேட்டுரின் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com