சினிமா விமர்சனம்.லதானந்த்.சர்வதேச அளவில் பல முக்கியப் புள்ளிகளைக் கணக்குப்போட்டுக் கொல்கிறார் விக்ரம். அவரது கணிதக் கணிப்புகளை முறியடிக்க இன்னொரு பாத்திரம் கம்ப்யூட்டர் மூலம் பல சாகசங்களைச் செய்கிறது. அந்தப் பாத்திரம் யார் என்று சொன்னால் சுவாரசியம் போய்விடும்.கொலைகளைத் துப்புத்துலக்க இன்டர்போல் அதிகாரியாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் களமிறங்கி ஏதேதோ செய்கிறார். ஆனாலும் அவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில் விக்ரமின் சிறு வயதுப் பருவம் மற்றும் இளமைக் காலக் காதல் காட்சிகளும் வந்து போகின்றன.ஆரம்பக் காட்சிகள் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கின்றன..மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு பூமர் அங்கிள் போலத் தோற்றமளிக்கும் விக்ரமுக்கு நடனக் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். என்ன சொல்ல….படம் லண்டன், கல்கத்தா, ரஷ்யா,சென்னை, கோயமுத்தூர், ஸ்காட்லாந்து, ஸ்வீடன் என எங்கெங்கோ அலைகிறது..கொல்கத்தா காட்சிகளைக் காண்பிக்கும்போது இன்னும் அங்கே புழக்கத்தில் இருக்கும் கை ரிக்ஷா மற்றும் ட்ராம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு..படத்தின் நேரமான மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் என்பது மிக அதிகமானது. "இடைவேளை எப்போதடா வரும்" என்கிற அளவுக்கு முற்பகுதியிலேயே சோதித்துவிடுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் முன் பாதிப் படத்துக்குத் தொடர்பில்லாமல் ஜவ்வாக இழுக்கின்றன. பல இடங்களில் பாத்திரங்களின் வாயசைப்புக்கும், ஒலிக்கும் உச்சரிப்புக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.ஸ்ரீநிதி, மிர்னாலினி, மீனாட்சி என மூன்று கதாநாயகிகள் இருந்தும் ஒருவரும் சோபிக்கவில்லை. ஏனோதானோவென்று வந்து போகின்றனர்.கணிதத்தைப் பயன்படுத்தி விக்ரம் செய்யும் கொலைகள் ஆச்சரியப்படவைக்கின்றன. 400 RPM வேகத்தில் சுழலும் மின்விசிறியின் இறக்கையின்மீது துப்பாக்கியால் சுட்டு, குண்டை மடைமாற்றுவது போன்ற காட்சிகள் நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல ஹேலுசினேஷன் தொடர்பான காட்சிகளும் தமிழுக்குப் புதுமை.இடைவேளைக்கு முன்பு வரை நீளம்தான் பாடாய்ப் படுத்தியது என்று பார்த்தால், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் தொய்வு, காட்சிகளைப் புரிந்துகொள்வதில் குழப்பம் என்று மிகவும் சிரமப்படுத்திவிடுகிறது படம்..சண்டைக் காட்சிகளின்போது, 'தையத் தக்க, தன்னா, தனனன்னா' என்று கிரீச்சிடும் பின்னணிக் குரல் கடுப்பேற்றுகிறது.விக்ரமின் ஹாலுஸினேஷன் காட்சியில் விக்ரமுடன் சேர்ந்து ஆனந்தராஜும், இன்னொரு கோட் சூட் ஆசாமியும் செய்யும் சேட்டைகளின்போது ரசிகர்களின் கேலிச் சிரிப்பும் போலிக் கைதட்டலும் சகிக்க முடியாத அந்தக் காட்சிகளுக்கான உடனடிப் பரிசு!.ஒரு பாடல் காட்சியில் சுற்றியிருப்பவர்கள் கத்த, விக்ரம் காதைப் பொத்திக்கொள்வார். நமக்கும் அப்படிச் செய்யத்தான் தோன்றுகிறது.படத்தை ஒரு முறை மட்டும் பார்த்தால் கதையைப் புரிந்துகொள்வது கடினம்தான்; அதற்காகத் தெரிந்தே மறுபடியும் கோப்ராவிடம் கடி வாங்க முடியுமா?.மொத்தத்தில்: கோப்ரா குழப்பிக் கொத்திக் குதறிவிடுகிறது!.அட்டையில் : ஸ்ரீநிதி ஷெட்டி
சினிமா விமர்சனம்.லதானந்த்.சர்வதேச அளவில் பல முக்கியப் புள்ளிகளைக் கணக்குப்போட்டுக் கொல்கிறார் விக்ரம். அவரது கணிதக் கணிப்புகளை முறியடிக்க இன்னொரு பாத்திரம் கம்ப்யூட்டர் மூலம் பல சாகசங்களைச் செய்கிறது. அந்தப் பாத்திரம் யார் என்று சொன்னால் சுவாரசியம் போய்விடும்.கொலைகளைத் துப்புத்துலக்க இன்டர்போல் அதிகாரியாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் களமிறங்கி ஏதேதோ செய்கிறார். ஆனாலும் அவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில் விக்ரமின் சிறு வயதுப் பருவம் மற்றும் இளமைக் காலக் காதல் காட்சிகளும் வந்து போகின்றன.ஆரம்பக் காட்சிகள் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கின்றன..மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு பூமர் அங்கிள் போலத் தோற்றமளிக்கும் விக்ரமுக்கு நடனக் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். என்ன சொல்ல….படம் லண்டன், கல்கத்தா, ரஷ்யா,சென்னை, கோயமுத்தூர், ஸ்காட்லாந்து, ஸ்வீடன் என எங்கெங்கோ அலைகிறது..கொல்கத்தா காட்சிகளைக் காண்பிக்கும்போது இன்னும் அங்கே புழக்கத்தில் இருக்கும் கை ரிக்ஷா மற்றும் ட்ராம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு..படத்தின் நேரமான மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் என்பது மிக அதிகமானது. "இடைவேளை எப்போதடா வரும்" என்கிற அளவுக்கு முற்பகுதியிலேயே சோதித்துவிடுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் முன் பாதிப் படத்துக்குத் தொடர்பில்லாமல் ஜவ்வாக இழுக்கின்றன. பல இடங்களில் பாத்திரங்களின் வாயசைப்புக்கும், ஒலிக்கும் உச்சரிப்புக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.ஸ்ரீநிதி, மிர்னாலினி, மீனாட்சி என மூன்று கதாநாயகிகள் இருந்தும் ஒருவரும் சோபிக்கவில்லை. ஏனோதானோவென்று வந்து போகின்றனர்.கணிதத்தைப் பயன்படுத்தி விக்ரம் செய்யும் கொலைகள் ஆச்சரியப்படவைக்கின்றன. 400 RPM வேகத்தில் சுழலும் மின்விசிறியின் இறக்கையின்மீது துப்பாக்கியால் சுட்டு, குண்டை மடைமாற்றுவது போன்ற காட்சிகள் நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல ஹேலுசினேஷன் தொடர்பான காட்சிகளும் தமிழுக்குப் புதுமை.இடைவேளைக்கு முன்பு வரை நீளம்தான் பாடாய்ப் படுத்தியது என்று பார்த்தால், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் தொய்வு, காட்சிகளைப் புரிந்துகொள்வதில் குழப்பம் என்று மிகவும் சிரமப்படுத்திவிடுகிறது படம்..சண்டைக் காட்சிகளின்போது, 'தையத் தக்க, தன்னா, தனனன்னா' என்று கிரீச்சிடும் பின்னணிக் குரல் கடுப்பேற்றுகிறது.விக்ரமின் ஹாலுஸினேஷன் காட்சியில் விக்ரமுடன் சேர்ந்து ஆனந்தராஜும், இன்னொரு கோட் சூட் ஆசாமியும் செய்யும் சேட்டைகளின்போது ரசிகர்களின் கேலிச் சிரிப்பும் போலிக் கைதட்டலும் சகிக்க முடியாத அந்தக் காட்சிகளுக்கான உடனடிப் பரிசு!.ஒரு பாடல் காட்சியில் சுற்றியிருப்பவர்கள் கத்த, விக்ரம் காதைப் பொத்திக்கொள்வார். நமக்கும் அப்படிச் செய்யத்தான் தோன்றுகிறது.படத்தை ஒரு முறை மட்டும் பார்த்தால் கதையைப் புரிந்துகொள்வது கடினம்தான்; அதற்காகத் தெரிந்தே மறுபடியும் கோப்ராவிடம் கடி வாங்க முடியுமா?.மொத்தத்தில்: கோப்ரா குழப்பிக் கொத்திக் குதறிவிடுகிறது!.அட்டையில் : ஸ்ரீநிதி ஷெட்டி