பகுதி – 11. -நளினி சம்பத்குமார்..ஓவியம்: வேதா.குருவாய் நின்ற அனுமன்.விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமாகுரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமாஅலை மீது அலையாக துயர் வந்து சேரும் போதுஅஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா.இந்தப் பாடலை பலரும் கேட்டிருப்போம்… கலியுகத்தில் பிரத்யட்சமாக நடமாடும் தெய்வமான நம் கண் முன்னே காட்சி தந்த குருவான காஞ்சிமஹா பெரியவாளை பற்றி வரும் பாடல் இது. அலை மீது அலையாக துயர் வந்து நம்மைத் தாக்கும்போது நமக்கு அஞ்சாதே என குரல் எழுப்புவதும் நம் குருதான். அபயக் கரம் கொடுப்பதும் நம் குருதான். மனப்பலத்தைத் தரக்கூடியவரும் குரு மட்டுமே. குரு பக்தி இல்லாத ஒருவனுக்கு எத்தனை தான் இறை பக்தி இருந்தாலும் அவ்வளவு எளிதாக இறைவனை அடைந்திட முடியாது. எளிமையான வழி, இனிமையான வழி குருவை சரணடைவதே..இறைவனே பல ரூபத்தில் வந்து சொன்ன வாக்கு என்பது, "ஒரு குரு முகமாக வந்து என்னைப் பற்று. குருவின் திருவடியைப் பற்று நான் உன்னைப் பற்றுகிறேன் என்பதே. குருவின் அருள் இல்லாமல் நேரிடையாக இறை அருள் என்பது கிடைக்காது. ராமாயணம் குருவின் பெருமையை அழகாக பறை சாற்றுகிறது. அதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திதான் பரமாத்மா. சீதா தேவி ஜீவாத்மா. குரு ரூபத்தில் வந்தது சாட்சாத் அனுமன். பிறவி பெருங்கடலில் நாம் சிக்குண்டு, சிறைப்பட்டு தவிப்பது போலவே, சீதா தேவியும் இலங்கையில் அசோக வனத்தில் சிறையில் இருக்கிறாள். அசோக வனத்திற்கும் நம் சரீரம் போலவே ஒன்பது வாசல்கள் இருக்குமாம். ஜீவாத்மா படும் துன்பங்களிலிருந்து அந்த ஜீவாத்மாவைக் காப்பாற்றி தம் பக்கம் சேர்த்துக்கொள்ள பரமாத்மாவே நேராக அசோக வனத்திற்கு வரவில்லையே! அங்கே குரு ரூபமாக குரு ஸ்தானத்தில் வந்தது வாயு புத்ர அனுமன் அன்றோ?.அந்தக் குரு ரூபத்தில், குருவின் ஸ்தானத்தில் வந்தவர்தானே பெருமானோடு அதாவது பரமாத்வோடு ஜீவாத்மாவான சீதையை சேர்க்கிறார்? அதே போலதான் சம்சார கடலில் மூழ்கி திளைக்கும் ஜீவாத்மாக்களாகிய நம்மைக் காப்பாற்ற பரமாத்மாவாகிய இறைவனே நேரில் வர மாட்டார். குருவைத்தான் அனுப்பி வைப்பார் என்பதையும் அந்தக் குருவே நமக்குப் பகவானைக் காட்டிக் கொடுப்பார் என்பதையும் ராமாயணத்தில் காட்டிக் கொடுத்திருக்கிறார் ஆஞ்சனேயர். அனுமன் எப்படி இலங்கையை எரித்தாரோ அப்படித்தான் குரு என்பவர் நாம் செய்த பாவங்களை எல்லாம் எரிக்கிறார். ஆஞ்சனேயர் எப்படி சீதா பிராட்டியை ராமரோடு சேர்த்து வைத்தாரோ அப்படித்தான் குருவானவர் ஜீவாத்மாக்களாகிய நம்மைப் பரமாத்மாவான இறைவனோடு சேர்த்து வைக்கிறார். ராமாயணத்தை ஆசார்ய வைபவம் என்று பல பெரியோர்கள் குறிப்பிடுவர்..ராமாயணத்தில் குரு ஸ்தானத்தில் இருந்து ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குப் போதித்த ஹனுமார், தன்னைக் குருவென கொண்டாடிய ஒரு மலையை, க்ருஷ்ண பரமாத்மாவைக் கொண்டே கொண்டாட வைத்தக் கதையும் புராணத்தில் உண்டு. மலைகளிலேயே "கிரி ராஜ்" அதாவது மலைகளுக்கெல்லாம் ராஜா என பெயர் தாங்கி நிற்கும் கோவர்த்தன கிரி மலையை, கண்ணன் தம் சுண்டு விரலால் தலைக்கு மேல் தாங்கி பிடித்தற்கு முக்கியமான காரணமே அந்த மலை காட்டிய குரு பக்திதான். ஆம். ராமாயணக் காலத்தில், ராமர் பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அனுமன் பாரின் பல மூலைகளிலிருந்தும் மலைகளைக் கொண்டுவந்து கடல் நடுவே போட உதவினார். அப்படி அவர் சுமந்து வந்த மலைகளில் ஒரு மலைதான் கோவர்த்தன மலை. ராம தூதன் அந்த மலையை தன் கையில் ஏந்தியபோது அந்த மலை மாருதியிடம் கேட்டதாம், "ராம தூதா எனக்கு ராம தரிசனம் கிடைக்குமா?" என்று. "ராம தரிசனம் மட்டுமல்ல ராம ஸ்பரிசமும் உனக்கு நிச்சயம் உண்டு" என அனுமன் அந்த மலையைப் பார்த்துச் சொல்ல, அனுமனின் வாக்கை குரு வாக்காகக் கொண்டு 'ஆஹா ராமரை பார்க்க போகிறோம்' என்ற பூரிப்பில் இருந்த அந்த மலை, 'குருவன்றோ பெருமாளை காட்டிக் கொடுப்பார்? ஆக, நம்மை ராமரிடம் கொண்டுபோய் சேர்க்கப் போகும் இந்த ஆஞ்சனேயரே தன் குரு' என எண்ணிக்கொண்டதாம்..அனுமன் கோவர்த்தன மலையை ஏந்திய சிறிது நேரத்திற்கெல்லாம் ராமரிடமிருந்து மானசீகமாக, ஒரு செய்தி வந்தது, "வானர வீரனே… கடலில் பாலம் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது. இனி, பாலம் கட்ட மலைகள் தேவையில்லை. எந்தெந்த மலைகளை நீ எடுத்தாயோ அவற்றை எல்லாம் அங்கேயே விட்டு விட்டு வா" என்றே சொன்னது அந்தச் செய்தி. ராம தரிசனம் கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு காத்திருக்கும் இந்தக் கோவர்த்தன மலையிடம் என்ன சொல்வது என யோசித்த அனுமன்,"கோவர்த்தனா, என் பிரபு ராமர் மலைகளை அப்படியே விட்டுவிட்டு வரும்படி கட்டளை இட்டுவிட்டார். அதனால், நான் உன்னை இங்கேயே விட்டுச் செல்கிறேன். ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். ராம தரிசனம் உனக்குக் கிடைக்கும் என்று சொன்ன என் வாக்கு பொய்யாகாது. ராமர் சத்ய சீலர். அவர் பொருட்டு தரும் வாக்கு பொய்க்காது. உன் ஆசையை நான் அப்போதே ராமரிடம் மானசீகமாகத் தெரிவித்துவிட்டேன். என் பிரபு நிச்சயம் இந்த அவதாரத்திலோ அல்லது அவரது அடுத்த அவதாரத்திலோ உனக்கு நிச்சயம் தரிசனத்தைக் காட்டியே தீருவார்" என்று சொல்லி அந்த மலையைச் சமாதானப் படுத்தினார் அனுமன்..யுகங்கள் ஆகியும் காத்திருந்தது கோவர்த்தன மலை. 'நான் குருவாய் பூஜிக்கும் அனுமன் எனக்கு வாக்களித்திருக்கிறார். குருவின் வாக்கில் முழு விச்வாசம் கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நிச்சயம் பெருமாளின் தரிசனம் தனக்குக் கிடைக்கும்' என அசையாமல் அப்படியே காத்திருந்தது கோவர்த்தன மலை..பெருமாளை காண வேண்டும் என்ற ஒரே சிந்தையில் தவமிருப்பதுபோல காத்திருந்த அந்த கோவர்த்தன கிரியின் இடத்திற்கு தன் அடுத்த அவதாரமான க்ருஷ்ண அவதாரத்தில் வந்தேவிட்டார் க்ருஷ்ணன். 'குருவின் வாக்கை மலையாய் நம்பிக் காத்திருக்கும் மலையே இந்த அவதாரத்தில் எனக்கு மிகவும் ப்ரியமானவன் நீயே' என்று எண்ணிய க்ருஷ்ணன் அதிகம் விளையாடியது, இளைப்பாறியது எல்லாம் கோவர்த்தன மலை மீதுதான். குரு மீது பக்திகொண்ட மலையை தன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று எண்ணியே இந்திரனை அதிக மழை பொழிய செய்து இந்தக் கோவர்த்தன மலையை தன் தலை மீது தூக்கிப் பிடித்து அதைக் குடையாய் தாங்கினான் கண்ணன். குரு பக்தி செய்வோரையும், குரு வாக்கில் நம்பிக்கை கொண்டோரையும் நான் கை விடவே மாட்டேன் என்றல்லவா காட்டிக் கொடுத்திருக்கிறார் க்ருஷ்ணர்? பகவானின் அருளை, கருணையை அவன் ப்ரியத்தைச் சம்பாதிக்க நாம் முதலில் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது குருவின் அருளை அன்றோ… குருவின் க்ருபையை அன்றோ? திருவின் அருளைப் பெற குருவின் அருளைத் தேடி நாடி பெறுவோம்..குரு அருள் திரு அருள் வளரும்…
பகுதி – 11. -நளினி சம்பத்குமார்..ஓவியம்: வேதா.குருவாய் நின்ற அனுமன்.விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமாகுரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமாஅலை மீது அலையாக துயர் வந்து சேரும் போதுஅஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா.இந்தப் பாடலை பலரும் கேட்டிருப்போம்… கலியுகத்தில் பிரத்யட்சமாக நடமாடும் தெய்வமான நம் கண் முன்னே காட்சி தந்த குருவான காஞ்சிமஹா பெரியவாளை பற்றி வரும் பாடல் இது. அலை மீது அலையாக துயர் வந்து நம்மைத் தாக்கும்போது நமக்கு அஞ்சாதே என குரல் எழுப்புவதும் நம் குருதான். அபயக் கரம் கொடுப்பதும் நம் குருதான். மனப்பலத்தைத் தரக்கூடியவரும் குரு மட்டுமே. குரு பக்தி இல்லாத ஒருவனுக்கு எத்தனை தான் இறை பக்தி இருந்தாலும் அவ்வளவு எளிதாக இறைவனை அடைந்திட முடியாது. எளிமையான வழி, இனிமையான வழி குருவை சரணடைவதே..இறைவனே பல ரூபத்தில் வந்து சொன்ன வாக்கு என்பது, "ஒரு குரு முகமாக வந்து என்னைப் பற்று. குருவின் திருவடியைப் பற்று நான் உன்னைப் பற்றுகிறேன் என்பதே. குருவின் அருள் இல்லாமல் நேரிடையாக இறை அருள் என்பது கிடைக்காது. ராமாயணம் குருவின் பெருமையை அழகாக பறை சாற்றுகிறது. அதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திதான் பரமாத்மா. சீதா தேவி ஜீவாத்மா. குரு ரூபத்தில் வந்தது சாட்சாத் அனுமன். பிறவி பெருங்கடலில் நாம் சிக்குண்டு, சிறைப்பட்டு தவிப்பது போலவே, சீதா தேவியும் இலங்கையில் அசோக வனத்தில் சிறையில் இருக்கிறாள். அசோக வனத்திற்கும் நம் சரீரம் போலவே ஒன்பது வாசல்கள் இருக்குமாம். ஜீவாத்மா படும் துன்பங்களிலிருந்து அந்த ஜீவாத்மாவைக் காப்பாற்றி தம் பக்கம் சேர்த்துக்கொள்ள பரமாத்மாவே நேராக அசோக வனத்திற்கு வரவில்லையே! அங்கே குரு ரூபமாக குரு ஸ்தானத்தில் வந்தது வாயு புத்ர அனுமன் அன்றோ?.அந்தக் குரு ரூபத்தில், குருவின் ஸ்தானத்தில் வந்தவர்தானே பெருமானோடு அதாவது பரமாத்வோடு ஜீவாத்மாவான சீதையை சேர்க்கிறார்? அதே போலதான் சம்சார கடலில் மூழ்கி திளைக்கும் ஜீவாத்மாக்களாகிய நம்மைக் காப்பாற்ற பரமாத்மாவாகிய இறைவனே நேரில் வர மாட்டார். குருவைத்தான் அனுப்பி வைப்பார் என்பதையும் அந்தக் குருவே நமக்குப் பகவானைக் காட்டிக் கொடுப்பார் என்பதையும் ராமாயணத்தில் காட்டிக் கொடுத்திருக்கிறார் ஆஞ்சனேயர். அனுமன் எப்படி இலங்கையை எரித்தாரோ அப்படித்தான் குரு என்பவர் நாம் செய்த பாவங்களை எல்லாம் எரிக்கிறார். ஆஞ்சனேயர் எப்படி சீதா பிராட்டியை ராமரோடு சேர்த்து வைத்தாரோ அப்படித்தான் குருவானவர் ஜீவாத்மாக்களாகிய நம்மைப் பரமாத்மாவான இறைவனோடு சேர்த்து வைக்கிறார். ராமாயணத்தை ஆசார்ய வைபவம் என்று பல பெரியோர்கள் குறிப்பிடுவர்..ராமாயணத்தில் குரு ஸ்தானத்தில் இருந்து ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குப் போதித்த ஹனுமார், தன்னைக் குருவென கொண்டாடிய ஒரு மலையை, க்ருஷ்ண பரமாத்மாவைக் கொண்டே கொண்டாட வைத்தக் கதையும் புராணத்தில் உண்டு. மலைகளிலேயே "கிரி ராஜ்" அதாவது மலைகளுக்கெல்லாம் ராஜா என பெயர் தாங்கி நிற்கும் கோவர்த்தன கிரி மலையை, கண்ணன் தம் சுண்டு விரலால் தலைக்கு மேல் தாங்கி பிடித்தற்கு முக்கியமான காரணமே அந்த மலை காட்டிய குரு பக்திதான். ஆம். ராமாயணக் காலத்தில், ராமர் பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அனுமன் பாரின் பல மூலைகளிலிருந்தும் மலைகளைக் கொண்டுவந்து கடல் நடுவே போட உதவினார். அப்படி அவர் சுமந்து வந்த மலைகளில் ஒரு மலைதான் கோவர்த்தன மலை. ராம தூதன் அந்த மலையை தன் கையில் ஏந்தியபோது அந்த மலை மாருதியிடம் கேட்டதாம், "ராம தூதா எனக்கு ராம தரிசனம் கிடைக்குமா?" என்று. "ராம தரிசனம் மட்டுமல்ல ராம ஸ்பரிசமும் உனக்கு நிச்சயம் உண்டு" என அனுமன் அந்த மலையைப் பார்த்துச் சொல்ல, அனுமனின் வாக்கை குரு வாக்காகக் கொண்டு 'ஆஹா ராமரை பார்க்க போகிறோம்' என்ற பூரிப்பில் இருந்த அந்த மலை, 'குருவன்றோ பெருமாளை காட்டிக் கொடுப்பார்? ஆக, நம்மை ராமரிடம் கொண்டுபோய் சேர்க்கப் போகும் இந்த ஆஞ்சனேயரே தன் குரு' என எண்ணிக்கொண்டதாம்..அனுமன் கோவர்த்தன மலையை ஏந்திய சிறிது நேரத்திற்கெல்லாம் ராமரிடமிருந்து மானசீகமாக, ஒரு செய்தி வந்தது, "வானர வீரனே… கடலில் பாலம் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது. இனி, பாலம் கட்ட மலைகள் தேவையில்லை. எந்தெந்த மலைகளை நீ எடுத்தாயோ அவற்றை எல்லாம் அங்கேயே விட்டு விட்டு வா" என்றே சொன்னது அந்தச் செய்தி. ராம தரிசனம் கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு காத்திருக்கும் இந்தக் கோவர்த்தன மலையிடம் என்ன சொல்வது என யோசித்த அனுமன்,"கோவர்த்தனா, என் பிரபு ராமர் மலைகளை அப்படியே விட்டுவிட்டு வரும்படி கட்டளை இட்டுவிட்டார். அதனால், நான் உன்னை இங்கேயே விட்டுச் செல்கிறேன். ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். ராம தரிசனம் உனக்குக் கிடைக்கும் என்று சொன்ன என் வாக்கு பொய்யாகாது. ராமர் சத்ய சீலர். அவர் பொருட்டு தரும் வாக்கு பொய்க்காது. உன் ஆசையை நான் அப்போதே ராமரிடம் மானசீகமாகத் தெரிவித்துவிட்டேன். என் பிரபு நிச்சயம் இந்த அவதாரத்திலோ அல்லது அவரது அடுத்த அவதாரத்திலோ உனக்கு நிச்சயம் தரிசனத்தைக் காட்டியே தீருவார்" என்று சொல்லி அந்த மலையைச் சமாதானப் படுத்தினார் அனுமன்..யுகங்கள் ஆகியும் காத்திருந்தது கோவர்த்தன மலை. 'நான் குருவாய் பூஜிக்கும் அனுமன் எனக்கு வாக்களித்திருக்கிறார். குருவின் வாக்கில் முழு விச்வாசம் கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நிச்சயம் பெருமாளின் தரிசனம் தனக்குக் கிடைக்கும்' என அசையாமல் அப்படியே காத்திருந்தது கோவர்த்தன மலை..பெருமாளை காண வேண்டும் என்ற ஒரே சிந்தையில் தவமிருப்பதுபோல காத்திருந்த அந்த கோவர்த்தன கிரியின் இடத்திற்கு தன் அடுத்த அவதாரமான க்ருஷ்ண அவதாரத்தில் வந்தேவிட்டார் க்ருஷ்ணன். 'குருவின் வாக்கை மலையாய் நம்பிக் காத்திருக்கும் மலையே இந்த அவதாரத்தில் எனக்கு மிகவும் ப்ரியமானவன் நீயே' என்று எண்ணிய க்ருஷ்ணன் அதிகம் விளையாடியது, இளைப்பாறியது எல்லாம் கோவர்த்தன மலை மீதுதான். குரு மீது பக்திகொண்ட மலையை தன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று எண்ணியே இந்திரனை அதிக மழை பொழிய செய்து இந்தக் கோவர்த்தன மலையை தன் தலை மீது தூக்கிப் பிடித்து அதைக் குடையாய் தாங்கினான் கண்ணன். குரு பக்தி செய்வோரையும், குரு வாக்கில் நம்பிக்கை கொண்டோரையும் நான் கை விடவே மாட்டேன் என்றல்லவா காட்டிக் கொடுத்திருக்கிறார் க்ருஷ்ணர்? பகவானின் அருளை, கருணையை அவன் ப்ரியத்தைச் சம்பாதிக்க நாம் முதலில் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது குருவின் அருளை அன்றோ… குருவின் க்ருபையை அன்றோ? திருவின் அருளைப் பெற குருவின் அருளைத் தேடி நாடி பெறுவோம்..குரு அருள் திரு அருள் வளரும்…