பகுதி – 7. -நளினி சம்பத்குமார் ஓவியம்: வேதா. மோட்சம் அருளிய குருவின் ஓலை!.திருவருள் பெற என்ன செய்யவேண்டும்? குருவின் அருளை பெறவேண்டும். வெளி நாடுகளுக்கு போகவேண்டுமென்றால் எப்படி பாஸ்போர்ட், விசா முதலியவை அதி முக்கியமோ அதைப்போலதான் இறைவனின் அருள் பெற குருவின் அருள் ரொம்ப ரொம்ப முக்கியம். குருவை நாட என்னிடம் எந்தத் தகுதியும் இல்லையே… அவரை எப்படி அணுக வேண்டும்? அவரிடம் எப்படி சரண் அடைய வேண்டும்? என்றுகூட எனக்குத் தெரியாதே.. திரும்பத் திரும்ப பல தவறுகளைச் செய்த என்னை குரு (மஹான், ஆசார்யன்) ஏற்றுக்கொள்வாரா? போன்ற சந்தேகங்கள் நமக்குள் எழுவது சகஜமே. அப்படி சந்தேகம் வரும்போதெல்லாம், மதுரகவியாழ்வார் மதுரமாய் அருளிய 'கண்ணி நுண் சிறுதாம்பு' எனும் பிரபந்தத்தில் வரும் இரண்டே இரண்டு வரிகளை மட்டும் நம் மனதில் நிறுத்திக்கொள்வோம்..அந்த வரிகள்:.''பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்செயல்நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்" .ஆம். அதுவல்லவோ குருவின் மேன்மை. நம்மால் நம் குருவுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தும்கூட நம்மைத் திருத்தி பணி கொண்டு, நம்மை இறைவனுக்குப் பிடித்தாற் போல மாற்றி விடுவார் குரு. நாம் என்று குருவிடம் சரண் அடைகிறோமோ அன்றிலிருந்து புதுப்பிக்கப்பட்டவர்களாக மாறி விடுகிறோம் என்பதுதான் உண்மை..கல்யாணத்திற்கு தயாராகும் பெண்ணிற்கு எந்தவிதமாக ப்யூட்டி ட்ரீட்மெண்ட்ஸ்களைக் கொடுத்து அவளை அப்ஸரஸாக அவளது திருமண நாள் அன்று மேடையில் ஜொலிக்க வைக்கவேண்டும் என்பது ப்யூட்டி பார்லரில் இருக்கும் ப்யூட்டிஷியன்ஸ்களுக்கு நன்றாகத் தெரியுமே. ப்யூட்டி பார்லருக்கு போக வேண்டியது மட்டும்தான் அந்தத் திருமணப் பெண்ணின் ட்யூட்டி. அப்படித்தான் ஒரு நல்ல குருவை நாடி நம்மை ஒப்படைத்துவிட்டால் போதும். நம் இயல்பு இதுதான் என்பதை நம்மை பார்த்த நொடியிலேயே புரிந்துகொண்டு, தெளிந்துகொண்டு திருவருள் நம் மீது பட நம்மை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றி விடுவார் குரு. அதுதானே குரு அருளின் சிறப்பு?.ஜகத்துக்கெல்லாம் ஆசார்யரான ஸ்ரீ இராமானுஜர் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் குருவருள் நிச்சயம் திருவருளை பெற்று தரும் என்பதை நிரூபித்திருக்கிறது..ஸ்ரீ இராமானுஜர் கீழ் திருப்பதியில், கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்த சமயம் தம் சிஷ்யர்களுடன் அங்கு தங்கி இருந்தார். அப்போது தும்பையூர் கொண்டி என்ற பெயர் கொண்ட ஒரு தயிர் விற்கும் பெண்மணி, இராமானுஜரின் சீடர்களுக்கும் அவர் தங்கியிருந்த மடத்திற்கும் தினமும் தயிர் கொண்டு வந்து தந்தாள். தினம் தினம் ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கும் பாடங்கள், அவள் காதில் விழும். அந்த பாடங்களுக்கான முழுமையான அர்த்தம் என்பது அவளுக்குப் புரிந்து கொள்ள இயலாது. படித்து ஞானம் பெற்றவள் அல்ல அவள். ஆனால் யாரைப் பிடித்தால், யாரின் திருவடியைப் பிடித்துக்கொண்டால் மோட்சம் கிட்டும் என்ற மஹா ஞானத்தைப் பெற்ற கெட்டிக்கார தயிர்காரி அவள்..சரியாக ஒரு மாத காலம் அவள் அங்கே தயிர் கொடுத்து வந்தாள். இராமானுஜர் அந்த இடத்தை விட்டு வேறு இடம் செல்லும் காலம் வரவே அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, 'எல்லா கணக்கு வழக்குகள், பாக்கிகள் ஆகியவற்றை சரி செய்துவிட்டு கிளம்பத் தயாராகுங்கள்' என்றார். சிஷ்யர்களும் தயிர்காரியை அழைத்து, ஒரு மாத காலம் தங்களுக்கு தயிர் கொடுத்ததற்கு எவ்வளவு பணம் தர வேண்டுமென கேட்டார்கள். அதற்கு அந்த தயிர்காரி, 'எனக்கு காசு பணம் எதுவும் வேண்டாம். மோட்சம்தான் வேண்டும். அதோ மலை மேல் நிற்கிறாரே அந்த சீனிவாச பெருமாள் அவரிடம் எனக்கு மோட்சம் தரச்சொல்லி ஒரு ஓலையை எனக்காக எழுதி தர உங்கள் குருவிடம் சொல்லுங்கள்' என கேட்டாள். இதை அப்படியே அந்தச் சிஷ்யர்களும் இராமானுஜரிடத்தில் சொல்ல, அவர் தயிர்காரியை உள்ளே அழைத்தார். ஆசார்யன் வழி மொழிந்தால்தான் திருமால் மோட்சம் தருவார் என்று இந்த தயிர்காரிக்கு யார் சொல்லி தந்தார்கள்? என்று சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு..தயங்கி தயங்கி வந்த தயிர்காரியிடம், 'நான் ஓலை எழுதி கொடுத்தால் உனக்கு மோட்சம் கிடைக்கும் என யாரம்மா சொன்னது?' என கனிவாக கேட்டார் இராமானுஜர். அதற்கு அந்த தயிர்காரி "நான் பெரிய படிப் பெல்லாம் எதுவும் படிக்கலீங்க. ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரியும் சாமி. குருவான நீங்க சொன்னா அந்த சாமி செஞ்சு கொடுத்துடுவார். அதனால எனக்கு மோட்சம் தர சொல்லி அந்த வேங்கடமுடையானுக்கு நீங்க ஒரு ஓலை எழுதி கொடுங்கள். பணம் காசு இதெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி. தயிர் வித்தா பணம், காசு இதெல்லாம் யார் வேணாலும் கொடுத்துடுவாங்க. ஆனா இந்த ஜீவனுக்கு யார் சாமீ மோட்சம் தர முடியும்? இந்த ஜீவனுக்கு மோட்சம் கொடுன்னு அந்த பெருமாள்கிட்ட யாரு சாமீ சொல்லமுடியும். சொல்லுங்க. உங்களால மட்டும்தான் முடியும். நீங்க ஓலை எழுதி கொடுத்துட்டா போதும். அதோ மலை மேல நிக்கற சாமி.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம இந்த ஏழைக்கு மோட்சம் கொடுத்துடும். சாஸ்திரம் சம்ப்ரதாயம் இதெல்லாம் எதுவும் எனக்கு தெரியாது சாமீ. பக்தி புத்தகம்லாம் எதுவுமே படிச்சதில்ல நானு. படிக்கவும் தெரியாது. ஏதோ வாழ்க்கைய ஓட்ட தயிர் மோர் விற்கறேன் சாமீ. அம்புட்டுதான். போனா போகுதுன்னு கருணை புரிஞ்சு ஒரு ஓலை மட்டும் எழுதி கொடுங்க சாமி" என கேட்க, கருணையே உருவான இராமானுஜர், அவளின் அந்த மஹா விச்வாசத்தை பார்த்து வியப்படைந்து திருவேங்கடமுடையானுக்கு ஒரு ஓலையை எழுதி அனுப்பினார். 'இந்த தயிர்காரிக்கு தயவு கூர்ந்து மோட்சம் அருள வேண்டும்' என்ற எழுத்துக்களை தாங்கிய மேன்மையான ஓலை அது..கையில் ஓலையோடு திருமலைக்கு சந்தோஷமாகச் சென்ற தும்பையூர் கொண்டிக்கு திருமலையிலேயே மோட்சத்தையும் கொடுத்தருளினார் மலையப்பர். தும்பையூர் கொண்டி கொண்டு வந்தது மிக பெரிய இடத்து சிபாரிசு கடிதம் அல்லவா? பெருமதிப்பு வாய்ந்த சிறப்பான அந்த சிபாரிசை ஏற்றுக்கொள்ளாமால் போய் விடுவாரா என்ன ஏழுமலையான்? நாம் ஏழையா பணக்காரரா, படித்தவரா, படிக்காதவரா, தான தர்மம் பல செய்தவரா, இல்லையா என்றெல்லாம் பார்த்து மோட்சம் தருவதில்லை இறைவன். குருமுகமாக நம்மை அடைய முற்படுகிறானா? ஒரு மகானின் திருவடியை நினைத்துகொண்டிருக்கிறானா? அப்படி அவன் சிந்தையிலும் செயலிலும் ஒரு குரு நிறைந்திருந்தார் என்றால். அவனை புண்ணியம் செய்ய மட்டுமே அந்தக் குரு வழி நடத்துவார் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றாக தெரியும். நம்மை காக்க வேண்டும் நமக்கு நற்கதி அருள வேண்டும் என்று இறைவன் நினைக்கும் போதெல்லாம் நமக்கு ஒரு நற்குருவை காட்டி கொடுத்துவிடுவார். இறை அருள் என்பது கிடைப்பது குரு அருளால்தானே? இறை அருள் இருந்தால்தான் குரு அருள் கிடைக்கும். குரு அருள் இருந்தால்தான் இறை அருள் கிடைக்கும்..நமக்கு இறைவன் இடத்தில் சொல்ல எத்தனை எத்தனையோ கோரிக்கைகள் இருக்கும். அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல குருவின் திருவடியை நாடுவோம். குருவின் வழியாய், குருவின் மொழியால் நம் கோரிக்கைகளைக் கேட்டு, அதனை ஏற்று அருள் புரிவார் கடவுள்.
பகுதி – 7. -நளினி சம்பத்குமார் ஓவியம்: வேதா. மோட்சம் அருளிய குருவின் ஓலை!.திருவருள் பெற என்ன செய்யவேண்டும்? குருவின் அருளை பெறவேண்டும். வெளி நாடுகளுக்கு போகவேண்டுமென்றால் எப்படி பாஸ்போர்ட், விசா முதலியவை அதி முக்கியமோ அதைப்போலதான் இறைவனின் அருள் பெற குருவின் அருள் ரொம்ப ரொம்ப முக்கியம். குருவை நாட என்னிடம் எந்தத் தகுதியும் இல்லையே… அவரை எப்படி அணுக வேண்டும்? அவரிடம் எப்படி சரண் அடைய வேண்டும்? என்றுகூட எனக்குத் தெரியாதே.. திரும்பத் திரும்ப பல தவறுகளைச் செய்த என்னை குரு (மஹான், ஆசார்யன்) ஏற்றுக்கொள்வாரா? போன்ற சந்தேகங்கள் நமக்குள் எழுவது சகஜமே. அப்படி சந்தேகம் வரும்போதெல்லாம், மதுரகவியாழ்வார் மதுரமாய் அருளிய 'கண்ணி நுண் சிறுதாம்பு' எனும் பிரபந்தத்தில் வரும் இரண்டே இரண்டு வரிகளை மட்டும் நம் மனதில் நிறுத்திக்கொள்வோம்..அந்த வரிகள்:.''பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்செயல்நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்" .ஆம். அதுவல்லவோ குருவின் மேன்மை. நம்மால் நம் குருவுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தும்கூட நம்மைத் திருத்தி பணி கொண்டு, நம்மை இறைவனுக்குப் பிடித்தாற் போல மாற்றி விடுவார் குரு. நாம் என்று குருவிடம் சரண் அடைகிறோமோ அன்றிலிருந்து புதுப்பிக்கப்பட்டவர்களாக மாறி விடுகிறோம் என்பதுதான் உண்மை..கல்யாணத்திற்கு தயாராகும் பெண்ணிற்கு எந்தவிதமாக ப்யூட்டி ட்ரீட்மெண்ட்ஸ்களைக் கொடுத்து அவளை அப்ஸரஸாக அவளது திருமண நாள் அன்று மேடையில் ஜொலிக்க வைக்கவேண்டும் என்பது ப்யூட்டி பார்லரில் இருக்கும் ப்யூட்டிஷியன்ஸ்களுக்கு நன்றாகத் தெரியுமே. ப்யூட்டி பார்லருக்கு போக வேண்டியது மட்டும்தான் அந்தத் திருமணப் பெண்ணின் ட்யூட்டி. அப்படித்தான் ஒரு நல்ல குருவை நாடி நம்மை ஒப்படைத்துவிட்டால் போதும். நம் இயல்பு இதுதான் என்பதை நம்மை பார்த்த நொடியிலேயே புரிந்துகொண்டு, தெளிந்துகொண்டு திருவருள் நம் மீது பட நம்மை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றி விடுவார் குரு. அதுதானே குரு அருளின் சிறப்பு?.ஜகத்துக்கெல்லாம் ஆசார்யரான ஸ்ரீ இராமானுஜர் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் குருவருள் நிச்சயம் திருவருளை பெற்று தரும் என்பதை நிரூபித்திருக்கிறது..ஸ்ரீ இராமானுஜர் கீழ் திருப்பதியில், கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்த சமயம் தம் சிஷ்யர்களுடன் அங்கு தங்கி இருந்தார். அப்போது தும்பையூர் கொண்டி என்ற பெயர் கொண்ட ஒரு தயிர் விற்கும் பெண்மணி, இராமானுஜரின் சீடர்களுக்கும் அவர் தங்கியிருந்த மடத்திற்கும் தினமும் தயிர் கொண்டு வந்து தந்தாள். தினம் தினம் ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கும் பாடங்கள், அவள் காதில் விழும். அந்த பாடங்களுக்கான முழுமையான அர்த்தம் என்பது அவளுக்குப் புரிந்து கொள்ள இயலாது. படித்து ஞானம் பெற்றவள் அல்ல அவள். ஆனால் யாரைப் பிடித்தால், யாரின் திருவடியைப் பிடித்துக்கொண்டால் மோட்சம் கிட்டும் என்ற மஹா ஞானத்தைப் பெற்ற கெட்டிக்கார தயிர்காரி அவள்..சரியாக ஒரு மாத காலம் அவள் அங்கே தயிர் கொடுத்து வந்தாள். இராமானுஜர் அந்த இடத்தை விட்டு வேறு இடம் செல்லும் காலம் வரவே அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, 'எல்லா கணக்கு வழக்குகள், பாக்கிகள் ஆகியவற்றை சரி செய்துவிட்டு கிளம்பத் தயாராகுங்கள்' என்றார். சிஷ்யர்களும் தயிர்காரியை அழைத்து, ஒரு மாத காலம் தங்களுக்கு தயிர் கொடுத்ததற்கு எவ்வளவு பணம் தர வேண்டுமென கேட்டார்கள். அதற்கு அந்த தயிர்காரி, 'எனக்கு காசு பணம் எதுவும் வேண்டாம். மோட்சம்தான் வேண்டும். அதோ மலை மேல் நிற்கிறாரே அந்த சீனிவாச பெருமாள் அவரிடம் எனக்கு மோட்சம் தரச்சொல்லி ஒரு ஓலையை எனக்காக எழுதி தர உங்கள் குருவிடம் சொல்லுங்கள்' என கேட்டாள். இதை அப்படியே அந்தச் சிஷ்யர்களும் இராமானுஜரிடத்தில் சொல்ல, அவர் தயிர்காரியை உள்ளே அழைத்தார். ஆசார்யன் வழி மொழிந்தால்தான் திருமால் மோட்சம் தருவார் என்று இந்த தயிர்காரிக்கு யார் சொல்லி தந்தார்கள்? என்று சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு..தயங்கி தயங்கி வந்த தயிர்காரியிடம், 'நான் ஓலை எழுதி கொடுத்தால் உனக்கு மோட்சம் கிடைக்கும் என யாரம்மா சொன்னது?' என கனிவாக கேட்டார் இராமானுஜர். அதற்கு அந்த தயிர்காரி "நான் பெரிய படிப் பெல்லாம் எதுவும் படிக்கலீங்க. ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரியும் சாமி. குருவான நீங்க சொன்னா அந்த சாமி செஞ்சு கொடுத்துடுவார். அதனால எனக்கு மோட்சம் தர சொல்லி அந்த வேங்கடமுடையானுக்கு நீங்க ஒரு ஓலை எழுதி கொடுங்கள். பணம் காசு இதெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி. தயிர் வித்தா பணம், காசு இதெல்லாம் யார் வேணாலும் கொடுத்துடுவாங்க. ஆனா இந்த ஜீவனுக்கு யார் சாமீ மோட்சம் தர முடியும்? இந்த ஜீவனுக்கு மோட்சம் கொடுன்னு அந்த பெருமாள்கிட்ட யாரு சாமீ சொல்லமுடியும். சொல்லுங்க. உங்களால மட்டும்தான் முடியும். நீங்க ஓலை எழுதி கொடுத்துட்டா போதும். அதோ மலை மேல நிக்கற சாமி.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம இந்த ஏழைக்கு மோட்சம் கொடுத்துடும். சாஸ்திரம் சம்ப்ரதாயம் இதெல்லாம் எதுவும் எனக்கு தெரியாது சாமீ. பக்தி புத்தகம்லாம் எதுவுமே படிச்சதில்ல நானு. படிக்கவும் தெரியாது. ஏதோ வாழ்க்கைய ஓட்ட தயிர் மோர் விற்கறேன் சாமீ. அம்புட்டுதான். போனா போகுதுன்னு கருணை புரிஞ்சு ஒரு ஓலை மட்டும் எழுதி கொடுங்க சாமி" என கேட்க, கருணையே உருவான இராமானுஜர், அவளின் அந்த மஹா விச்வாசத்தை பார்த்து வியப்படைந்து திருவேங்கடமுடையானுக்கு ஒரு ஓலையை எழுதி அனுப்பினார். 'இந்த தயிர்காரிக்கு தயவு கூர்ந்து மோட்சம் அருள வேண்டும்' என்ற எழுத்துக்களை தாங்கிய மேன்மையான ஓலை அது..கையில் ஓலையோடு திருமலைக்கு சந்தோஷமாகச் சென்ற தும்பையூர் கொண்டிக்கு திருமலையிலேயே மோட்சத்தையும் கொடுத்தருளினார் மலையப்பர். தும்பையூர் கொண்டி கொண்டு வந்தது மிக பெரிய இடத்து சிபாரிசு கடிதம் அல்லவா? பெருமதிப்பு வாய்ந்த சிறப்பான அந்த சிபாரிசை ஏற்றுக்கொள்ளாமால் போய் விடுவாரா என்ன ஏழுமலையான்? நாம் ஏழையா பணக்காரரா, படித்தவரா, படிக்காதவரா, தான தர்மம் பல செய்தவரா, இல்லையா என்றெல்லாம் பார்த்து மோட்சம் தருவதில்லை இறைவன். குருமுகமாக நம்மை அடைய முற்படுகிறானா? ஒரு மகானின் திருவடியை நினைத்துகொண்டிருக்கிறானா? அப்படி அவன் சிந்தையிலும் செயலிலும் ஒரு குரு நிறைந்திருந்தார் என்றால். அவனை புண்ணியம் செய்ய மட்டுமே அந்தக் குரு வழி நடத்துவார் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றாக தெரியும். நம்மை காக்க வேண்டும் நமக்கு நற்கதி அருள வேண்டும் என்று இறைவன் நினைக்கும் போதெல்லாம் நமக்கு ஒரு நற்குருவை காட்டி கொடுத்துவிடுவார். இறை அருள் என்பது கிடைப்பது குரு அருளால்தானே? இறை அருள் இருந்தால்தான் குரு அருள் கிடைக்கும். குரு அருள் இருந்தால்தான் இறை அருள் கிடைக்கும்..நமக்கு இறைவன் இடத்தில் சொல்ல எத்தனை எத்தனையோ கோரிக்கைகள் இருக்கும். அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல குருவின் திருவடியை நாடுவோம். குருவின் வழியாய், குருவின் மொழியால் நம் கோரிக்கைகளைக் கேட்டு, அதனை ஏற்று அருள் புரிவார் கடவுள்.