திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா!

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது . அந்த விழாவில் பக்தர்களால் கொண்டுவரப்பட்ட டன் கணக்கில் குவிந்த வண்ண மலர்களை வெக்காளியம்மனுக்கு சாத்தி வழிபாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்துவருகின்றனர்.

பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் ஊழியர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருச்சி உறையூரில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆலயத்தில் மக்களின் குறைதீர்க்கும் விதமாக அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள் யாவும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. அதேநேரம் அம்மனுக்கு சாத்தப்பட்ட பூக்கள் யாவும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

logo
Kalki Online
kalkionline.com