ஸ்ரீராமரின் காலடி பதித்த புண்ணியத் தலங்கள்!

Holy places where Sri Rama's feet were planted
Holy places where Sri Rama's feet were plantedhttps://sudesitamil.com

னிதர்களின் வாழ்வியலை உணர்த்திய ஒப்பற்ற அவதாரம் ஸ்ரீராமரின் அவதாரம். பாரதமே ராமாயணத்தின் களம் என்பதால் ராமரின் பாதங்கள் பட்ட அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும் அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால்நடையாகவே யாத்திரை புரிந்தவர் ஸ்ரீராமர். அவரது திருப்பாதத் தடங்கள் பதிந்த சில தலங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அயோத்தி: ராம ஜன்ம பூமி என்ற இந்த இடம்தான் ஸ்ரீராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும் 14 ஆண்டு கால வனவாசத்திற்கு பிறகு அவர் அரசாட்சி செய்ததும் இங்குதான். கம்பர், துளசிதாசர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ஸ்ரீராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.

2. பக்சர்: சித்தாஸ்ரமம், வேத சித்ரா, வேத கர்ப்பமா கிருஷ் என்று பல பெயர்கள் கொண்ட பக்சர் என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ஸ்ரீராமருக்கு பலை அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது.

3. அகல்யாஸ்ரமம்: ஸ்ரீராமரின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்று பெண்ணாக மாறிய இடம் இது என்பது இந்த இடத்தின் சிறப்பு.

4. ஜனக்பூர்: மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இங்குள்ள மிகப் பெரிய மைதானத்திலேயே ஸ்ரீராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

5. ராம் டெக்: இது, ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின்போது இங்கு சிறிது காலம் இங்கு தங்கி இருந்தனர் என்றும் இதன் காரணமாக இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

6. சபரி: சபரி எனும் பக்தியில் சிறந்த பெண் எச்சில் படுத்தித் தந்த கனியை ஸ்ரீராமர் மனமுவந்து ஏற்ற இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை ‘மதங்க பருவதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

7. ராமேஸ்வரம்: ராம காவியத்தில் புகழ் பெற்ற இடம். ராவணனை வதம் செய்த பாவம் நீங்க ஸ்ரீராமர் சிவலிங்கங்களை நிர்மாணித்து சிவ பூஜை செய்த இடம் இது.

8. பிரயாக்ராஜ்: அலகாபாத் என்று அழைக்கப்பட்ட ஊரின் பூர்வீகப் பெயர்தான் பிரயாக்ராஜ். இந்த இடத்தில்தான் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணனுடன் கங்கை நதியை கடந்து சென்றதாக ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த இடத்தில் பரத முனி ஆசிரமத்தில் ராமர் ஓய்வெடுத்து சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நடக்கும் கும்பமேளா மிகக் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

9. சித்திரகோட்: பதினான்கு வருடம் வனவாசம் செல்வதற்காகக் கிளம்பிய ஸ்ரீராமனை, பரதன் எவ்வளவு அழைத்தும் திரும்பாததைக் கண்ட தசரதர், உயிர் துறக்க, ராமனிடம் பரதன் பாதுகை பெற்று வந்த இடம்தான் சித்ரகூட். ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன் வந்து சென்ற பல தடங்கள் இங்கு உள்ளன. இங்கு பல ராமர் கோயில்களும் உள்ளன.

10. தண்ட காருண்யா: ராவணன் சகோதரி சூர்ப்பனகை தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் கொண்டாள். அவளை மூக்கை லட்சுமணன் அரிந்து விரட்டியது இந்த தண்டகாருண்யா இடத்தில்தான். ஒடிஸா, சத்தீஸ்கர், ஆந்திரா எனப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த தண்ட காருண்யா எனும் பசுமை வனம்.

இதையும் படியுங்கள்:
மாம்பழச்சாறு பருகுவதன் மகத்தான நன்மைகள்!
Holy places where Sri Rama's feet were planted

11. கிஷ்கிந்தை: வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தை வாலியின் சாம்ராஜ்யமாக பரந்து விரிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வாலி தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவி ரூமாவை வலுக்கட்டாயமாக கவர்ந்து சென்றான். ஸ்ரீராமன் மறைந்திருந்து வாலியை தனது அம்புகளால் கொன்று ரூமாவை மீட்டார். அதன் பின்னர் வானர சேனைகள் ஸ்ரீராமனுக்கு உதவத் தொடங்கினர் என்ற புராண சிறப்பு பெற்ற கிஷ்கிந்தா என்ற இடம் தற்போது கர்நாடகா மாநிலம் ஹம்பிக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கோயில் மற்றும் பல இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது.

12. தலைமன்னார்: ஸ்ரீராமபிரான் இந்த தலைமன்னார் பகுதியில் பாலம் அமைத்துத்தான் இலங்கையை அடைந்தார். ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்டு விபீஷணனுக்கு இலங்கையின் ராஜ்யத்தை ஒப்படைத்ததும் இங்குதான். அதன் பின்னர் இங்குதான் சீதா தேவி தான் கற்புள்ளவள் என தீயில் இறங்கி நிரூபித்ததாக சொல்கிறது வரலாறு.

13. மாயமான் குறிச்சி: இது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். அன்னை சீதாவை, லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டி வெளியில் வர வைக்க ராவணன் மாய மானாக உருமாறிய இடம் இது என்பதே இந்த ஊர் பெயரின் காரணமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com