மேகங்கள் வசிக்கும் மேகாலயா!

மேகங்கள் வசிக்கும் மேகாலயா!
Updated on

தென்கிழக்கு இந்தியாவில் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி என்னும் இடம் உலகிலேயே அதிக மழைப் பொழிவைப் பெறும் இரண்டாம் இடமாகும்.நாட்டின் உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான நோகலிகை  நீர்வீழ்ச்சியும் இங்கு உள்ளது. இது 1115 அடி உயரம் உள்ளது. இதில் குளிக்க முடியாது. பார்க்க மட்டுமே முடியும்.

சிரபுஞ்சியில் உள்ள 100 அடி  இரண்டுக்கு வேர்ப்பாலம் சிறப்பு வாய்ந்தது.  50 பேர் நின்றாலும் தாங்கும் வலிமை இதற்கு உண்டு. எப்போதும் நிறைந்துள்ள பசுமை, ஒருபக்கம் உயர்ந்த மலை, மறுபக்கம் ஆழமான பள்ளத்தாக்கு, வளைந்து செல்லும் சாலை என்று இயற்கை எழில் கொஞ்சுகிறது, மேகங்களின் வாசஸ்தலமான மேகாலயாவில்.

-ராதிகா ரவீந்திரன், சென்னை.

logo
Kalki Online
kalkionline.com