அவசியம் அறிய வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

அவசியம் அறிய வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

*வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

*திருக்கோயிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

*அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

*கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்களைக் கழுவலாம். ஆனால், குளிக்கக் கூடாது.

*எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

*சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும்போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

*சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

*நல்ல காரியங்கள் பற்றிப் பேசும்போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

*திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர், இராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.

*ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும்பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

*கோயில் மூடியிருக்கும்போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

*குங்குமத்தை வலது கை மோதிர விரலால் இட்டுக் கொள்வதே நல்லது.

*விக்ரஹத்துக்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.

*இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

 *பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

*கர்ப்பிணிப் பெண்களோ, அவர்களது கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com