சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம்: வேறுபாடுகளை அறிவோமா குட்டீஸ்?

Independence vs. Republic Day: What’s the Difference?
Independence vs. Republic Day: What’s the Difference?
Published on

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு தினங்களுமே மிக முக்கியமானவை. தேசப்பற்றை ஊக்குவிக்கவும், தியாகிகளை நினைவு கூரவும் அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், பல சிறுவர்களுக்கு இந்த இரு தினங்களுக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை. தெரிந்துகொள்வோமா குட்டீஸ்?

இதையும் படியுங்கள்:
உலகின் முதல் தேசியக் கொடி தோன்றியது எங்கே? எப்படி? எப்போது?
Independence vs. Republic Day: What’s the Difference?

1. வரலாற்று முக்கியத்துவம்

  • சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15, 1947): 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிற்கு அன்றுதான் விடுதலை கிடைத்தது. அஹிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் செய்த உயிர் தியாகத்தைப் போற்றும் நாளாக இது அமைகிறது.

  • குடியரசு தினம் (ஜனவரி 26, 1950): விடுதலை அடைந்தாலும், 1950 வரை இந்தியாவிற்கு எனச் சொந்த அரசியலமைப்புச் சட்டம் கிடையாது. இந்தியாவை இந்தியக் குடிமக்களே ஜனநாயக முறையில் ஆட்சி செய்ய, சட்டங்கள் வகுக்கப்பட்டு இந்தியா ஒரு 'குடியரசு நாடாக' மாறிய நாளே குடியரசு தினமாகும்.

2. கொடியேற்றும் முறையில் உள்ள வித்தியாசம்

  • சுதந்திர தினம்: அன்று தேசியக் கொடி கம்பத்தின் கீழே இருந்து கயிறு மூலம் மேலே இழுக்கப்பட்டு ஏற்றப்படும். இது அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு நாடு எழுச்சி பெறுவதைக் குறிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Flag Hoisting என்பார்கள்.

  • குடியரசு தினம்: அன்று தேசியக் கொடி ஏற்கனவே கம்பத்தின் உச்சியில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். கயிற்றை இழுத்து மலர்கள் தூவக் கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும். இது நாடு ஏற்கனவே சுதந்திரம் அடைந்துவிட்டதைக் குறிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Flag Unfurling என்பார்கள்.

இதையும் படியுங்கள்:
Republic Day: The Birth of India’s Own Rules!
Independence vs. Republic Day: What’s the Difference?

3. விழாத் தலைமை ஏற்பது யார்?

  • சுதந்திர தினம்: நாடு விடுதலை பெற்ற போது பிரதமர் பதவி மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்தது. எனவே, நாட்டின் அரசியல் தலைவரான பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார்.

  • குடியரசு தினம்: அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த தினமான இன்று, நாட்டின் முதல் குடிமகனும் அரசியலமைப்புத் தலைவருமான குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார்.

4. விழா நடைபெறும் இடங்கள் மற்றும் சிறப்புகள்

  • சுதந்திர தினம்: வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் நடைபெறும். பிரதமர் உரையாற்றுவார். இத்துடன் அன்றைய கொண்டாட்டங்கள் நிறைவடையும்.

  • குடியரசு தினம்: டெல்லியில் உள்ள கர்த்தவ்யா பாதையில் (முன்பு ராஜ் பாத்) நடைபெறும். பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் மாநிலங்களின் கலாச்சார அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இக்கொண்டாட்டம் ஜனவரி 29 அன்று 'பாசறை திரும்புதல்' (Beating Retreat) நிகழ்வோடு அதிகாரப்பூர்வமாக நிறைவடையும்.

சுருக்கமாகச் சொன்னால்:

சுதந்திர தினம் என்பது நம்முடைய உரிமைகளையும் விடுதலையையும் பெற்ற தினமாகும்.

குடியரசு தினம் என்பது அந்த உரிமைகளைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கவும், ஜனநாயகக் கடமைகளை ஆற்றவும் வழிகாட்டிய தினமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com