சிறுகதை: 90’s பிரம்படி..!

Class room - Short story
Class room - Short story
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on

அடுத்த பாட வேளைக்கு கணக்கு வாத்தியார் வரப்போவதை நினைத்து, கௌதமிற்கு பயத்தோடு சேர்ந்து வயிறும் கலக்க ஆரம்பித்தது.

இந்தப் பாட வேளையில் தமிழாசிரியர் பாடம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டாமல், “நானும் உங்கள மாதிரி சின்ன பிள்ளையா இருக்கும் போது…” என்று தனது சொந்த கதையை பேச ஆரம்பித்தார்.

எல்லா மாணவர்களும் ஆசிரியர் பேசுவதை ஆர்வமாக கேட்டார்கள். சொந்தக் கதையில் ஆரம்பித்து படிப்படியாக ஆசிரியரின் பேச்சானது, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளை எப்படி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கும் கதைக்கு போனது.

கணக்கு வாத்தியாரை நினைத்து, கௌதமிருக்கு தமிழாசிரியரின் பேச்சு காதில் விழவில்லை.

இருந்தாலும் கவனிப்பது போல் ஆசிரியரையே பார்த்தான்.

கௌதம் தனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பனான மனோவிடம் மெதுவாக, “டேய் மனோ... கணக்கு வாத்தியாரு கொடுத்த வீட்டு பாடத்த போடலடா... இப்ப என்ன பண்றது?”

மனோ பேசத் தொடங்கியதும், தமிழ் ஆசிரியர் அவனை கவனித்தார். பிறகு மனோவை முட்டி போட சொன்னார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com