சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள், ஏன்… எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால், அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு..சரிதாவை முதன் முதலாகப் பார்த்த பொழுது வாயைப் பிளந்து கொண்டு, "அட ப்ரம்மா இரவும் பகலுமாய் பல வருடங்கள் ஓவர்டைம் செய்து இவளை செஞ்சிருப்பானோ" என்று தோன்றியது..வினோத் ஆபிஸ்க்கு சென்றபின், மீதி வேலைகளை முடித்து, ஊஞ்சலில் அமர்ந்தபடியே, லைப்ரரியில் இருந்து கொண்டு வந்த புத்தகத்தை கையில் எடுத்த போது காலிங்பெல் அடித்தது. யார் இந்த நேரத்துல, கேஸ் கூட ரெண்டு நாள் முன்னால வந்தாச்சு. கதவைத் திறந்தால்,.அங்கு பளீரென தகதகக்கும் நிறத்தில், ஐந்தரை அடி உயரத்திற்கு, தளரப் பின்னிய பின்னலை முன்னால் போட்டபடி,."என் பேர் சரிதா. எதிர் ஃப்ளாட்டுக்கு குடி வந்துருக்கோம். நீங்க ஃப்ரீயா இருந்தால், கொஞ்சம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.".பேசும் போது ஆடிய ஜிமிக்கி அவளை மேலும் அழகாக்கியது. இளஞ்சிகப்பு சுடிதாரில் தேவதை போலிருந்தாள்.."உள்ள வாங்க. என் பேரு கவிதா".."பாட்டியும் நானும்தான். பாட்டி தூங்கிட்டிருக்காங்க. எனக்கு பொழுது போகலை, அதான் பேசிட்டுப் போகலாம்னு. உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லியே".ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவள் சென்று வெகு நேரம் வரை அவளுடைய இனிமையான குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகு கண்ணிலேயே நின்றது..கண்ணாடி முன் சென்று ஒருமுறை பார்த்துக்கொண்டேன். மேடான நெற்றியை சற்று தட்டி சரி செய்து, இடுங்கிய கண்களை பிரித்து சற்றுப் பெரிதாக்கினால் நானும் ஓரளவு நன்றாக இருப்பேன். சற்றே தடித்த உதடு அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிம்மா என்றது..சரிதாவைப் பார்த்து பொறாமைலாம் வரவில்லை. மாறாக முதல் பார்வையிலேயே மிகவும் பிடித்துப் போயிற்று. என்னைவிட நான்கைந்து வயது கம்மியாக இருக்கும்..மைசூர் பொண்ணு. தமிழில் கன்னட வாடை. அம்மா, அப்பா மைசூர்ல. ஏகப்பட்ட சொத்து..சென்னை கல்லூரி ஒன்றில் மேல்படிப்பிற்காக வந்திருக்கிறாள். துணைக்கு பாட்டி..அடுத்த நாள் காலை பால் பாக்கெட் எடுக்கும் போது, எதிர் ஃப்ளாட் கதவு திறந்தது. அந்தப் பெண்மணிக்கு அறுபது வயதுக்குள் இருக்கும். அழகு இவங்க பரம்பரை வியாதி போல. பாட்டி அப்படியே மகாலக்ஷ்மி போல இருந்தாள். வைரத்தோடும் மூக்குத்தியும் டாலடித்தது..இருவருமே சீக்கிரம் ஒட்டிக் கொண்டுவிட்டார்கள். என் வீட்டில் என்னைத் தவிர வினோத் மட்டும்தான். வினோத் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு டைப்..எங்க அபார்ட்மெண்டில் மொத்தம் நான்கு ஃப்ளாட்கள். கீழ கார் பார்க்கிங், முதல் மாடியில் எங்க இரண்டு ஃப்ளாட், மாடியில் இரண்டு. இரண்டில் ஒன்று காலி, ஒன்றில் பேச்சிலர் பசங்க இருக்காங்க..நான்கு மாதங்கள் முன்பு, படித்து முடித்துவிட்டு வேலை தேடுவதற்காக சென்னை வந்த என் மச்சினர் பையன் அஜய், தன்னுடைய நண்பர்கள் ஐவருடன் ஷேர் அடிப்படையில் அந்த காலி ஃப்ளாட்டில் குடியேறினான். சாப்பாடு அவர்களே செய்து கொண்டார்கள், சில ஞாயிறுகளில் அஜய் மட்டும் இங்கு வருவான் சாப்பிட..போன மாதம் ஒரு நாள், எதிர் வீட்டு பாட்டி,."கவிதா, ஒரு உதவி செய்யணுமேம்மா" என்றாள்.."சொல்லுங்க பாட்டி" என்றேன்.."நான் ஒரு வாரம் ஊருக்கு போய்ட்டு வரேன். அங்க சொந்தக்காரங்க வீட்ல கல்யாணம். சரிதா, பரீட்சை வரதுனால, லீவுலாம் போட முடியாதுன்னு சொல்லிட்டா. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்டுக்கிறியாம்மா. தனியா மேனேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கா. இருந்தாலும் எனக்குத்தான் மனசு கேக்கலை"."இது ஒரு விஷயமா. நான் பாத்துக்கறேன். நீங்க நிம்மதியா போய்விட்டு வாங்க.".பாட்டி, ஒருவிதமான நிம்மதியுடன் ஊருக்கு கிளம்பி சென்றார்கள். சரிதா எந்த உதவியும் எதிர்பார்க்கவில்லை. சமைத்து சாப்பிட்டுவிட்டு, கல்லூரி சென்று, மாலை வந்தாளென்றால், வெளியே வரமாட்டாள். நாந்தான் அப்பப்ப போய் ஏதாவது வேணுமா என்று விசாரித்து விட்டு வருவேன்..ரெண்டு வாரங்களுக்கு முன்னால், எனக்கு காஞ்சிபுரத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்தது. வினோத், முதல் நாளே பெங்களூர் போய் விட்டதால், நான் மட்டும்தான். மாடியிலும் அஜய் ஃப்ளாட்டில் பசங்க ஊட்டிக்கும், இன்னொரு ஃப்ளாட்டில் பரீட்சை முடிஞ்சு பசங்க அவரவர் ஊர்களுக்கும் சென்று விட்டனர்..எனக்கு சரிதாவை தனியாக விட்டுச் செல்ல ஒரே தயக்கம். அவளையும் என்னுடன் வருமாறு அழைத்தேன். அவள் தனக்கு அன்று ப்ராக்டிகல் எக்ஸாம் இருப்பதாகவும், முடிந்து மதியம் வந்தவுடன், வீட்டை உள்ளே பூட்டிக் கொண்டிருப்பதாகவும் சொல்லி விட்டாள். சரி எப்படியும், முகூர்த்தம் முடிஞ்சு நாமும் மாலைக்குள் வந்துவிடுவோமேயென்று கிளம்பினேன்..முகூர்த்தம் முடிந்து சாப்பிடவே மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. தோழிகளின் வற்புறுத்தலின் பேரில், நாலு மணிக்கு மேல் நடை திறந்து சில கோயில்கள் சென்றுவிட்டு, சென்னை வரும்போது, இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. சரிதாவின் போன் வேறு அடித்துக் கொண்டே இருந்தது. காலேஜ்ல ஸைலண்ட் மோட்ல போட்டத எடுக்கல போல இந்த பொண்ணு. பஸ்ஸில் ஏறும்போது மீண்டும் முயற்சி செய்யலாம் என்று மொபைல எடுத்தபோது அது உயிரிழந்திருந்தது. சே… பவர் பேங்க் எடுத்து வந்திருக்கணும்..வீட்டினுள் நுழைந்து முகம் கழுவி நைட்டிக்கு மாறி, குக்கரை வைத்து விட்டு, எதிர் ஃப்ளாட் அழைப்பு மணியை அடித்தேன். நாலைந்து முறை அடித்தும் கதவு திறக்கவில்லை. ஐந்து நிமிடம் ஆயிற்று. கதவில் கை வைத்தவுடன் திறந்து கொண்டது. வீடு இருளோடிருந்தது. அடி வயிறு லேசாக கலங்கிற்று. கையால் தடவியபடியே ஸ்விட்சை போட்டேன்..ஹால் வெறிச்சோடி இருந்தது. பெட்ரூம் லைட்டை போட்டவள், அதிர்ச்சியில் கத்த வாய் திறந்து சத்தம் வராமல் காத்துதான் வந்தது. கட்டிலில் சரிதா, கலைந்த உடைகளுடன், விழிகள் வெளியே வர வாய் பிளந்து இறந்து கிடந்தாள்..பிறகு நடந்ததெல்லாம் சொப்பனம் போல் இருக்கு. போலீஸ் வந்து, போஸ்ட்மார்ட்டம் பண்ணி, கேங்க் ரேப் அண்ட் மர்டர்ல கேஸ் புக் ஆகி இன்வெஸ்டிகேஷன் போய்க் கொண்டிருக்கிரது..அடுத்த நாள் ஊரிலிருந்து வந்த வினோத், ஒரு வாரம் லீவு போட்டு உடன் இருந்தாலும், என்னால் அந்த காட்சியிலிருந்து மீளவே முடியவில்லை..கண்ணை மூடினால் பாட்டியின் கதறல்தான் கண்முன்னே வருகிறது.."பத்திரமா பாத்துக்கறேன்னு சொன்னியேம்மா. உன்னய நம்பி விட்டுட்டு போனேனே. சின்ன பூச்சிக்கு கூட தீங்கு நெனைக்காத குழந்தை. இப்படியா ஒரு முடிவு வரணும்.".பத்து நாட்கள் திருச்சியில் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை சென்னை வந்தேன். என்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள், ஒரு குளியல் போட்டு, டீ போட்டு குடித்து விட்டு, சற்று நேரம் குளிர்ந்த காற்றில் இருக்கலாம் என்று மொட்டை மாடிக்கு போனேன். மொட்டை மாடிக்கு படி ஏறும்போது, அஜய்யோட அபார்ட்மெண்டில் ஒரே சிரிப்பு சத்தம்.."சித்தப்பு… கலக்கிட்ட சித்தப்பு. மாஸ்டர் ப்ளான்" என்ற அஜய்யின் குரலும், தொடர்ந்து வினோதின் சிரிப்பும் கேட்டு, மறைந்து நின்று காதுகளைக் கொடுத்தேன்.."உங்க சித்திய ஏமாத்தறது மேட்டர் இல்லடா, இப்ப போலீஸையும் சேர்த்து ஏமாத்திட்டு இருக்கோம். கவனமா இருக்கணும். திடீர்னு போலீஸ் வந்து குடைஞ்சா உஷாரா இருக்கணும் பசங்களா… சீக்கிரம் ஆளுக்கு ஒரு வேலையைத் தேடிகிட்டு இடத்த காலி பண்ணுங்க" – வினோத்."அந்த அலிபை சான்ஸே இல்ல சித்தப்பு" – இது வேறொரு குரல்."பார்க்க பூனை மாதிரி இருந்துட்டு எப்டில்லாம் ஐடியா கொடுத்தார் பாரு"."உசிரோட விட்ருக்கலாம்டா"."எதுக்கு? நாம எல்லாரும் கூண்ட்டோட கைலாசம் போகவா"."கன்னடத்துல என்னமோ கத்திச்சுடா கடைசில"."ரொம்ப முக்கியம்" மாற்றி மாற்றி பேசியபடி பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து."கன்னடப் பைங்கிளி சரிதா ஆத்மா சாந்தியடைய… சியர்ஸ்" என்று சிரிப்பு சத்தம் அதிகமாக ஆக அங்கு நிற்க முடியாமல் வேகமாக கீழே வந்து அப்படியே சோபாவில் சரிந்தேன்..வினோத்தா இப்படி… நம்பவே முடியலை. பெண்களை அவன் நிமிர்ந்து பார்த்து கூட பார்த்ததில்லயே. சரிதாவின் குழந்தை முகம் வந்து போயிற்று. அவளை அழகாகப் படைத்ததற்கும் சபல புத்தியுடனான ஆண்களைப் படைத்ததற்கும் ப்ரம்மாவின் மேல் கோபம் வந்தது. அழுதழுது ஓய்ந்த பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன்..இரவு வினோத் வருவதற்குள் சாப்பிட்டு படுத்து தூங்கிவிட்டேன்..காலையில் எழுந்ததும் வினோத்திடம், "எப்ப வந்தீங்க? கால் பண்ணி இருக்கலாம்ல"என்றேன்..ஆபிஸ்ல இருந்து லேட்டா வந்து கதவத் திறந்து பார்த்தா, ஹால்ல லைட் எரியறது. உள்ள நீ தூங்கிட்டு இருக்க" என்ற வினோத்திடம்.ஒரு சிறு புன்னகையோடு, "டயர்டா இருந்ததுங்க அதான் சீக்கிரம் தூங்கிட்டேன்."."ஏங்க, இன்னிக்கி சித்திரா பெளர்ணமி, கலந்த சாதம் பண்ணி எடுத்துட்டு, மொட்டை மாடில வச்சு சாப்பிடலாமா? அஜய்யும் அவன் ஃப்ரெண்ட்ஸையும் கூப்பிடலாம். பாவம் அவங்களும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகி இருக்கும்?".வினோத் வேகமாக, " அவங்கல்லாம் எதுக்கும்மா? வேணும்ன அஜய்ய மட்டும் இங்க கீழ நம்ம வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடலாம்."."இல்லிங்க, அவங்க எல்லாம் வந்தா கலகலப்பா இருக்கும். எனக்கும் சரிதா போனதுக்கப்றம் இப்டி யாராவது மனுஷங்களோட பேசிட்டு இருந்தா மனசுக்கு இதமா இருக்கும். அதான்"."சரிம்மா, உன் இஷ்டம். நம்ம வீட்டுக்கே கூப்பிட்டுக்கலாம், மாடில்லாம் வேணாம்" என்றபடியே ஆபிஸ்க்கு கிளம்பினார்..அவர் கிளம்பிப் போன பின் கடைக்குச் சென்று இரவு உணவுக்குத் தேவையான காய்கறி, பிற சாமான்களுடன் முக்கியமான அந்த வஸ்துவையும் வாங்கிக் கொண்டேன்..இரவு ஏழு மணிக்கெல்லாம் சமையலை முடித்துவிட்டு, என் இரவு உணவை முடித்துக் கொண்டு, காலையில் வாங்கி வந்த அந்த வஸ்துவை உணவில் கலக்கினேன். அது வேறு ஒன்றுமில்லை வினோத், அஜய் மற்றும் அவனது ஐந்து நண்பர்களுக்குமான இறுதியாத்திரைக்கு டிக்கெட்..வினோத் ஏழரை மணிக்கெல்லாம் வந்து, " நான் முதல்ல சாப்பிட்டு படுக்கறேன்மா. காலைல சீக்கிரம் எழுந்து ஆபிஸ் போகணும். தவிர, இந்த சின்ன பசங்க கலாட்டால்லாம் எனக்கு ஒத்து வராது" என்று சொல்லி விட்டு சாப்பிட்டுப் போய் படுத்துவிட்டார்..அஜய்க்கு போன் செய்தேன்.."சித்தி, ட்ராஃபிக்ல மாட்டிகிட்டோம். இன்னும் அரை மணில வந்துடுவோம்" என்றான்..பால்கனியில் நாற்காலியை போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வரிசையாக பைக் சத்தம், தொடர்ந்து கேட் திறக்கும் சத்தம் கேட்டு, உள்ளே போய் வாசல் கதவை திறந்தேன். எதிர் ப்ளாட்டைப் பார்த்த போது கண்களில் கண்ணீர் பொங்கியது.."சரிதா, உன்னுடைய முடிவுக்குக் காரணமானவர்களுக்கு இன்று நான் தீர்ப்பு வழங்கப் போகிறேன். அது போதும் எனக்கு. எல்லாம் முடிந்த உடன் கமிஷனருக்கு போன் செய்து சரண்டர் ஆகிவிடுவேன். உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .".சில நிமிடங்களில் லிஃப்ட் திறக்கும் சப்தம். லிஃப்ட் திறந்து,.ஆறு பேரும் என்னை நெருங்கினார்கள்!
சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள், ஏன்… எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால், அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு..சரிதாவை முதன் முதலாகப் பார்த்த பொழுது வாயைப் பிளந்து கொண்டு, "அட ப்ரம்மா இரவும் பகலுமாய் பல வருடங்கள் ஓவர்டைம் செய்து இவளை செஞ்சிருப்பானோ" என்று தோன்றியது..வினோத் ஆபிஸ்க்கு சென்றபின், மீதி வேலைகளை முடித்து, ஊஞ்சலில் அமர்ந்தபடியே, லைப்ரரியில் இருந்து கொண்டு வந்த புத்தகத்தை கையில் எடுத்த போது காலிங்பெல் அடித்தது. யார் இந்த நேரத்துல, கேஸ் கூட ரெண்டு நாள் முன்னால வந்தாச்சு. கதவைத் திறந்தால்,.அங்கு பளீரென தகதகக்கும் நிறத்தில், ஐந்தரை அடி உயரத்திற்கு, தளரப் பின்னிய பின்னலை முன்னால் போட்டபடி,."என் பேர் சரிதா. எதிர் ஃப்ளாட்டுக்கு குடி வந்துருக்கோம். நீங்க ஃப்ரீயா இருந்தால், கொஞ்சம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.".பேசும் போது ஆடிய ஜிமிக்கி அவளை மேலும் அழகாக்கியது. இளஞ்சிகப்பு சுடிதாரில் தேவதை போலிருந்தாள்.."உள்ள வாங்க. என் பேரு கவிதா".."பாட்டியும் நானும்தான். பாட்டி தூங்கிட்டிருக்காங்க. எனக்கு பொழுது போகலை, அதான் பேசிட்டுப் போகலாம்னு. உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லியே".ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவள் சென்று வெகு நேரம் வரை அவளுடைய இனிமையான குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகு கண்ணிலேயே நின்றது..கண்ணாடி முன் சென்று ஒருமுறை பார்த்துக்கொண்டேன். மேடான நெற்றியை சற்று தட்டி சரி செய்து, இடுங்கிய கண்களை பிரித்து சற்றுப் பெரிதாக்கினால் நானும் ஓரளவு நன்றாக இருப்பேன். சற்றே தடித்த உதடு அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிம்மா என்றது..சரிதாவைப் பார்த்து பொறாமைலாம் வரவில்லை. மாறாக முதல் பார்வையிலேயே மிகவும் பிடித்துப் போயிற்று. என்னைவிட நான்கைந்து வயது கம்மியாக இருக்கும்..மைசூர் பொண்ணு. தமிழில் கன்னட வாடை. அம்மா, அப்பா மைசூர்ல. ஏகப்பட்ட சொத்து..சென்னை கல்லூரி ஒன்றில் மேல்படிப்பிற்காக வந்திருக்கிறாள். துணைக்கு பாட்டி..அடுத்த நாள் காலை பால் பாக்கெட் எடுக்கும் போது, எதிர் ஃப்ளாட் கதவு திறந்தது. அந்தப் பெண்மணிக்கு அறுபது வயதுக்குள் இருக்கும். அழகு இவங்க பரம்பரை வியாதி போல. பாட்டி அப்படியே மகாலக்ஷ்மி போல இருந்தாள். வைரத்தோடும் மூக்குத்தியும் டாலடித்தது..இருவருமே சீக்கிரம் ஒட்டிக் கொண்டுவிட்டார்கள். என் வீட்டில் என்னைத் தவிர வினோத் மட்டும்தான். வினோத் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு டைப்..எங்க அபார்ட்மெண்டில் மொத்தம் நான்கு ஃப்ளாட்கள். கீழ கார் பார்க்கிங், முதல் மாடியில் எங்க இரண்டு ஃப்ளாட், மாடியில் இரண்டு. இரண்டில் ஒன்று காலி, ஒன்றில் பேச்சிலர் பசங்க இருக்காங்க..நான்கு மாதங்கள் முன்பு, படித்து முடித்துவிட்டு வேலை தேடுவதற்காக சென்னை வந்த என் மச்சினர் பையன் அஜய், தன்னுடைய நண்பர்கள் ஐவருடன் ஷேர் அடிப்படையில் அந்த காலி ஃப்ளாட்டில் குடியேறினான். சாப்பாடு அவர்களே செய்து கொண்டார்கள், சில ஞாயிறுகளில் அஜய் மட்டும் இங்கு வருவான் சாப்பிட..போன மாதம் ஒரு நாள், எதிர் வீட்டு பாட்டி,."கவிதா, ஒரு உதவி செய்யணுமேம்மா" என்றாள்.."சொல்லுங்க பாட்டி" என்றேன்.."நான் ஒரு வாரம் ஊருக்கு போய்ட்டு வரேன். அங்க சொந்தக்காரங்க வீட்ல கல்யாணம். சரிதா, பரீட்சை வரதுனால, லீவுலாம் போட முடியாதுன்னு சொல்லிட்டா. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்டுக்கிறியாம்மா. தனியா மேனேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கா. இருந்தாலும் எனக்குத்தான் மனசு கேக்கலை"."இது ஒரு விஷயமா. நான் பாத்துக்கறேன். நீங்க நிம்மதியா போய்விட்டு வாங்க.".பாட்டி, ஒருவிதமான நிம்மதியுடன் ஊருக்கு கிளம்பி சென்றார்கள். சரிதா எந்த உதவியும் எதிர்பார்க்கவில்லை. சமைத்து சாப்பிட்டுவிட்டு, கல்லூரி சென்று, மாலை வந்தாளென்றால், வெளியே வரமாட்டாள். நாந்தான் அப்பப்ப போய் ஏதாவது வேணுமா என்று விசாரித்து விட்டு வருவேன்..ரெண்டு வாரங்களுக்கு முன்னால், எனக்கு காஞ்சிபுரத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்தது. வினோத், முதல் நாளே பெங்களூர் போய் விட்டதால், நான் மட்டும்தான். மாடியிலும் அஜய் ஃப்ளாட்டில் பசங்க ஊட்டிக்கும், இன்னொரு ஃப்ளாட்டில் பரீட்சை முடிஞ்சு பசங்க அவரவர் ஊர்களுக்கும் சென்று விட்டனர்..எனக்கு சரிதாவை தனியாக விட்டுச் செல்ல ஒரே தயக்கம். அவளையும் என்னுடன் வருமாறு அழைத்தேன். அவள் தனக்கு அன்று ப்ராக்டிகல் எக்ஸாம் இருப்பதாகவும், முடிந்து மதியம் வந்தவுடன், வீட்டை உள்ளே பூட்டிக் கொண்டிருப்பதாகவும் சொல்லி விட்டாள். சரி எப்படியும், முகூர்த்தம் முடிஞ்சு நாமும் மாலைக்குள் வந்துவிடுவோமேயென்று கிளம்பினேன்..முகூர்த்தம் முடிந்து சாப்பிடவே மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. தோழிகளின் வற்புறுத்தலின் பேரில், நாலு மணிக்கு மேல் நடை திறந்து சில கோயில்கள் சென்றுவிட்டு, சென்னை வரும்போது, இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. சரிதாவின் போன் வேறு அடித்துக் கொண்டே இருந்தது. காலேஜ்ல ஸைலண்ட் மோட்ல போட்டத எடுக்கல போல இந்த பொண்ணு. பஸ்ஸில் ஏறும்போது மீண்டும் முயற்சி செய்யலாம் என்று மொபைல எடுத்தபோது அது உயிரிழந்திருந்தது. சே… பவர் பேங்க் எடுத்து வந்திருக்கணும்..வீட்டினுள் நுழைந்து முகம் கழுவி நைட்டிக்கு மாறி, குக்கரை வைத்து விட்டு, எதிர் ஃப்ளாட் அழைப்பு மணியை அடித்தேன். நாலைந்து முறை அடித்தும் கதவு திறக்கவில்லை. ஐந்து நிமிடம் ஆயிற்று. கதவில் கை வைத்தவுடன் திறந்து கொண்டது. வீடு இருளோடிருந்தது. அடி வயிறு லேசாக கலங்கிற்று. கையால் தடவியபடியே ஸ்விட்சை போட்டேன்..ஹால் வெறிச்சோடி இருந்தது. பெட்ரூம் லைட்டை போட்டவள், அதிர்ச்சியில் கத்த வாய் திறந்து சத்தம் வராமல் காத்துதான் வந்தது. கட்டிலில் சரிதா, கலைந்த உடைகளுடன், விழிகள் வெளியே வர வாய் பிளந்து இறந்து கிடந்தாள்..பிறகு நடந்ததெல்லாம் சொப்பனம் போல் இருக்கு. போலீஸ் வந்து, போஸ்ட்மார்ட்டம் பண்ணி, கேங்க் ரேப் அண்ட் மர்டர்ல கேஸ் புக் ஆகி இன்வெஸ்டிகேஷன் போய்க் கொண்டிருக்கிரது..அடுத்த நாள் ஊரிலிருந்து வந்த வினோத், ஒரு வாரம் லீவு போட்டு உடன் இருந்தாலும், என்னால் அந்த காட்சியிலிருந்து மீளவே முடியவில்லை..கண்ணை மூடினால் பாட்டியின் கதறல்தான் கண்முன்னே வருகிறது.."பத்திரமா பாத்துக்கறேன்னு சொன்னியேம்மா. உன்னய நம்பி விட்டுட்டு போனேனே. சின்ன பூச்சிக்கு கூட தீங்கு நெனைக்காத குழந்தை. இப்படியா ஒரு முடிவு வரணும்.".பத்து நாட்கள் திருச்சியில் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை சென்னை வந்தேன். என்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள், ஒரு குளியல் போட்டு, டீ போட்டு குடித்து விட்டு, சற்று நேரம் குளிர்ந்த காற்றில் இருக்கலாம் என்று மொட்டை மாடிக்கு போனேன். மொட்டை மாடிக்கு படி ஏறும்போது, அஜய்யோட அபார்ட்மெண்டில் ஒரே சிரிப்பு சத்தம்.."சித்தப்பு… கலக்கிட்ட சித்தப்பு. மாஸ்டர் ப்ளான்" என்ற அஜய்யின் குரலும், தொடர்ந்து வினோதின் சிரிப்பும் கேட்டு, மறைந்து நின்று காதுகளைக் கொடுத்தேன்.."உங்க சித்திய ஏமாத்தறது மேட்டர் இல்லடா, இப்ப போலீஸையும் சேர்த்து ஏமாத்திட்டு இருக்கோம். கவனமா இருக்கணும். திடீர்னு போலீஸ் வந்து குடைஞ்சா உஷாரா இருக்கணும் பசங்களா… சீக்கிரம் ஆளுக்கு ஒரு வேலையைத் தேடிகிட்டு இடத்த காலி பண்ணுங்க" – வினோத்."அந்த அலிபை சான்ஸே இல்ல சித்தப்பு" – இது வேறொரு குரல்."பார்க்க பூனை மாதிரி இருந்துட்டு எப்டில்லாம் ஐடியா கொடுத்தார் பாரு"."உசிரோட விட்ருக்கலாம்டா"."எதுக்கு? நாம எல்லாரும் கூண்ட்டோட கைலாசம் போகவா"."கன்னடத்துல என்னமோ கத்திச்சுடா கடைசில"."ரொம்ப முக்கியம்" மாற்றி மாற்றி பேசியபடி பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து."கன்னடப் பைங்கிளி சரிதா ஆத்மா சாந்தியடைய… சியர்ஸ்" என்று சிரிப்பு சத்தம் அதிகமாக ஆக அங்கு நிற்க முடியாமல் வேகமாக கீழே வந்து அப்படியே சோபாவில் சரிந்தேன்..வினோத்தா இப்படி… நம்பவே முடியலை. பெண்களை அவன் நிமிர்ந்து பார்த்து கூட பார்த்ததில்லயே. சரிதாவின் குழந்தை முகம் வந்து போயிற்று. அவளை அழகாகப் படைத்ததற்கும் சபல புத்தியுடனான ஆண்களைப் படைத்ததற்கும் ப்ரம்மாவின் மேல் கோபம் வந்தது. அழுதழுது ஓய்ந்த பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன்..இரவு வினோத் வருவதற்குள் சாப்பிட்டு படுத்து தூங்கிவிட்டேன்..காலையில் எழுந்ததும் வினோத்திடம், "எப்ப வந்தீங்க? கால் பண்ணி இருக்கலாம்ல"என்றேன்..ஆபிஸ்ல இருந்து லேட்டா வந்து கதவத் திறந்து பார்த்தா, ஹால்ல லைட் எரியறது. உள்ள நீ தூங்கிட்டு இருக்க" என்ற வினோத்திடம்.ஒரு சிறு புன்னகையோடு, "டயர்டா இருந்ததுங்க அதான் சீக்கிரம் தூங்கிட்டேன்."."ஏங்க, இன்னிக்கி சித்திரா பெளர்ணமி, கலந்த சாதம் பண்ணி எடுத்துட்டு, மொட்டை மாடில வச்சு சாப்பிடலாமா? அஜய்யும் அவன் ஃப்ரெண்ட்ஸையும் கூப்பிடலாம். பாவம் அவங்களும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகி இருக்கும்?".வினோத் வேகமாக, " அவங்கல்லாம் எதுக்கும்மா? வேணும்ன அஜய்ய மட்டும் இங்க கீழ நம்ம வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடலாம்."."இல்லிங்க, அவங்க எல்லாம் வந்தா கலகலப்பா இருக்கும். எனக்கும் சரிதா போனதுக்கப்றம் இப்டி யாராவது மனுஷங்களோட பேசிட்டு இருந்தா மனசுக்கு இதமா இருக்கும். அதான்"."சரிம்மா, உன் இஷ்டம். நம்ம வீட்டுக்கே கூப்பிட்டுக்கலாம், மாடில்லாம் வேணாம்" என்றபடியே ஆபிஸ்க்கு கிளம்பினார்..அவர் கிளம்பிப் போன பின் கடைக்குச் சென்று இரவு உணவுக்குத் தேவையான காய்கறி, பிற சாமான்களுடன் முக்கியமான அந்த வஸ்துவையும் வாங்கிக் கொண்டேன்..இரவு ஏழு மணிக்கெல்லாம் சமையலை முடித்துவிட்டு, என் இரவு உணவை முடித்துக் கொண்டு, காலையில் வாங்கி வந்த அந்த வஸ்துவை உணவில் கலக்கினேன். அது வேறு ஒன்றுமில்லை வினோத், அஜய் மற்றும் அவனது ஐந்து நண்பர்களுக்குமான இறுதியாத்திரைக்கு டிக்கெட்..வினோத் ஏழரை மணிக்கெல்லாம் வந்து, " நான் முதல்ல சாப்பிட்டு படுக்கறேன்மா. காலைல சீக்கிரம் எழுந்து ஆபிஸ் போகணும். தவிர, இந்த சின்ன பசங்க கலாட்டால்லாம் எனக்கு ஒத்து வராது" என்று சொல்லி விட்டு சாப்பிட்டுப் போய் படுத்துவிட்டார்..அஜய்க்கு போன் செய்தேன்.."சித்தி, ட்ராஃபிக்ல மாட்டிகிட்டோம். இன்னும் அரை மணில வந்துடுவோம்" என்றான்..பால்கனியில் நாற்காலியை போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வரிசையாக பைக் சத்தம், தொடர்ந்து கேட் திறக்கும் சத்தம் கேட்டு, உள்ளே போய் வாசல் கதவை திறந்தேன். எதிர் ப்ளாட்டைப் பார்த்த போது கண்களில் கண்ணீர் பொங்கியது.."சரிதா, உன்னுடைய முடிவுக்குக் காரணமானவர்களுக்கு இன்று நான் தீர்ப்பு வழங்கப் போகிறேன். அது போதும் எனக்கு. எல்லாம் முடிந்த உடன் கமிஷனருக்கு போன் செய்து சரண்டர் ஆகிவிடுவேன். உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .".சில நிமிடங்களில் லிஃப்ட் திறக்கும் சப்தம். லிஃப்ட் திறந்து,.ஆறு பேரும் என்னை நெருங்கினார்கள்!