ஜி. சியாமளா கோபு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 “PRESIDENT OF INDIA” SHRI PRANAB MUKERJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம்.
மாண்பிமிகு அய்யா மறைந்த திரு.அருணோதயம் அருணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் என்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன்.
அநேக சிறுகதைகள் வல்லினம், திண்ணை, பதாகை, குட் புக், My vikatan ல், Amazon kindle, Pustaka, கல்கி ஆன்லைன் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல சிறுகதைகள் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளன.
அது போக என் பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டவள்.