தியேட்டர்கள் திறந்தாச்சு; ரசிகர்கள் வருவார்களா?.கவர் ஸ்டோரி .– எஸ். சந்திரமௌலி.கொரோனா தாக்கம் மட்டுப்பட்ட நிலையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் தயவில், தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு, 100% இருக்கைகளுக்கும் டிக்கெட்டுகள் வழங்க அனுமதி கிடைத்துவிட்டது. இந்தக் கொரோனா காலத்தில், ஓடிடி தளங்களின் மூலமாக வீட்டில் இருந்தபடியே மக்கள் படம் பார்த்துப் பழகிவிட்டார்கள். கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து சாமானிய மக்கள் முழுமையாக விடுபட இன்னும் எத்தனை காலம் ஆகும் என்பதற்கு இப்போது தெளிவான விடை கிடையாது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலகட்டத்திலும் அவ்வப்போது படங்கள் ரிலீஸ் ஆகவே செய்தன. ஆனால், அவை எதிர்பார்த்த அளவுக்கு, சாதாரணமான சூழ்நிலையில் வெளியிடப்பட்டிருந்தால் பெற்றிருக்கக் கூடிய அளவுக்கு 'சூப்பர் ஹிட்' என்ற அளவுக்கு வசூலை வாரிக் கொடுக்கவில்லை. தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி நிலைமை எப்படி இருக்கும்? ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்குப் படை எடுப்பார்களா? நமக்கு இருக்கு ஓடிடி; நமக்கெதற்கு தியேட்டர்? என்று இருந்துவிடுவார்களா?."அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ, சோனி, ஹாட்ஸ்டார், ஆஹா என்று திரைப்படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ரசிகர்களின் வரவேற்பறைக்கே நேரடியாக எடுத்துக் கொண்டு போகிற ஓடிடி தளங்கள் இன்று வந்துவிட்டன. மக்கள் மத்தியில், அது எவ்வளவு பெரிய ஸ்டார் நடித்த சினிமாவாக இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் ஏதாவது ஒரு ஓடிடி தளத்தில் வந்துவிடப்போகிறது. 'அதைப் பார்க்க தியேட்டருக்கு எதற்குப் போக வேண்டும்?' என்ற மனப்பான்மை வந்துவிட்டது. மக்கள் வீட்டுக்குள்ள முடங்கிக் கிடந்த காலத்தில், தியேட்டர்களில் சினிமா ரிலீஸ் இல்லாத காலத்தில் மக்கள் ஓடிடி தளங்களை நாட ஆரம்பித்தார்கள். அது அவர்களுக்கு மிகவும் சௌகரியமாகப் போய்விட்டது. இப்போது, 'தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன' என்ற போதிலும், மக்கள் தியேட்டர்களுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. "இது துரதிருஷ்டவசமான யதார்த்த நிலை" என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான ராம்ஜீ.."இன்று ஓடிடி தளங்கள் மூலமாக, ஆண்டு சந்தா கட்டிவிட்டால், தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிப்படங்களையும் பார்க்க முடிகிறது. இதனால், தியேட்டர்களுக்குப் போய் தமிழ் சினிமாக்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல இந்திய மொழிப் படங்களையும், ஹாலிவுட் மற்றும் இதர சர்வதேச திரைப்படங்களையும் கூடுதல் கட்டணமில்லாமல் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்திருக்கிறது. பிற மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில் வசதி என்ற கூடுதல் சௌகரியமும் உள்ளது. மேலும், பல பிறமொழிப் படங்கள், தமிழில் மிக நல்ல முறையில் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன. இந்த மிகப் பெரிய எக்ஸ்போஷர், மக்களின் ரசனையில் மாற்றத்தைக் கோண்டு வந்திருக்கிறது. எனவே, வழக்கமான மசாலா சமாசாரங்களை வைத்து, இனிமேல் மக்களை ஈர்க்க முடியாது" என்கிறார் இன்னொரு மூத்த சினிமா பத்திரிகையாளரான பரத் குமார்.."அதே சமயம் மக்கள் பெரிய ஸ்டார்களின் படங்களை தியேட்டர்களில் பார்க்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக அவர்களின் ரசிகர் பட்டாளம், தியேட்டர்களில் தங்கள் ஹீரோவின் பட ரிலீசை தமிழ்நாட்டுப் பாரம்பரியமான முறையில் கொண்டாடவே விரும்புகிறது. அவர்கள், முதல் நாளே தங்கள் ஸ்டாரின் படத்தைப் பார்க்க இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவும் இப்போதும் கூட தயங்குவதில்லை. அண்மையில் வந்த மாநாடு படம் தியேட்டர் ரிலீஸ் மூலமாக நல்ல வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. ரஜினியின் அண்ணாத்த படத்தை ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட்களின் வெற்றியுடன் ஒப்பிட முடியாது என்றாலும், இன்றைய நிலவத்துடன் ஒப்பிடும்போது வெற்றிப்படமே" என்கிறார் பரத் குமார்.."அஜித்தின் வலிமை, 100% இருக்கைகள் அனுமதியுடன் ரிலீஸ் ஆனபோது, அதன் ரிசல்ட்டை ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தது. முதல் நாள் வசூல் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. வழக்கத்துக்கு மாறாக, வியாழன் அன்று படத்தை ரிலீஸ் செய்தது கூட 'வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நாலுநாளில் அதிகபட்ச வசூலை அள்ளிவிடலாம்' என்ற நோக்கத்தில்தான். ஆனால், 'வார இறுதி நாட்களில் வசூல் குறைந்துவிட்டது' என்கிறார்கள் தமிழ் சினிமாவின் டி.சி.ஆர். (டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்) என்கிற தினசரி வசூல் விபரங்களை நன்கு அறிந்த திரைப்படத்துறையினர். இன்னொரு பக்கம், 'அஜித் ரசிகர்கள் தவிர, மற்றவர்கள் மத்தியில் வலிமைக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை' என்றும் சொல்கிறார்கள். படம் ரிலீசான இரண்டு நாளில், படத்தின் நீளத்தை 15 நிமிடம் அளவுக்கு குறைக்கப்பட்டதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். "படம் ஹிட் என்றால், நீளத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது இவர்களின் கேள்வி..இன்றைய நிலவரப்படி, ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்குத்தான் தியேட்டர் ரிலீஸ் முன்னிலை வகிக்கின்றன. சூர்யா ஓடிடி தளங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அடுத்தபடியாக தனுஷ், கார்த்தி இருக்கிறார்கள். அதற்கடுத்து சிம்புவும், சிவகார்த்திகேயனும். மற்றவர்கள் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த பெரிய ஹீரோக்கள் எல்லாம் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று என படம் பண்ணுவதால், இவர்களின் ரசிகர்கள் தங்கள் ஹீரோவின் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் சுறுசுறுப்பு காட்டிவிட்டு, மற்ற நேரத்தில் சுணக்கத்தில் இருக்கிறார்கள்..அண்மையில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் ஒருவர் தனது படத்தை முட்டி மோதி ஒரு தியேட்டரைப் பிடித்து ரிலீஸ் செய்தார். அந்தத் தியேட்டரில் அவரது ஆரம்பகாலப் படங்கள் 125 நாட்கள் ஓடியது சரித்திரம். ஆனால், இப்போது நடந்தது பரிதாபமானது. முதல் நாள், முதல் ஷோவுக்கு பத்து பேர்கள்தான் வந்தார்கள். தியேட்டர் நிர்வாகம், காட்சியை ரத்து செய்துவிட்டு, டிக்கெட் பணத்தை வாபஸ் கொடுத்துவிட்டது. இன்னொரு திரையுலக பைனான்சியர் தன் மகனைப் போட்டுப் படமெடுத்தார். அந்தப் படத்தை வெளியிட சில பிரபல தியேட்டர்களை அணுகினார். அவர்கள் சம்மதிக்கவில்லை. கடைசியில், ஒரு சாதாரண தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, விளம்பரங்களில் மட்டும் அந்த பிரபல தியேட்டர்களின் பெயர்களையும் சேர்த்துவிட்டார். தியேட்டர் தரப்பில் இருந்து இது பற்றிக் கேட்டபோது, ஏதோ பதில் சொல்லி மழுப்பிவிட்டார் அந்த ஃபைனான்சியர்..மொத்தத்தில், அரசு கட்டுப்பாட்டினைத் தளர்த்திவிட்டது என்பதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், ரசிகர்களை இனிமேல் தியேட்டருக்கு வரவழைப்பது என்பது மிகப் பெரிய சவால்தான். காரணம், இன்று தமிழ் சினிமா அரசியல் மற்றும் பணபலம் பொருந்திய ஒரு சிலரது கட்டுப்பாடில்தான் உள்ளது. அவர்கள், பெரிய ஸ்டார்களைப் போட்டு, கோடிக்கணக்கில் முதலீடு செய்து, அதற்கேற்ப பிசினஸ் செய்து, ஏராளமான தியேட்டர்களை வலைத்துப் போட்டு, முதல் சில நாட்களுக்கு நிறைய ஷோக்கள் போட்டு, நாலே நாட்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். எனவே, சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; வசூல் இல்லை என்பதால் அவற்றை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனாலும், வேறு வழி இல்லாமல், தொழில் செய்யவேண்டுமே என்பதற்காக அவ்வப்போது சில விநியோகஸ்தர்கள் பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி, கையை சுட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.."வலிமை படத்தின் செங்கல்பட்டு பகுதி விநியோகஸ்தர் கலைமகன் முபாரக். அவர் வேலன், இடிமுழக்கம் ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் கூட. "பெரிய ஸ்டார்களின் படம் என்றால்தான் ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். சிறு பட்ஜெட் படம் என்றால், தியேட்டர் பக்கம் வருவதில்லை. சிறு படங்களுக்கு நேரடியான ஓடிடி மார்கெட் இருப்பது ஒரு ஆறுதல். ஆனாலும், சீக்கிரமே நிலைமை சீராகி, மக்கள் தியேட்டர்களுக்கு வரத் தொடங்குவார்கள் என்று சினிமா உலகத்தில் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு இப்போது தியேட்டர் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னமும் சாமானிய மக்களின் முக்கிய பொழுது போக்கு சினிமாதான். எனவே, தமிழ் சினிமாவின் வளர்ச்சி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்" என்கிறார் முபாரக்.
தியேட்டர்கள் திறந்தாச்சு; ரசிகர்கள் வருவார்களா?.கவர் ஸ்டோரி .– எஸ். சந்திரமௌலி.கொரோனா தாக்கம் மட்டுப்பட்ட நிலையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் தயவில், தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு, 100% இருக்கைகளுக்கும் டிக்கெட்டுகள் வழங்க அனுமதி கிடைத்துவிட்டது. இந்தக் கொரோனா காலத்தில், ஓடிடி தளங்களின் மூலமாக வீட்டில் இருந்தபடியே மக்கள் படம் பார்த்துப் பழகிவிட்டார்கள். கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து சாமானிய மக்கள் முழுமையாக விடுபட இன்னும் எத்தனை காலம் ஆகும் என்பதற்கு இப்போது தெளிவான விடை கிடையாது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலகட்டத்திலும் அவ்வப்போது படங்கள் ரிலீஸ் ஆகவே செய்தன. ஆனால், அவை எதிர்பார்த்த அளவுக்கு, சாதாரணமான சூழ்நிலையில் வெளியிடப்பட்டிருந்தால் பெற்றிருக்கக் கூடிய அளவுக்கு 'சூப்பர் ஹிட்' என்ற அளவுக்கு வசூலை வாரிக் கொடுக்கவில்லை. தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி நிலைமை எப்படி இருக்கும்? ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்குப் படை எடுப்பார்களா? நமக்கு இருக்கு ஓடிடி; நமக்கெதற்கு தியேட்டர்? என்று இருந்துவிடுவார்களா?."அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ, சோனி, ஹாட்ஸ்டார், ஆஹா என்று திரைப்படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ரசிகர்களின் வரவேற்பறைக்கே நேரடியாக எடுத்துக் கொண்டு போகிற ஓடிடி தளங்கள் இன்று வந்துவிட்டன. மக்கள் மத்தியில், அது எவ்வளவு பெரிய ஸ்டார் நடித்த சினிமாவாக இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் ஏதாவது ஒரு ஓடிடி தளத்தில் வந்துவிடப்போகிறது. 'அதைப் பார்க்க தியேட்டருக்கு எதற்குப் போக வேண்டும்?' என்ற மனப்பான்மை வந்துவிட்டது. மக்கள் வீட்டுக்குள்ள முடங்கிக் கிடந்த காலத்தில், தியேட்டர்களில் சினிமா ரிலீஸ் இல்லாத காலத்தில் மக்கள் ஓடிடி தளங்களை நாட ஆரம்பித்தார்கள். அது அவர்களுக்கு மிகவும் சௌகரியமாகப் போய்விட்டது. இப்போது, 'தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன' என்ற போதிலும், மக்கள் தியேட்டர்களுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. "இது துரதிருஷ்டவசமான யதார்த்த நிலை" என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான ராம்ஜீ.."இன்று ஓடிடி தளங்கள் மூலமாக, ஆண்டு சந்தா கட்டிவிட்டால், தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிப்படங்களையும் பார்க்க முடிகிறது. இதனால், தியேட்டர்களுக்குப் போய் தமிழ் சினிமாக்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல இந்திய மொழிப் படங்களையும், ஹாலிவுட் மற்றும் இதர சர்வதேச திரைப்படங்களையும் கூடுதல் கட்டணமில்லாமல் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்திருக்கிறது. பிற மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில் வசதி என்ற கூடுதல் சௌகரியமும் உள்ளது. மேலும், பல பிறமொழிப் படங்கள், தமிழில் மிக நல்ல முறையில் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன. இந்த மிகப் பெரிய எக்ஸ்போஷர், மக்களின் ரசனையில் மாற்றத்தைக் கோண்டு வந்திருக்கிறது. எனவே, வழக்கமான மசாலா சமாசாரங்களை வைத்து, இனிமேல் மக்களை ஈர்க்க முடியாது" என்கிறார் இன்னொரு மூத்த சினிமா பத்திரிகையாளரான பரத் குமார்.."அதே சமயம் மக்கள் பெரிய ஸ்டார்களின் படங்களை தியேட்டர்களில் பார்க்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக அவர்களின் ரசிகர் பட்டாளம், தியேட்டர்களில் தங்கள் ஹீரோவின் பட ரிலீசை தமிழ்நாட்டுப் பாரம்பரியமான முறையில் கொண்டாடவே விரும்புகிறது. அவர்கள், முதல் நாளே தங்கள் ஸ்டாரின் படத்தைப் பார்க்க இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவும் இப்போதும் கூட தயங்குவதில்லை. அண்மையில் வந்த மாநாடு படம் தியேட்டர் ரிலீஸ் மூலமாக நல்ல வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. ரஜினியின் அண்ணாத்த படத்தை ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட்களின் வெற்றியுடன் ஒப்பிட முடியாது என்றாலும், இன்றைய நிலவத்துடன் ஒப்பிடும்போது வெற்றிப்படமே" என்கிறார் பரத் குமார்.."அஜித்தின் வலிமை, 100% இருக்கைகள் அனுமதியுடன் ரிலீஸ் ஆனபோது, அதன் ரிசல்ட்டை ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தது. முதல் நாள் வசூல் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. வழக்கத்துக்கு மாறாக, வியாழன் அன்று படத்தை ரிலீஸ் செய்தது கூட 'வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நாலுநாளில் அதிகபட்ச வசூலை அள்ளிவிடலாம்' என்ற நோக்கத்தில்தான். ஆனால், 'வார இறுதி நாட்களில் வசூல் குறைந்துவிட்டது' என்கிறார்கள் தமிழ் சினிமாவின் டி.சி.ஆர். (டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்) என்கிற தினசரி வசூல் விபரங்களை நன்கு அறிந்த திரைப்படத்துறையினர். இன்னொரு பக்கம், 'அஜித் ரசிகர்கள் தவிர, மற்றவர்கள் மத்தியில் வலிமைக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை' என்றும் சொல்கிறார்கள். படம் ரிலீசான இரண்டு நாளில், படத்தின் நீளத்தை 15 நிமிடம் அளவுக்கு குறைக்கப்பட்டதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். "படம் ஹிட் என்றால், நீளத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது இவர்களின் கேள்வி..இன்றைய நிலவரப்படி, ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்குத்தான் தியேட்டர் ரிலீஸ் முன்னிலை வகிக்கின்றன. சூர்யா ஓடிடி தளங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அடுத்தபடியாக தனுஷ், கார்த்தி இருக்கிறார்கள். அதற்கடுத்து சிம்புவும், சிவகார்த்திகேயனும். மற்றவர்கள் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த பெரிய ஹீரோக்கள் எல்லாம் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று என படம் பண்ணுவதால், இவர்களின் ரசிகர்கள் தங்கள் ஹீரோவின் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் சுறுசுறுப்பு காட்டிவிட்டு, மற்ற நேரத்தில் சுணக்கத்தில் இருக்கிறார்கள்..அண்மையில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் ஒருவர் தனது படத்தை முட்டி மோதி ஒரு தியேட்டரைப் பிடித்து ரிலீஸ் செய்தார். அந்தத் தியேட்டரில் அவரது ஆரம்பகாலப் படங்கள் 125 நாட்கள் ஓடியது சரித்திரம். ஆனால், இப்போது நடந்தது பரிதாபமானது. முதல் நாள், முதல் ஷோவுக்கு பத்து பேர்கள்தான் வந்தார்கள். தியேட்டர் நிர்வாகம், காட்சியை ரத்து செய்துவிட்டு, டிக்கெட் பணத்தை வாபஸ் கொடுத்துவிட்டது. இன்னொரு திரையுலக பைனான்சியர் தன் மகனைப் போட்டுப் படமெடுத்தார். அந்தப் படத்தை வெளியிட சில பிரபல தியேட்டர்களை அணுகினார். அவர்கள் சம்மதிக்கவில்லை. கடைசியில், ஒரு சாதாரண தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, விளம்பரங்களில் மட்டும் அந்த பிரபல தியேட்டர்களின் பெயர்களையும் சேர்த்துவிட்டார். தியேட்டர் தரப்பில் இருந்து இது பற்றிக் கேட்டபோது, ஏதோ பதில் சொல்லி மழுப்பிவிட்டார் அந்த ஃபைனான்சியர்..மொத்தத்தில், அரசு கட்டுப்பாட்டினைத் தளர்த்திவிட்டது என்பதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், ரசிகர்களை இனிமேல் தியேட்டருக்கு வரவழைப்பது என்பது மிகப் பெரிய சவால்தான். காரணம், இன்று தமிழ் சினிமா அரசியல் மற்றும் பணபலம் பொருந்திய ஒரு சிலரது கட்டுப்பாடில்தான் உள்ளது. அவர்கள், பெரிய ஸ்டார்களைப் போட்டு, கோடிக்கணக்கில் முதலீடு செய்து, அதற்கேற்ப பிசினஸ் செய்து, ஏராளமான தியேட்டர்களை வலைத்துப் போட்டு, முதல் சில நாட்களுக்கு நிறைய ஷோக்கள் போட்டு, நாலே நாட்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். எனவே, சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; வசூல் இல்லை என்பதால் அவற்றை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனாலும், வேறு வழி இல்லாமல், தொழில் செய்யவேண்டுமே என்பதற்காக அவ்வப்போது சில விநியோகஸ்தர்கள் பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி, கையை சுட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.."வலிமை படத்தின் செங்கல்பட்டு பகுதி விநியோகஸ்தர் கலைமகன் முபாரக். அவர் வேலன், இடிமுழக்கம் ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் கூட. "பெரிய ஸ்டார்களின் படம் என்றால்தான் ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். சிறு பட்ஜெட் படம் என்றால், தியேட்டர் பக்கம் வருவதில்லை. சிறு படங்களுக்கு நேரடியான ஓடிடி மார்கெட் இருப்பது ஒரு ஆறுதல். ஆனாலும், சீக்கிரமே நிலைமை சீராகி, மக்கள் தியேட்டர்களுக்கு வரத் தொடங்குவார்கள் என்று சினிமா உலகத்தில் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு இப்போது தியேட்டர் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னமும் சாமானிய மக்களின் முக்கிய பொழுது போக்கு சினிமாதான். எனவே, தமிழ் சினிமாவின் வளர்ச்சி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்" என்கிறார் முபாரக்.