எஸ். சந்திரமௌலி.நெதர்லாந்து நாட்டின் மிக முக்கியமான நகரம் ஆம்ஸ்டர்டாம். பல்லாண்டுகால வரலாறு கொண்ட நகரம் இது..ஆம்ஸ்டர்டாம் பெயர்க்காரணம் தெரியுமா? இந்த நகரத்தில் ஓடும் நதியின் பெயர் ஆம்ஸ்டெல். அந்த நதியின் மீது ஒரு அணையைக் கட்டினார்கள். அதுதான் ஆம்ஸ்டர்டாம். அங்கே இருந்த மீனவ கிராமம்தான் இன்று பெருநகரமாக வளர்ந்திருக்கிறது..பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில், பூமிக்கு மேலே டிராம், பஸ் என செமை பிசியான நகரம். ஆனாலும்கூட சாலையின் இரண்டு பக்கங்களிலும் சாலைக்கும், நடைபாதைக்கும் நடுவில் சைக்கிளில் செல்பவர்களுக்காக பிரத்யேகமான சைக்கிள் தடம் உண்டு. அங்கே ஆண்களும், பெண்களும் வயசு வித்தியாசம் இல்லாமல் சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்க்கலாம்..ஆம்ஸ்டர்டாம் நகரத்து மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பத்து நிமிஷ நடை தூரத்தில் உள்ளது 'டாம்ஸ்கொயர்' என்ற இடம். நகரின் மிக முக்கியமான இடம் இதுதான். எந்த நேரமும் ஜனங்களையும், புறாக்களையும் ஒரு சேரக் காணலாம்..புறாக்கூட்டத்துக்கு மத்தியில் கைகள் மேல், தோளில், தலையில் புறாக்கள் உட்கார்ந்திருக்க போட்டோ எடுத்துக் கொள்வது இங்கே மிகப் பிரபலம். இரண்டு பேர் கையில் ஒரு பையுடன் நிற்கிறார்கள். பையில் அரிசி. ஒரு கை அரிசியை உங்கள் கையில் கொடுத்ததும், அதை புறாக்களுக்கு நீங்கள் போடும்போது அவை உங்களை நெருங்கி வரும். அப்படியே கிளிக்கிக்கொள்ள வேண்டியதுதான். அரிசிக்காரருக்கு இஷ்டம் போல டிப்ஸ் கொடுத்துவிட்டு நகரலாம். அரிசியை உச்சந்தலையில் தூவிக்கொண்டு புறாக்களை தலைக்கே வரவழைத்து போட்டோ எடுத்துக் கொள்பவர்களும் உண்டு..டாம்ஸ்கொயரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. புகழ் பெற்ற 'மேடம் டூசாத் மெழுகுச் சிலை மியூசியம்' அங்குதான் உள்ளது. சின்ன வயசில் பத்திரிகைகளில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்று படித்திருக்கிறோம் இல்லையா? அந்த ரிப்ளியின் "நம்பினால் நம்புங்கள்" சமாசாரங்களைக் கொண்ட ஒரு மியூசியமும் அங்கு உள்ளது. பழங்கால சர்ச். அதில் பிரார்த்தனைகள் தவிர ஏராளமான கண்காட்சிகளும் நடைபெறும்..டாம்ஸ்கொயரை ஒட்டி ஒரு பெரிய கட்டிடம், அதனை ராயல் பேலஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அங்கே ராஜ குடும்பத்தினர் யாரும் இப்போது வசிக்கவில்லை; அரசாங்கத்தின் முக்கிய கூட்டங்கள் அங்கே நடக்குமாம். ஆனால், நெப்போலியன் ஹாலந்தை கைப்பற்றியதும், இந்தப் பகுதியை ஆள்வதற்கு தன் தம்பி லூயிஸ் போனபார்ட்டை அனுப்பி வைத்தாராம். அந்த லூயிஸ் இந்த அரண்மனையில் தங்கியதால், அதற்கு ராயல் பேலஸ் என்று பெயர் வந்தது..சுற்றுப் பட்ட விஷயங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், டாம்ஸ்கொயரிலேயே பார்த்து ரசிக்க நிறைய உண்டு. சில இசைக்கலைஞர்கள் மெய் மறந்து ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பார்கள். எதிரே ஒரு தொப்பி வைக்கப்பட்டிருக்கும். சிறிது நேரம் இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, தொப்பியில் கொஞ்சம் சில்லறைகள் போட்டுவிட்டுப் போகிறார்கள் பார்வையாளர்கள்..இதைவிட இன்டரஸ்டிங்கான ஒன்று வேஷம் கட்டின மனிதர்கள். காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேஷம் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பார்கள். சுற்றுலாப்பயணிகள் அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொள்வார்கள். சும்மா இல்லை. அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும். பக்கத்திலேயே ஒற்றை சக்கர சைக்கிளில் சாகசம் பண்ணுவார் இன்னொருவர்..அருகிலேயே குழந்தைகள் தரையில் உட்கார்ந்துகொண்டு பொம்மலாட்டம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குதூகலமாக பொம்மலாட்டத்தை ரசிக்க, அந்த நிகழ்ச்சி முடியும் வரை பெற்றோர்கள் பொறுமையோடு அங்கே காத்திருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், குழந்தைகளுக்கு சோகம்; பெற்றோர்கள் முகத்தில் மலர்ச்சி!.டாம்ஸ்கொயர் ஒரு பொழுதுபோக்குக் களம் மட்டுமில்லை; ஒரு போராட்டக் களமும் கூட, சனி, ஞாயிறு என்றால், சிலர் குழுக்களாக வந்து பேனர்கள் வைத்து, தங்கள் பிரச்னைகள் பற்றி விளக்குவார்கள்..சீனாவில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உடல் உறுப்புக்கள் விற்பனை கனஜோராக நடந்துகொண்டிருக்கிறதாம். சில சீனர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் டாம்ஸ்கொயரில் கூடி, இது பற்றிய தூண்டு பிரசுரங்களை வினியோகித்து, மனித உறுப்பு விற்பனைக்கு எதிராக கையெழுத்து பெறுகிறார்கள்..இன்னொரு பக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அங்கே பார்த்தால் கடுமையான அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு பிரசார பேனர்கள்; புகைப்படங்கள்; அதற்கு சற்று தள்ளி சில யூதர்கள் "தீவிரவாதத்தை முறியடிப்போம்" என்று பாலஸ்தீனியர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்களின் பிரசாரங்கள் இங்கே டாம்ஸ்கொயரில் ஒரே இடத்தில் நடக்கிறது. இவர்கள் அனைவருமே முறைப்படி அரசாங்க அனுமதி பெற்றுதான் இப்படிச் செய்கிறார்கள்! வாழ்க ஜனநாயகம்! வாழ்க பேச்சுரிமை!."நம் ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் பேனர் வைத்து, துண்டுபிரசுரம் வினியோக்கிறார்களா" என தேடிப்பார்த்தேன். காணோம்!
எஸ். சந்திரமௌலி.நெதர்லாந்து நாட்டின் மிக முக்கியமான நகரம் ஆம்ஸ்டர்டாம். பல்லாண்டுகால வரலாறு கொண்ட நகரம் இது..ஆம்ஸ்டர்டாம் பெயர்க்காரணம் தெரியுமா? இந்த நகரத்தில் ஓடும் நதியின் பெயர் ஆம்ஸ்டெல். அந்த நதியின் மீது ஒரு அணையைக் கட்டினார்கள். அதுதான் ஆம்ஸ்டர்டாம். அங்கே இருந்த மீனவ கிராமம்தான் இன்று பெருநகரமாக வளர்ந்திருக்கிறது..பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில், பூமிக்கு மேலே டிராம், பஸ் என செமை பிசியான நகரம். ஆனாலும்கூட சாலையின் இரண்டு பக்கங்களிலும் சாலைக்கும், நடைபாதைக்கும் நடுவில் சைக்கிளில் செல்பவர்களுக்காக பிரத்யேகமான சைக்கிள் தடம் உண்டு. அங்கே ஆண்களும், பெண்களும் வயசு வித்தியாசம் இல்லாமல் சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்க்கலாம்..ஆம்ஸ்டர்டாம் நகரத்து மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பத்து நிமிஷ நடை தூரத்தில் உள்ளது 'டாம்ஸ்கொயர்' என்ற இடம். நகரின் மிக முக்கியமான இடம் இதுதான். எந்த நேரமும் ஜனங்களையும், புறாக்களையும் ஒரு சேரக் காணலாம்..புறாக்கூட்டத்துக்கு மத்தியில் கைகள் மேல், தோளில், தலையில் புறாக்கள் உட்கார்ந்திருக்க போட்டோ எடுத்துக் கொள்வது இங்கே மிகப் பிரபலம். இரண்டு பேர் கையில் ஒரு பையுடன் நிற்கிறார்கள். பையில் அரிசி. ஒரு கை அரிசியை உங்கள் கையில் கொடுத்ததும், அதை புறாக்களுக்கு நீங்கள் போடும்போது அவை உங்களை நெருங்கி வரும். அப்படியே கிளிக்கிக்கொள்ள வேண்டியதுதான். அரிசிக்காரருக்கு இஷ்டம் போல டிப்ஸ் கொடுத்துவிட்டு நகரலாம். அரிசியை உச்சந்தலையில் தூவிக்கொண்டு புறாக்களை தலைக்கே வரவழைத்து போட்டோ எடுத்துக் கொள்பவர்களும் உண்டு..டாம்ஸ்கொயரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. புகழ் பெற்ற 'மேடம் டூசாத் மெழுகுச் சிலை மியூசியம்' அங்குதான் உள்ளது. சின்ன வயசில் பத்திரிகைகளில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்று படித்திருக்கிறோம் இல்லையா? அந்த ரிப்ளியின் "நம்பினால் நம்புங்கள்" சமாசாரங்களைக் கொண்ட ஒரு மியூசியமும் அங்கு உள்ளது. பழங்கால சர்ச். அதில் பிரார்த்தனைகள் தவிர ஏராளமான கண்காட்சிகளும் நடைபெறும்..டாம்ஸ்கொயரை ஒட்டி ஒரு பெரிய கட்டிடம், அதனை ராயல் பேலஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அங்கே ராஜ குடும்பத்தினர் யாரும் இப்போது வசிக்கவில்லை; அரசாங்கத்தின் முக்கிய கூட்டங்கள் அங்கே நடக்குமாம். ஆனால், நெப்போலியன் ஹாலந்தை கைப்பற்றியதும், இந்தப் பகுதியை ஆள்வதற்கு தன் தம்பி லூயிஸ் போனபார்ட்டை அனுப்பி வைத்தாராம். அந்த லூயிஸ் இந்த அரண்மனையில் தங்கியதால், அதற்கு ராயல் பேலஸ் என்று பெயர் வந்தது..சுற்றுப் பட்ட விஷயங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், டாம்ஸ்கொயரிலேயே பார்த்து ரசிக்க நிறைய உண்டு. சில இசைக்கலைஞர்கள் மெய் மறந்து ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பார்கள். எதிரே ஒரு தொப்பி வைக்கப்பட்டிருக்கும். சிறிது நேரம் இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, தொப்பியில் கொஞ்சம் சில்லறைகள் போட்டுவிட்டுப் போகிறார்கள் பார்வையாளர்கள்..இதைவிட இன்டரஸ்டிங்கான ஒன்று வேஷம் கட்டின மனிதர்கள். காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேஷம் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பார்கள். சுற்றுலாப்பயணிகள் அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொள்வார்கள். சும்மா இல்லை. அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும். பக்கத்திலேயே ஒற்றை சக்கர சைக்கிளில் சாகசம் பண்ணுவார் இன்னொருவர்..அருகிலேயே குழந்தைகள் தரையில் உட்கார்ந்துகொண்டு பொம்மலாட்டம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குதூகலமாக பொம்மலாட்டத்தை ரசிக்க, அந்த நிகழ்ச்சி முடியும் வரை பெற்றோர்கள் பொறுமையோடு அங்கே காத்திருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், குழந்தைகளுக்கு சோகம்; பெற்றோர்கள் முகத்தில் மலர்ச்சி!.டாம்ஸ்கொயர் ஒரு பொழுதுபோக்குக் களம் மட்டுமில்லை; ஒரு போராட்டக் களமும் கூட, சனி, ஞாயிறு என்றால், சிலர் குழுக்களாக வந்து பேனர்கள் வைத்து, தங்கள் பிரச்னைகள் பற்றி விளக்குவார்கள்..சீனாவில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உடல் உறுப்புக்கள் விற்பனை கனஜோராக நடந்துகொண்டிருக்கிறதாம். சில சீனர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் டாம்ஸ்கொயரில் கூடி, இது பற்றிய தூண்டு பிரசுரங்களை வினியோகித்து, மனித உறுப்பு விற்பனைக்கு எதிராக கையெழுத்து பெறுகிறார்கள்..இன்னொரு பக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அங்கே பார்த்தால் கடுமையான அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு பிரசார பேனர்கள்; புகைப்படங்கள்; அதற்கு சற்று தள்ளி சில யூதர்கள் "தீவிரவாதத்தை முறியடிப்போம்" என்று பாலஸ்தீனியர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்களின் பிரசாரங்கள் இங்கே டாம்ஸ்கொயரில் ஒரே இடத்தில் நடக்கிறது. இவர்கள் அனைவருமே முறைப்படி அரசாங்க அனுமதி பெற்றுதான் இப்படிச் செய்கிறார்கள்! வாழ்க ஜனநாயகம்! வாழ்க பேச்சுரிமை!."நம் ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் பேனர் வைத்து, துண்டுபிரசுரம் வினியோக்கிறார்களா" என தேடிப்பார்த்தேன். காணோம்!