அரசியல்.– எஸ். சந்திரமௌலி.இந்திய ஜனநாயகம் "ஜனாதிபதி தேர்தல்" என்ற திருவிழா முடிந்து, அடுத்து "துணை ஜனாதிபத தேர்தல்" என்ற அடுத்த திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது..பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் ஜகதீப் தங்கர் வேட்பாளர்..காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளன..மேற்கு வங்காள கவர்னராக இருந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த தங்கர்..கோவா, ராஜஸ்தான், குஜராத் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா..முதலில், துணை ஜனாதிபதி பதவி பற்றிய சில முக்கியமான தகவல்களைப் பார்த்துவிடலாம்..ஜனாதிபதி தேர்தலில் மாநில சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிப்பார்கள். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். நியமனம் செய்யப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் வாக்குரிமை உண்டு. துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவை 20 எம்.பி.க்கள் முன் மொழிய, 20 எம்.பி.க்கள் வழி மொழிய வேண்டும். வேட்பு மனுவுடன் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை 15 ஆயிரம் ரூபாய்.துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவர்தான் பாராளுமன்ற மாநிலங்களவையின் நடவடிக்கைகளை நடத்துபவர்..இந்த ஐந்தாண்டுகளுக்குள் அவரது மரணம், ராஜினாமா, தகுதி நீக்கம் நிகழ்ந்தால், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் மரணமடைந்தால், உடனே துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்ட 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்..இந்திய துணை ஜனாதிபதிக்கு இவ்வளவு சம்பளம் என்று சட்டபூர்வமாக எங்கும் வரையறுக்கப்படவில்லை. ஆயினும், அவர் "ராஜ்ய சபையின் தலைவர்" என்ற முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் துணை ஜனாதிபதியின் மாதச் சம்பளம் நாலு லட்சம் ரூபாய். மாதம் ஒண்ணேகால் லட்சம் என்று இருந்த சம்பளம் 2018ல் உயர்த்தப்பட்டது. சம்பளத்தைத் தவிர அவருக்கு தினசரி அலவன்ஸ், அரசு பங்களா, மருத்துவ, பயண வசதிகள் போன்றவையும் உண்டு. பதவிக்காலம் முடிந்த பின், துணை ஜனாதிபதிக்கு மாதச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது..1950 துவங்கி, இதுவரை 13 பேர் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். துணை ஜனாதிபதியாக இருப்பவர்கள், அடுத்து ஜனாதிபதியாக பதவி ஏற்பது இந்திய அரசியலில் இருந்து வந்துள்ளது. டாக்டர் ராதா கிருஷ்ணன், ஜாகிர் உசைன், வி.வி. கிரி, ஆர்.வெங்கடராமன், சங்கர் தயாள் சர்மா,கே.ஆர்.நாராயணன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள். தன் பதவிக்காலத்தில் ஜாகிர் உசைன் இறந்தபோது, துணை ஜனாதிபதிவி.வி. கிரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வென்று ஜனாதிபதியானார். கிருஷ்ணகாந்த் துணை ஜனாதிபதியாக பதவியில் இருந்தபோதே மரணமடைந்தார். சுதந்திர இந்தியாவில் பிறந்து துணை ஜனாதிபதியான முதல் மனிதர் தற்போதைய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு..சரி! இப்போதைய துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வருவோம்.காங். கூட்டணி வேட்பாளரான 80 வயது மார்கரெட் ஆல்வா, சில காலமாக காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவாக இல்லை என்றாலும், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மாமனாரும், மாமியாரும் எம்.பி.யாக இருந்தவர்கள். ராஜிவ் காந்தி மற்றும் நரசிம்ம ராவ் அமைச்சரவைகளில் இவர் மந்திரியாக இருந்தவர். அதன் பிறகு, நான்கு மாநிலங்களில் ராஜ்பவன்வாசியாக இருந்தவர். இவர் தன் வாழ்க்கை அனுபவங்களை "கரேஜ் அண்டு கமிட்மென்ட்ஸ்" என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில் ஏராளமான சுவையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன..உதாரணத்துக்கு ஒன்று. 1974ல் இந்திரா காந்தியே, கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு காங்க். கட்சியின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவை அறிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன், பழைய காங்கிரஸ் வேட்பாளரான குருபாதசுவாமி, மார்கரெட் ஆல்வா ராஜ்ய சபா எம்.பி. ஆவதற்கான குறைந்த பட்ச வயது இல்லாததால், வேட்பு மனுவில் பொய்யான பிறந்த தேதி குறிப்பிட்டிருக்கிறார் என புகார் கொடுத்தார். ஒரே நாள் அவகாசத்தில் பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்டது. அன்று சனிக் கிழமை வேறு. இந்த திடீர் பிரச்னையால் மிரண்டு போனார் ஆல்வா. குடும்பத்தில் ஒரு மரணம் காரணமாக எல்லோரும் ஊருக்குப் போயிருந்தார்கள். ஆல்வா, தான் படித்த ஆர்.டி.சி. பெண்கள் ஹை ஸ்கூலின் நிர்வாகிகளை அணுகினார். அவர்கள் அன்று விடுமுறை என்றபோதிலும், பள்ளிக்கூட அலுவலகத்தைத் திறந்து, பழைய ஸ்கூல் ரெக்கார்டுகளையெல்லாம் தூசி தட்டி தேடினார்கள். ஒரு வழியாக பள்ளி இறுதிப் பரீட்சை எழுதிய 1958ஆம் ஆண்டு ரெக்கார்டுகளை எடுத்து, அவரது பிறந்த தேதி 14.4.1942 தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதன்பின் பிரச்னை ஏதுமில்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று, ராஜ்ய சபா எம்.பி. ஆனார் ஆல்வா. அப்போது அவருக்கு வயது 31..பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் ஜகதீப் தங்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த ஒரு ஏழை விவசாயி மகன். வயது 71. கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அகில இந்தியக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் 'ஜுன்ஜுனு' என்ற ஊரில் நடந்தது. அதுதான் தங்கரின் சொந்த ஊர். ஸ்கூல் படிக்கிற காலத்தில் படிப்பு மீதிருந்த ஆர்வத்தால் தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்றவர். ஜெய்பூர் மகாராஜா கல்லூரியில் பிசிக்சில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, அதன் பின் சட்டம் படித்தவர். தொழில் ரீதியாக வக்கீல். ராஜஸ்தானில் ஜாட் இனத்தர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பயன்பெற வழி வகுத்தவர்..இவரது அரசியல் பயணம், தேவிலால் ஆசியுடன் துவங்கியது. 1989ல் ஜுன்ஜுனு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அங்கே வெற்றி பெற்றார். சந்திர சேகர் அமைச்சரவையில் இடம்பெற்றார். நரசிம்மராவ் பிரதமர் ஆனபோது, காங்கிரசுக்கு வந்தார். ஆனால், ராஜஸ்தான் காங்கிரசில் அஷோக் கெலாட்டின் கோஷ்டி அரசியலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பா.ஜ.க.வில் சேர்ந்தார். ஆனால், அவரது கவனம் தனது வக்கீல் தொழிலில்தான் இருந்தது..அபாரமான ஸ்போர்ட்ஸ் பிரியர். கிரிக்கெட் ரசிகர். ராஜஸ்தான் ஒலிம்பிக் சங்கம், ராஜஸ்தான் டென்னிஸ் சங்கம் ஆகியவற்றில் தலைவராக இருந்தவர். 2019ல் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பின் மம்தாவுடனான மோதல் போக்கு காரணமாக சர்ச்சை நாயகர் ஆகிவிட்டார். அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதற்கு துர்கா பூஜை பந்தலில் கவர்னருக்கு கௌரவமான இருக்கை அளிக்கவில்லை என்கிற சிறிய விஷயம் தொடங்கி, கவர்னரது டிவிட்டர் கணக்கை முதலமைச்சர் முடக்குவது வரை பற்பல காரணங்கள் உண்டு. ஆனால், "நான் முதலமைச்சராகட்டும், மற்றவர்களாகட்டும் எவர் மீதும் தனிப்பட்ட முறையில் களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதில்லை; நடந்து கொண்டதில்லை; கவர்னருக்கு மாநில அரசியலில் இடமில்லை; ஆனால், மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு உண்டு" என்று அடிக்கடி கூறுவார் ஜகதீப் தங்கர்..ஜக்தீப் தங்கர்-சுதீஷ் தங்கர் தம்பதிகளுக்கு ஒரே பெண். பெயர் காம்னா. மாப்பிள்ளையும் சுப்ரீம் கோர்ட் வக்கீல்தான், கடந்த முறை பா.ஜ.க. ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தபோது "ராம்நாத் கோவிந்தா? அது யாரு?" என்று (நக்கலாக) கேட்டார் மம்தா பானர்ஜி. இப்போது அப்படிக் கேட்க வாய்ப்பில்லை. ஒரு வேளை, மனுஷர், கொல்கத்தா ராஜ்பவனை காலி செய்துவிட்டு, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்குப் போவது குறித்து சந்தோஷப்படுவாரோ?
அரசியல்.– எஸ். சந்திரமௌலி.இந்திய ஜனநாயகம் "ஜனாதிபதி தேர்தல்" என்ற திருவிழா முடிந்து, அடுத்து "துணை ஜனாதிபத தேர்தல்" என்ற அடுத்த திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது..பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் ஜகதீப் தங்கர் வேட்பாளர்..காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளன..மேற்கு வங்காள கவர்னராக இருந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த தங்கர்..கோவா, ராஜஸ்தான், குஜராத் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா..முதலில், துணை ஜனாதிபதி பதவி பற்றிய சில முக்கியமான தகவல்களைப் பார்த்துவிடலாம்..ஜனாதிபதி தேர்தலில் மாநில சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிப்பார்கள். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். நியமனம் செய்யப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் வாக்குரிமை உண்டு. துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவை 20 எம்.பி.க்கள் முன் மொழிய, 20 எம்.பி.க்கள் வழி மொழிய வேண்டும். வேட்பு மனுவுடன் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை 15 ஆயிரம் ரூபாய்.துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவர்தான் பாராளுமன்ற மாநிலங்களவையின் நடவடிக்கைகளை நடத்துபவர்..இந்த ஐந்தாண்டுகளுக்குள் அவரது மரணம், ராஜினாமா, தகுதி நீக்கம் நிகழ்ந்தால், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் மரணமடைந்தால், உடனே துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்ட 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்..இந்திய துணை ஜனாதிபதிக்கு இவ்வளவு சம்பளம் என்று சட்டபூர்வமாக எங்கும் வரையறுக்கப்படவில்லை. ஆயினும், அவர் "ராஜ்ய சபையின் தலைவர்" என்ற முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் துணை ஜனாதிபதியின் மாதச் சம்பளம் நாலு லட்சம் ரூபாய். மாதம் ஒண்ணேகால் லட்சம் என்று இருந்த சம்பளம் 2018ல் உயர்த்தப்பட்டது. சம்பளத்தைத் தவிர அவருக்கு தினசரி அலவன்ஸ், அரசு பங்களா, மருத்துவ, பயண வசதிகள் போன்றவையும் உண்டு. பதவிக்காலம் முடிந்த பின், துணை ஜனாதிபதிக்கு மாதச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது..1950 துவங்கி, இதுவரை 13 பேர் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். துணை ஜனாதிபதியாக இருப்பவர்கள், அடுத்து ஜனாதிபதியாக பதவி ஏற்பது இந்திய அரசியலில் இருந்து வந்துள்ளது. டாக்டர் ராதா கிருஷ்ணன், ஜாகிர் உசைன், வி.வி. கிரி, ஆர்.வெங்கடராமன், சங்கர் தயாள் சர்மா,கே.ஆர்.நாராயணன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள். தன் பதவிக்காலத்தில் ஜாகிர் உசைன் இறந்தபோது, துணை ஜனாதிபதிவி.வி. கிரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வென்று ஜனாதிபதியானார். கிருஷ்ணகாந்த் துணை ஜனாதிபதியாக பதவியில் இருந்தபோதே மரணமடைந்தார். சுதந்திர இந்தியாவில் பிறந்து துணை ஜனாதிபதியான முதல் மனிதர் தற்போதைய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு..சரி! இப்போதைய துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வருவோம்.காங். கூட்டணி வேட்பாளரான 80 வயது மார்கரெட் ஆல்வா, சில காலமாக காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவாக இல்லை என்றாலும், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மாமனாரும், மாமியாரும் எம்.பி.யாக இருந்தவர்கள். ராஜிவ் காந்தி மற்றும் நரசிம்ம ராவ் அமைச்சரவைகளில் இவர் மந்திரியாக இருந்தவர். அதன் பிறகு, நான்கு மாநிலங்களில் ராஜ்பவன்வாசியாக இருந்தவர். இவர் தன் வாழ்க்கை அனுபவங்களை "கரேஜ் அண்டு கமிட்மென்ட்ஸ்" என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில் ஏராளமான சுவையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன..உதாரணத்துக்கு ஒன்று. 1974ல் இந்திரா காந்தியே, கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு காங்க். கட்சியின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவை அறிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன், பழைய காங்கிரஸ் வேட்பாளரான குருபாதசுவாமி, மார்கரெட் ஆல்வா ராஜ்ய சபா எம்.பி. ஆவதற்கான குறைந்த பட்ச வயது இல்லாததால், வேட்பு மனுவில் பொய்யான பிறந்த தேதி குறிப்பிட்டிருக்கிறார் என புகார் கொடுத்தார். ஒரே நாள் அவகாசத்தில் பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்டது. அன்று சனிக் கிழமை வேறு. இந்த திடீர் பிரச்னையால் மிரண்டு போனார் ஆல்வா. குடும்பத்தில் ஒரு மரணம் காரணமாக எல்லோரும் ஊருக்குப் போயிருந்தார்கள். ஆல்வா, தான் படித்த ஆர்.டி.சி. பெண்கள் ஹை ஸ்கூலின் நிர்வாகிகளை அணுகினார். அவர்கள் அன்று விடுமுறை என்றபோதிலும், பள்ளிக்கூட அலுவலகத்தைத் திறந்து, பழைய ஸ்கூல் ரெக்கார்டுகளையெல்லாம் தூசி தட்டி தேடினார்கள். ஒரு வழியாக பள்ளி இறுதிப் பரீட்சை எழுதிய 1958ஆம் ஆண்டு ரெக்கார்டுகளை எடுத்து, அவரது பிறந்த தேதி 14.4.1942 தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதன்பின் பிரச்னை ஏதுமில்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று, ராஜ்ய சபா எம்.பி. ஆனார் ஆல்வா. அப்போது அவருக்கு வயது 31..பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் ஜகதீப் தங்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த ஒரு ஏழை விவசாயி மகன். வயது 71. கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அகில இந்தியக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் 'ஜுன்ஜுனு' என்ற ஊரில் நடந்தது. அதுதான் தங்கரின் சொந்த ஊர். ஸ்கூல் படிக்கிற காலத்தில் படிப்பு மீதிருந்த ஆர்வத்தால் தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்றவர். ஜெய்பூர் மகாராஜா கல்லூரியில் பிசிக்சில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, அதன் பின் சட்டம் படித்தவர். தொழில் ரீதியாக வக்கீல். ராஜஸ்தானில் ஜாட் இனத்தர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பயன்பெற வழி வகுத்தவர்..இவரது அரசியல் பயணம், தேவிலால் ஆசியுடன் துவங்கியது. 1989ல் ஜுன்ஜுனு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அங்கே வெற்றி பெற்றார். சந்திர சேகர் அமைச்சரவையில் இடம்பெற்றார். நரசிம்மராவ் பிரதமர் ஆனபோது, காங்கிரசுக்கு வந்தார். ஆனால், ராஜஸ்தான் காங்கிரசில் அஷோக் கெலாட்டின் கோஷ்டி அரசியலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பா.ஜ.க.வில் சேர்ந்தார். ஆனால், அவரது கவனம் தனது வக்கீல் தொழிலில்தான் இருந்தது..அபாரமான ஸ்போர்ட்ஸ் பிரியர். கிரிக்கெட் ரசிகர். ராஜஸ்தான் ஒலிம்பிக் சங்கம், ராஜஸ்தான் டென்னிஸ் சங்கம் ஆகியவற்றில் தலைவராக இருந்தவர். 2019ல் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பின் மம்தாவுடனான மோதல் போக்கு காரணமாக சர்ச்சை நாயகர் ஆகிவிட்டார். அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதற்கு துர்கா பூஜை பந்தலில் கவர்னருக்கு கௌரவமான இருக்கை அளிக்கவில்லை என்கிற சிறிய விஷயம் தொடங்கி, கவர்னரது டிவிட்டர் கணக்கை முதலமைச்சர் முடக்குவது வரை பற்பல காரணங்கள் உண்டு. ஆனால், "நான் முதலமைச்சராகட்டும், மற்றவர்களாகட்டும் எவர் மீதும் தனிப்பட்ட முறையில் களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதில்லை; நடந்து கொண்டதில்லை; கவர்னருக்கு மாநில அரசியலில் இடமில்லை; ஆனால், மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு உண்டு" என்று அடிக்கடி கூறுவார் ஜகதீப் தங்கர்..ஜக்தீப் தங்கர்-சுதீஷ் தங்கர் தம்பதிகளுக்கு ஒரே பெண். பெயர் காம்னா. மாப்பிள்ளையும் சுப்ரீம் கோர்ட் வக்கீல்தான், கடந்த முறை பா.ஜ.க. ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தபோது "ராம்நாத் கோவிந்தா? அது யாரு?" என்று (நக்கலாக) கேட்டார் மம்தா பானர்ஜி. இப்போது அப்படிக் கேட்க வாய்ப்பில்லை. ஒரு வேளை, மனுஷர், கொல்கத்தா ராஜ்பவனை காலி செய்துவிட்டு, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்குப் போவது குறித்து சந்தோஷப்படுவாரோ?