தலையங்கம்.இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் வளர்ச்சி இலக்கை தாண்டிவிட்டன. ஆனால், 75 ஆண்டுகளாக நமது நாட்டில் ஏழ்மை இன்னும் ஒழியவில்லை.."இலவச கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில் நாட்டின் வளர்ச்சியை இலவசங்கள் தடுக்கிறது" என்று பிரதமர் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.."சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்குச் சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்" என்று பிரதமர் மற்றொரு கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.."இலவசங்கள் ஒரு போதும் இலவசங்கள் இல்லை. அரசியல் கட்சிகள் தேர்தல்களில் இலவசம் குறித்த வாக்குறுதிகளைத் தரும்போது அதற்கான நிதியாதாரங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்க வேண்டும்" என்ற கருத்தை ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பினர் அசீமா கோயல் பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்..உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் "அரசியல் கட்சிகள் இலவசங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கக் கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்தக் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்றும் கோரி பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிறார்..பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு எதிரான பொதுநல வழக்கை ஆதரித்துள்ளது. இதுபோன்ற இலவசங்கள் வழங்குவது எதிர்காலத்தில் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அதுஉச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது..இந்தப் பின்னணியில் "இலவசம் அறிவிப்பு" விஷயம் நாடு தழுவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் விவாதம் வலுக்கிறது..இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகளை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு, தி.மு.க. சார்பில் அளித்த மனுவில் கல்வி, குடிநீர், குறைந்தபட்ச மின்சார அலகுகள் போன்ற வாக்குறுதிகளை இலவசங்கள் எனக் கூற முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது..அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், கனடா உள்பட 39 நாடுகளில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தால் அவர்கள் வளர்ந்த நாடுகள் பட்டியில் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்தியாவிலும் இலவசக் கல்வி, இலவச சிகிச்சை அளிக்கும் போதுதான் அனைத்து சமூகமும் முழு எழுச்சி பெற முடியும். எனவே, மருத்துவம் மற்றும் கல்வியில் அரசுகள் நிதி செலவிடுவது இலவசம் ஆகாது. அது சமூகப்புரட்சி. "மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 இலவச பஸ்வசதி போன்ற அறிவிப்புகள் சமூக புரட்சியின் அடுத்த கட்டம்" என்கிறார் தமிழக முதல்வர்..தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசங்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் யாரும் வெற்றி பெறுவதில்லை, இலவசங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுத் தோற்றுப்போன கட்சிகளும் உண்டு..வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியைப்பிடித்து அதைச் செய்யாமலிருக்கும் கட்சிகளும் உண்டு. "2 கோடி பேருக்கு வேலை, கருப்பு பணத்தை மீட்போம், இந்திய ரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருக்கு இணையாக உயர்த்துவோம், பெட்ரோல், டீசல் விலையைப் பாதியாக குறைப்போம், வாராக்கடன்களை வசூலிப்போம்" என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன பா.ஜ.க. தான் இப்போது ஒன்றிய அரசில் ஆட்சியிலிருக்கிறது..மக்களுக்கு இலவசங்களினால் "வரிசெலுத்துவோரின் சுமை அதிகரிக்கிறது" என்று சொல்லும் அரசுக்குப் பெரிய கார்பேர்ட் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ததும், ரூ. 5 லட்சம் கோடி வட்டியை ரத்து செய்த நடவடிக்கை தான் இன்று தேசத்தைப் பாதித்து நிற்கிறது. இலவசத் திட்டங்கள் அல்ல என்ற எதிர்க்கட்சிகள் எழுப்பும் குரலிலும் நியாயமிருக்கிறது..அதனால் இப்போது விவாதிக்கப்படவேண்டிய கேள்வி அரசியல் கட்சிகள் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வழங்கலாமா கூடாதா என்பதல்ல..ஏழ்மையை ஒழிக்க, ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கு இலவசங்கள் வழங்கப்படவேண்டும், ஆனால் இப்போது விவாதிக்கப்படவேண்டிய கேள்வி "யாருக்கு எது இலவசம் என்பதுதான். சமூக வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பல இலவசத் திட்டங்களினால் பயன் பெறுவோரில் பலரின் பொருளாதார நிலை அவற்றை இலவசமாக பெறவேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்..இலவசங்களை வழங்குவதில் அது யாருக்கு? என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கான அளவுகோலைத் தீர்மானித்துத் தெளிவாக அறிவிப்பதன் மூலம் அரசின் பொருளாதார சுமை குறையும்.
தலையங்கம்.இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் வளர்ச்சி இலக்கை தாண்டிவிட்டன. ஆனால், 75 ஆண்டுகளாக நமது நாட்டில் ஏழ்மை இன்னும் ஒழியவில்லை.."இலவச கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில் நாட்டின் வளர்ச்சியை இலவசங்கள் தடுக்கிறது" என்று பிரதமர் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.."சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்குச் சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்" என்று பிரதமர் மற்றொரு கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.."இலவசங்கள் ஒரு போதும் இலவசங்கள் இல்லை. அரசியல் கட்சிகள் தேர்தல்களில் இலவசம் குறித்த வாக்குறுதிகளைத் தரும்போது அதற்கான நிதியாதாரங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்க வேண்டும்" என்ற கருத்தை ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பினர் அசீமா கோயல் பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்..உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் "அரசியல் கட்சிகள் இலவசங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கக் கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்தக் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்றும் கோரி பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிறார்..பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு எதிரான பொதுநல வழக்கை ஆதரித்துள்ளது. இதுபோன்ற இலவசங்கள் வழங்குவது எதிர்காலத்தில் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அதுஉச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது..இந்தப் பின்னணியில் "இலவசம் அறிவிப்பு" விஷயம் நாடு தழுவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் விவாதம் வலுக்கிறது..இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகளை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு, தி.மு.க. சார்பில் அளித்த மனுவில் கல்வி, குடிநீர், குறைந்தபட்ச மின்சார அலகுகள் போன்ற வாக்குறுதிகளை இலவசங்கள் எனக் கூற முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது..அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், கனடா உள்பட 39 நாடுகளில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தால் அவர்கள் வளர்ந்த நாடுகள் பட்டியில் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்தியாவிலும் இலவசக் கல்வி, இலவச சிகிச்சை அளிக்கும் போதுதான் அனைத்து சமூகமும் முழு எழுச்சி பெற முடியும். எனவே, மருத்துவம் மற்றும் கல்வியில் அரசுகள் நிதி செலவிடுவது இலவசம் ஆகாது. அது சமூகப்புரட்சி. "மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 இலவச பஸ்வசதி போன்ற அறிவிப்புகள் சமூக புரட்சியின் அடுத்த கட்டம்" என்கிறார் தமிழக முதல்வர்..தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசங்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் யாரும் வெற்றி பெறுவதில்லை, இலவசங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுத் தோற்றுப்போன கட்சிகளும் உண்டு..வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியைப்பிடித்து அதைச் செய்யாமலிருக்கும் கட்சிகளும் உண்டு. "2 கோடி பேருக்கு வேலை, கருப்பு பணத்தை மீட்போம், இந்திய ரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருக்கு இணையாக உயர்த்துவோம், பெட்ரோல், டீசல் விலையைப் பாதியாக குறைப்போம், வாராக்கடன்களை வசூலிப்போம்" என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன பா.ஜ.க. தான் இப்போது ஒன்றிய அரசில் ஆட்சியிலிருக்கிறது..மக்களுக்கு இலவசங்களினால் "வரிசெலுத்துவோரின் சுமை அதிகரிக்கிறது" என்று சொல்லும் அரசுக்குப் பெரிய கார்பேர்ட் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ததும், ரூ. 5 லட்சம் கோடி வட்டியை ரத்து செய்த நடவடிக்கை தான் இன்று தேசத்தைப் பாதித்து நிற்கிறது. இலவசத் திட்டங்கள் அல்ல என்ற எதிர்க்கட்சிகள் எழுப்பும் குரலிலும் நியாயமிருக்கிறது..அதனால் இப்போது விவாதிக்கப்படவேண்டிய கேள்வி அரசியல் கட்சிகள் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வழங்கலாமா கூடாதா என்பதல்ல..ஏழ்மையை ஒழிக்க, ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கு இலவசங்கள் வழங்கப்படவேண்டும், ஆனால் இப்போது விவாதிக்கப்படவேண்டிய கேள்வி "யாருக்கு எது இலவசம் என்பதுதான். சமூக வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பல இலவசத் திட்டங்களினால் பயன் பெறுவோரில் பலரின் பொருளாதார நிலை அவற்றை இலவசமாக பெறவேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்..இலவசங்களை வழங்குவதில் அது யாருக்கு? என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கான அளவுகோலைத் தீர்மானித்துத் தெளிவாக அறிவிப்பதன் மூலம் அரசின் பொருளாதார சுமை குறையும்.