எஸ். சந்திரமௌலி தமிழ்நாடு வனத்துறை வட்டாரத்தில் “யானை டாக்டர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி. சுருக்கமாக டாக்டர் கே, என்றும் சொல்லுவார்கள். அவர், சர்வதேச புகழ்பெற்ற யானை எக்ஸ்பர்ட். யானைகள் பற்றி சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதி இருக்கிறார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் படித்துவிட்டு, கால்நடை துணை சர்ஜன் ஆக 1952ல் தன் பணியைத் துவக்கியவர்..தமிழ்நாடு அரசாங்கத்தால், தமிழ்நாட்டில் உள்ள யானைகள் அனைத்துக்கும் “புத்துணர்ச்சி முகாம்” நடத்தப்படுகின்றன என்பது நமக்குத் தெரியும். யானைகளுக்கு அத்தகைய புத்துணர்ச்சி முகாம்கள் அவசியம் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை கூறியதும், அதனை சிறப்பாக செயல்படுத்தியவரும் அவர்தான். “யானைகளைப் பிடிப்பது, அவற்றுக்கு பயிற்சி அளிப்பது, அவற்றின் உடல்நலத்தைப் பராமரிப்பது, நோய்ச் சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை செய்வது, இறந்த யானைகளின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்வது” என்று அனைத்திலும் பல்லாண்டுகால அனுபவசாலி அவர்.இயன் டக்லஸ் ஹாமில்டன் என்ற பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக ஒரு முறை முதுமலை சரணாலத்துக்கு வந்திருந்தார். அவர், முதுமலை யானைகள் முகாமில் உள்ள யானைகள், எந்த அளவுக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் நட்புடனும், பாசத்துடனும் இருக்கின்றன; அவரது குரலுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்கின்றன என்று நேரடியாகக் கண்டு மிகவும் வியந்து போனார்..அந்த பெருமைக்குரிய யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தியை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால், 1989ஆம் வருட கல்கி தீபாவளி மலருக்காக பேட்டி கண்டேன். ரொம்பவும் உற்சாகமாக தனது யானை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அந்த அபூர்வ மனிதருடனான சந்திப்பு என் ஆயுசுக்கும் மறக்காது.பழக்கப்பட்ட கும்கி யானைகளின் உதவியுடன், சுமார் 150க்கும் மேற்பட்ட காட்டு யானைகளைப் பிடித்த அனுபவம் அவருக்கு உண்டு. கரணம் தப்பினால் மரணம் என்னும்படியாக ரொம்பவும் ரிஸ்க் எடுத்து அவர் செய்த காரியங்கள் பல உண்டு. காட்டு யானைகளை வனத்துறையினர் எப்படிப் பிடிப்பார்கள் என்பதை அவரே சொல்லக் கேட்போமா?“யானைகளைப் பிடிப்பதற்கு ஏற்ற பருவம் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை. அந்த சமயத்தில்தான் காட்டில் துளிர் விடும் மூங்கில் இலைகளை சாப்பிடுவதற்காக மலைப்பகுதிகளில் இருந்து யானைகள் இறங்கி வந்து அலைந்து திரியும்.12 அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகளை வெட்டுவோம். தரைமட்டத்தில் குழி 12 அடி நீள, அகலம் கொண்டிருந்தாலும், குழியின் கீழ்ப்பகுதி ஒன்பதுக்கு ஒன்பது அளவில்தான் இருக்கும். குழியின் பக்கவாட்டுப் பகுதி சரிவாக இருக்கும். குழிக்குள் ஆறு அடி உயர்த்துக்கு புல்கட்டு போன்றவற்றைப் போட்டு மெத்து, மெத்டென்று ஆக்கிவிடுவோம். பள்ளத்தின் மேல் பகுதியில் மூங்கில் கட்டைகளை வைத்து, அவற்றின் மேலே, தழைகள், சருகுகளைப் போட்டு, குழி வெளியில் தெரியாதபடி மறைத்துவிடுவோம்.யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வரும். ஒரு யானை குழியில் விழுந்துவிட்டால், மற்ற யானைகள் சிதறி ஓடும். அப்படி சிதறி ஓடும் யானைகளையும் பிடிப்பதற்காக “ஃ” வடிவில் குழிகளை வெட்டி வைப்போம். அப்போது ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட யானைகளைப் பிடிக்கலாம் அல்லவா?குழிகளை காட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வெட்டிவிடக் கூடாது. காடுகளில் யானைகள் போகிற பிரத்தியேக பாதைகளை முதலில் கண்டுபிடித்து அந்தப் பாதைகளை சில நாட்கள் காட்டிலாகா ஊழியர்களைக் கொண்டு கண்காணிக்கச் செய்து, யானைகளின் நடமாட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம். அதன் பிறகுதான் யானைகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம். யானைகள் போகும் பாதைகளில், வழி நெடுக சுமார் முப்பது, நாற்பது குழிகள் வரை கூட வெட்டி வைப்போம். ஆனால், அனைத்திலுமே ஒரே சமயத்தில் யானைகள் பிடிபடும் என்று கூறிவிட முடியாது. குழிகள் தயாரானதும், ஆங்காங்கே குழி கண்காணிப்பாளர்களை நிறுத்தி வைப்போம். யானைகள் குழிகளில் விழுந்ததும் அவர்கள் வந்து தகவல் தெரிவிப்பார்கள்.பிடிபட்ட யானைகளை எப்படி குழிக்குள்ளே இருந்து வெளியில் எடுப்பார்கள்?“அது ஒரு அபாயமான காரியம்தான். அதற்கு பழக்கப்பட்ட யானைகளை (கும்கி) பயன்படுத்துவோம். ஒரு யானைக்கு நாலு யானைகள் தேவைப்படும். காட்டுக் கொடிகளின் நார் கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் நாலு அங்குல பருமன் கொண்ட வடங்கள் தயார் செய்வோம். யானையைக் கட்டி இழுக்கும்போது அறுந்து போகாதபடி ரொம்ப வலுவாக இருக்கும். பிடிபட்ட யானை என்ன முரண்டு பிடித்தாலும், பழக்கப்பட்ட யானைகளின் உதவியோடு அவற்றை குழியிலிருந்து வெளியில் எடுத்து, யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்றுவிடுவோம்.பிடித்துக் கொண்டு வந்த யானையை அடைப்பதற்கு திடமான மரத்தாலான கொட்டடி தயாராக இருக்கும். கொட்டடியின் வாயில் வரை பிடிபட்ட யானையைக் கொண்டு சென்று, சடாலென்று அந்த யானையைக் கொட்டடிக்குள்ளே தள்ளி, வாயிலை அடைத்துவிடுவோம். பிடிபட்ட யானை என்னத்தான் முட்டி மோதினாலும், கொட்டடியை தகர்த்து விட்டு வெளியில் வர முடியாது. பிடிபட்ட இரண்டு நாட்கள் வரை உணவு தராமலேயோ அல்லது மிகக்குறைவாக உணவு கொடுத்தோ அதன் குணத்தைக் கண்காணிப்போம். அதற்கென்று தனியாக ஒரு பாகனைப் போடுவோம். அந்தப் பாகன், கொட்டடியின் வெளியில் நின்று கொண்டு, யானை ஓரமாக வரும்போது தட்டிக் கொடுத்து, ஒரு வித நட்பை ஏற்படுத்துவார். அதனுடன் பேசுவார். இதன் மூலமாக பாகனின் குரலும், வாசனையும் யானைக்குப் பரிச்சயமாகும். அவ்வப்போது யானைக்கு கரும்பு கொடுப்பார். நாளடைவில், பாகன் யானைக்கு கரும்பு கொடுப்பதற்கு பதிலாக, யானையே பாகன் இருக்கும் பக்கமாக வந்து கரும்புக்காக நிற்கும். கரும்பு கொடுத்தவுடன், தலையை அசைத்து வாங்கிக்கொள்ளும். “பாகனுடன் யானை நன்றாகப் பழகிவிட்டது” என்று தெரிந்ததும், பழகிய யானைகளின் உதவியுடன் பல விதமான வேலைகளையும் செய்யப் பயிற்சி கொடுப்போம்..யானைகளைப் பிடிக்கும் குழியில் கருவுற்ற யானைகள் விழுந்துவிட்டால், அதனை பத்திரமாக வெளியில் எடுத்து, மறுபடியும் காட்டுக்குள்ளேயே விட்டுவிடுவது வழக்கம். யானையின் கர்பக்காலம் 20 முதல் 22 மாதங்கள். தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பில் இருந்த ‘தாரா’ என்ற யானை 80 வருடங்கள் உயிரோடு இருந்தது. பதினோரு தடவைகளில் 12 குட்டிகள் போட்டது. (ஓருமுறை இரட்டை) அதேபோல, ‘ரதி’ என்ற யானையும் 10 குட்டிகள் போட்டது. ‘தேவகி’ என்ற யானை ஒரு இரட்டையையும் சேர்த்து ஒன்பது குட்டிகள் போட்டது.யானை டாக்டருக்கு பல திகிலான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அவர் கூறுகிறார்: “ஒரு தடவை யானைகளைப் பிடிக்க குழிகள் வெட்டி இருந்தோம். ஒரு யானைக்கூட்டம் அந்தப் பகுதியைக் கடந்தபோது ஒரு குட்டி யானை அந்தப் பள்ளத்தில் விழுந்துவிட்டது. யானைக் கூட்டம் விலகிச் சென்ற பிறகு, குட்டி யானையை வெளியில் எடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று எங்கிருந்தோ ஒரு பெரிய யானை (தாய் யானை) எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அந்த ஒரு கணம் எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. ஆனால், சமயோஜிதமாக நான் உரக்க கத்தி எல்லோரையும் எச்சரித்துவிட்டேன். எல்லோரும் வேகமாக ஓடி, ஒரு பெரிய குழிக்கு அந்தப் பக்கமாக நின்று கொண்டுவிட்டோம். எங்களை நோக்கி ஓடிவந்த யானை, இடையில் குழி இருப்பது தெரியாமல், அதற்குள் விழுந்துவிட்டது. அரை நிமிடம் தாமத்திருந்தால் கூட அந்த யானை அன்றைய தினம் எங்களில் ஒருவரையாவது பலி வாங்கி இருக்கும்.“அப்புறம் என்ன ஆச்சு டாக்டர்?”“வேகமாக ஓடி வந்த யானை, கால் இடறி குழிக்குள் விழுந்ததால், குழியின் பக்கவாட்டில் மண்டைப்பகுதி மோதி, யானை இறந்து போனது. யானையின் மண்டை ஓட்டு எலும்புகள் மோசமாக உடைந்திருந்தன என்றால் அந்த யானை என்ன வேகத்தில் ஓடி வந்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்! எல்லாம் தாய்ப் பாசம் கொடுத்த வேகம்! அந்த துயரமான சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.இன்னொரு அனுபவமும் சொல்கிறேன்... ஒரு சமயம் சுமார் ஐந்தே முக்கால் அடி உயரமுள்ள ஒரு யானை குழிக்குள்ளே விழுந்துவிட்டதாக தகவல் வந்தது. வடம், கும்கி யானை சகிதம் ஸ்பாட்டுக்கு விரைந்தோம். சுமார் ஐந்து மணி நேரம் முயற்சி செய்தும், வடம், யானையின் கழுத்தில் சரியாக விழவில்லை. அப்போது நானும் கருப்பன் என்கிற வனத்துறை ஊழியரும் செய்த காரியத்தை இன்று நினைத்தாலும் முதுகுத் தண்டு உறைந்துபோகும். அது எத்தகைய மூடச் செயல் என்றும் தோன்றும். ஆமாம்! சற்றும் யோசிக்காமல், நானும் கருப்பனும் யானை இருந்த குழிக்குள்ளே குதித்துவிட்டோம். குதித்த வேகத்தில் மின்னல் போல இயங்கி யானையின் கழுத்தில் வடத்தை சரியாக மாட்டிவிட்டோம். அடுத்த சில விநாடிகளில் வேறு ஒரு வடத்தைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி வந்துவிட்டோம். எல்லாம் சில வினாடிகளில் கடவுள் புண்ணியத்தில் ஆபத்தில்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்தது. அன்று மட்டும் யானை எங்களில் ஒருவரையோ, அல்லது இருவரையுமோ குழியின் சுவற்றோடு சேர்த்து அழுத்தி இருந்தால்… அல்லது காலால் மிதித்திருந்தால்…இன்று நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது!.யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் வன அனுவபவங்களை வைத்து மிக நீளமான ஒரு கதையை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மூன்று பகுதிகளாக எழுதப்பட்ட அற்புதமான கதை. என்னுடனான பேட்டியில் சொல்லாத ஒரு முக்கியமான விஷயம் ஜெயமோகனின் கதையில் இடம்பெற்றுள்ளது. காட்டுப் பகுதிகளில் ஜாலியாக பிக்னிக் செல்பவர்கள் மது அருந்திவிட்டு, காலி பீர் பாட்டில்களை வீசி எறிந்துவிட்டுப் போவது ரொம்ப காலமாக நடக்கும் வெகு சகஜமான விஷயம். ஆனால், அந்த உடைந்த மது பாட்டில்கள் காடுகளில் திரியும் யானைகளுக்கு எத்தகைய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? யானைகள் செல்லும் வழித்தடங்களில் வீசி எறியப்படும் பாட்டில்கள் உடைந்து, அதன் கூரான பகுதிகள் யானையின் கால்களில் குத்திவிடும். யானையின் அபரிமிதமான எடை காரணமாக உடைந்த பாட்டிலின் பகுதி உள்ளே ஆழமாகச் சென்று, காயத்தை ஏற்படுத்தும்; ரத்தம் வழியும். யானை நடக்க முடியாமல் சிரமப்படும். அடுத்த சில நாட்களில் யானையின் நடமாட்டம் முடங்கிவிடும். நாளடைவில் அந்த காயம் அழுகி, சீழ் பிடித்து, யானையின் உயிரையே பலி வாங்கிவிடும்.ரோட்டோரங்களில் உடைந்த மதுப் புட்டிகளைப் பார்க்கிறபோதெல்லாம் எனக்கு காடுகளில் அந்த பாட்டில்கள் குத்தி, பலியாகும் யானைகளும், யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தியும், ஜெயமோகனும், நினைவுக்கு வருகிறார்கள்.(தொடரும்)
எஸ். சந்திரமௌலி தமிழ்நாடு வனத்துறை வட்டாரத்தில் “யானை டாக்டர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி. சுருக்கமாக டாக்டர் கே, என்றும் சொல்லுவார்கள். அவர், சர்வதேச புகழ்பெற்ற யானை எக்ஸ்பர்ட். யானைகள் பற்றி சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதி இருக்கிறார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் படித்துவிட்டு, கால்நடை துணை சர்ஜன் ஆக 1952ல் தன் பணியைத் துவக்கியவர்..தமிழ்நாடு அரசாங்கத்தால், தமிழ்நாட்டில் உள்ள யானைகள் அனைத்துக்கும் “புத்துணர்ச்சி முகாம்” நடத்தப்படுகின்றன என்பது நமக்குத் தெரியும். யானைகளுக்கு அத்தகைய புத்துணர்ச்சி முகாம்கள் அவசியம் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை கூறியதும், அதனை சிறப்பாக செயல்படுத்தியவரும் அவர்தான். “யானைகளைப் பிடிப்பது, அவற்றுக்கு பயிற்சி அளிப்பது, அவற்றின் உடல்நலத்தைப் பராமரிப்பது, நோய்ச் சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை செய்வது, இறந்த யானைகளின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்வது” என்று அனைத்திலும் பல்லாண்டுகால அனுபவசாலி அவர்.இயன் டக்லஸ் ஹாமில்டன் என்ற பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக ஒரு முறை முதுமலை சரணாலத்துக்கு வந்திருந்தார். அவர், முதுமலை யானைகள் முகாமில் உள்ள யானைகள், எந்த அளவுக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் நட்புடனும், பாசத்துடனும் இருக்கின்றன; அவரது குரலுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்கின்றன என்று நேரடியாகக் கண்டு மிகவும் வியந்து போனார்..அந்த பெருமைக்குரிய யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தியை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால், 1989ஆம் வருட கல்கி தீபாவளி மலருக்காக பேட்டி கண்டேன். ரொம்பவும் உற்சாகமாக தனது யானை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அந்த அபூர்வ மனிதருடனான சந்திப்பு என் ஆயுசுக்கும் மறக்காது.பழக்கப்பட்ட கும்கி யானைகளின் உதவியுடன், சுமார் 150க்கும் மேற்பட்ட காட்டு யானைகளைப் பிடித்த அனுபவம் அவருக்கு உண்டு. கரணம் தப்பினால் மரணம் என்னும்படியாக ரொம்பவும் ரிஸ்க் எடுத்து அவர் செய்த காரியங்கள் பல உண்டு. காட்டு யானைகளை வனத்துறையினர் எப்படிப் பிடிப்பார்கள் என்பதை அவரே சொல்லக் கேட்போமா?“யானைகளைப் பிடிப்பதற்கு ஏற்ற பருவம் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை. அந்த சமயத்தில்தான் காட்டில் துளிர் விடும் மூங்கில் இலைகளை சாப்பிடுவதற்காக மலைப்பகுதிகளில் இருந்து யானைகள் இறங்கி வந்து அலைந்து திரியும்.12 அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகளை வெட்டுவோம். தரைமட்டத்தில் குழி 12 அடி நீள, அகலம் கொண்டிருந்தாலும், குழியின் கீழ்ப்பகுதி ஒன்பதுக்கு ஒன்பது அளவில்தான் இருக்கும். குழியின் பக்கவாட்டுப் பகுதி சரிவாக இருக்கும். குழிக்குள் ஆறு அடி உயர்த்துக்கு புல்கட்டு போன்றவற்றைப் போட்டு மெத்து, மெத்டென்று ஆக்கிவிடுவோம். பள்ளத்தின் மேல் பகுதியில் மூங்கில் கட்டைகளை வைத்து, அவற்றின் மேலே, தழைகள், சருகுகளைப் போட்டு, குழி வெளியில் தெரியாதபடி மறைத்துவிடுவோம்.யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வரும். ஒரு யானை குழியில் விழுந்துவிட்டால், மற்ற யானைகள் சிதறி ஓடும். அப்படி சிதறி ஓடும் யானைகளையும் பிடிப்பதற்காக “ஃ” வடிவில் குழிகளை வெட்டி வைப்போம். அப்போது ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட யானைகளைப் பிடிக்கலாம் அல்லவா?குழிகளை காட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வெட்டிவிடக் கூடாது. காடுகளில் யானைகள் போகிற பிரத்தியேக பாதைகளை முதலில் கண்டுபிடித்து அந்தப் பாதைகளை சில நாட்கள் காட்டிலாகா ஊழியர்களைக் கொண்டு கண்காணிக்கச் செய்து, யானைகளின் நடமாட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம். அதன் பிறகுதான் யானைகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம். யானைகள் போகும் பாதைகளில், வழி நெடுக சுமார் முப்பது, நாற்பது குழிகள் வரை கூட வெட்டி வைப்போம். ஆனால், அனைத்திலுமே ஒரே சமயத்தில் யானைகள் பிடிபடும் என்று கூறிவிட முடியாது. குழிகள் தயாரானதும், ஆங்காங்கே குழி கண்காணிப்பாளர்களை நிறுத்தி வைப்போம். யானைகள் குழிகளில் விழுந்ததும் அவர்கள் வந்து தகவல் தெரிவிப்பார்கள்.பிடிபட்ட யானைகளை எப்படி குழிக்குள்ளே இருந்து வெளியில் எடுப்பார்கள்?“அது ஒரு அபாயமான காரியம்தான். அதற்கு பழக்கப்பட்ட யானைகளை (கும்கி) பயன்படுத்துவோம். ஒரு யானைக்கு நாலு யானைகள் தேவைப்படும். காட்டுக் கொடிகளின் நார் கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் நாலு அங்குல பருமன் கொண்ட வடங்கள் தயார் செய்வோம். யானையைக் கட்டி இழுக்கும்போது அறுந்து போகாதபடி ரொம்ப வலுவாக இருக்கும். பிடிபட்ட யானை என்ன முரண்டு பிடித்தாலும், பழக்கப்பட்ட யானைகளின் உதவியோடு அவற்றை குழியிலிருந்து வெளியில் எடுத்து, யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்றுவிடுவோம்.பிடித்துக் கொண்டு வந்த யானையை அடைப்பதற்கு திடமான மரத்தாலான கொட்டடி தயாராக இருக்கும். கொட்டடியின் வாயில் வரை பிடிபட்ட யானையைக் கொண்டு சென்று, சடாலென்று அந்த யானையைக் கொட்டடிக்குள்ளே தள்ளி, வாயிலை அடைத்துவிடுவோம். பிடிபட்ட யானை என்னத்தான் முட்டி மோதினாலும், கொட்டடியை தகர்த்து விட்டு வெளியில் வர முடியாது. பிடிபட்ட இரண்டு நாட்கள் வரை உணவு தராமலேயோ அல்லது மிகக்குறைவாக உணவு கொடுத்தோ அதன் குணத்தைக் கண்காணிப்போம். அதற்கென்று தனியாக ஒரு பாகனைப் போடுவோம். அந்தப் பாகன், கொட்டடியின் வெளியில் நின்று கொண்டு, யானை ஓரமாக வரும்போது தட்டிக் கொடுத்து, ஒரு வித நட்பை ஏற்படுத்துவார். அதனுடன் பேசுவார். இதன் மூலமாக பாகனின் குரலும், வாசனையும் யானைக்குப் பரிச்சயமாகும். அவ்வப்போது யானைக்கு கரும்பு கொடுப்பார். நாளடைவில், பாகன் யானைக்கு கரும்பு கொடுப்பதற்கு பதிலாக, யானையே பாகன் இருக்கும் பக்கமாக வந்து கரும்புக்காக நிற்கும். கரும்பு கொடுத்தவுடன், தலையை அசைத்து வாங்கிக்கொள்ளும். “பாகனுடன் யானை நன்றாகப் பழகிவிட்டது” என்று தெரிந்ததும், பழகிய யானைகளின் உதவியுடன் பல விதமான வேலைகளையும் செய்யப் பயிற்சி கொடுப்போம்..யானைகளைப் பிடிக்கும் குழியில் கருவுற்ற யானைகள் விழுந்துவிட்டால், அதனை பத்திரமாக வெளியில் எடுத்து, மறுபடியும் காட்டுக்குள்ளேயே விட்டுவிடுவது வழக்கம். யானையின் கர்பக்காலம் 20 முதல் 22 மாதங்கள். தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பில் இருந்த ‘தாரா’ என்ற யானை 80 வருடங்கள் உயிரோடு இருந்தது. பதினோரு தடவைகளில் 12 குட்டிகள் போட்டது. (ஓருமுறை இரட்டை) அதேபோல, ‘ரதி’ என்ற யானையும் 10 குட்டிகள் போட்டது. ‘தேவகி’ என்ற யானை ஒரு இரட்டையையும் சேர்த்து ஒன்பது குட்டிகள் போட்டது.யானை டாக்டருக்கு பல திகிலான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அவர் கூறுகிறார்: “ஒரு தடவை யானைகளைப் பிடிக்க குழிகள் வெட்டி இருந்தோம். ஒரு யானைக்கூட்டம் அந்தப் பகுதியைக் கடந்தபோது ஒரு குட்டி யானை அந்தப் பள்ளத்தில் விழுந்துவிட்டது. யானைக் கூட்டம் விலகிச் சென்ற பிறகு, குட்டி யானையை வெளியில் எடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று எங்கிருந்தோ ஒரு பெரிய யானை (தாய் யானை) எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அந்த ஒரு கணம் எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. ஆனால், சமயோஜிதமாக நான் உரக்க கத்தி எல்லோரையும் எச்சரித்துவிட்டேன். எல்லோரும் வேகமாக ஓடி, ஒரு பெரிய குழிக்கு அந்தப் பக்கமாக நின்று கொண்டுவிட்டோம். எங்களை நோக்கி ஓடிவந்த யானை, இடையில் குழி இருப்பது தெரியாமல், அதற்குள் விழுந்துவிட்டது. அரை நிமிடம் தாமத்திருந்தால் கூட அந்த யானை அன்றைய தினம் எங்களில் ஒருவரையாவது பலி வாங்கி இருக்கும்.“அப்புறம் என்ன ஆச்சு டாக்டர்?”“வேகமாக ஓடி வந்த யானை, கால் இடறி குழிக்குள் விழுந்ததால், குழியின் பக்கவாட்டில் மண்டைப்பகுதி மோதி, யானை இறந்து போனது. யானையின் மண்டை ஓட்டு எலும்புகள் மோசமாக உடைந்திருந்தன என்றால் அந்த யானை என்ன வேகத்தில் ஓடி வந்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்! எல்லாம் தாய்ப் பாசம் கொடுத்த வேகம்! அந்த துயரமான சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.இன்னொரு அனுபவமும் சொல்கிறேன்... ஒரு சமயம் சுமார் ஐந்தே முக்கால் அடி உயரமுள்ள ஒரு யானை குழிக்குள்ளே விழுந்துவிட்டதாக தகவல் வந்தது. வடம், கும்கி யானை சகிதம் ஸ்பாட்டுக்கு விரைந்தோம். சுமார் ஐந்து மணி நேரம் முயற்சி செய்தும், வடம், யானையின் கழுத்தில் சரியாக விழவில்லை. அப்போது நானும் கருப்பன் என்கிற வனத்துறை ஊழியரும் செய்த காரியத்தை இன்று நினைத்தாலும் முதுகுத் தண்டு உறைந்துபோகும். அது எத்தகைய மூடச் செயல் என்றும் தோன்றும். ஆமாம்! சற்றும் யோசிக்காமல், நானும் கருப்பனும் யானை இருந்த குழிக்குள்ளே குதித்துவிட்டோம். குதித்த வேகத்தில் மின்னல் போல இயங்கி யானையின் கழுத்தில் வடத்தை சரியாக மாட்டிவிட்டோம். அடுத்த சில விநாடிகளில் வேறு ஒரு வடத்தைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி வந்துவிட்டோம். எல்லாம் சில வினாடிகளில் கடவுள் புண்ணியத்தில் ஆபத்தில்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்தது. அன்று மட்டும் யானை எங்களில் ஒருவரையோ, அல்லது இருவரையுமோ குழியின் சுவற்றோடு சேர்த்து அழுத்தி இருந்தால்… அல்லது காலால் மிதித்திருந்தால்…இன்று நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது!.யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் வன அனுவபவங்களை வைத்து மிக நீளமான ஒரு கதையை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மூன்று பகுதிகளாக எழுதப்பட்ட அற்புதமான கதை. என்னுடனான பேட்டியில் சொல்லாத ஒரு முக்கியமான விஷயம் ஜெயமோகனின் கதையில் இடம்பெற்றுள்ளது. காட்டுப் பகுதிகளில் ஜாலியாக பிக்னிக் செல்பவர்கள் மது அருந்திவிட்டு, காலி பீர் பாட்டில்களை வீசி எறிந்துவிட்டுப் போவது ரொம்ப காலமாக நடக்கும் வெகு சகஜமான விஷயம். ஆனால், அந்த உடைந்த மது பாட்டில்கள் காடுகளில் திரியும் யானைகளுக்கு எத்தகைய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? யானைகள் செல்லும் வழித்தடங்களில் வீசி எறியப்படும் பாட்டில்கள் உடைந்து, அதன் கூரான பகுதிகள் யானையின் கால்களில் குத்திவிடும். யானையின் அபரிமிதமான எடை காரணமாக உடைந்த பாட்டிலின் பகுதி உள்ளே ஆழமாகச் சென்று, காயத்தை ஏற்படுத்தும்; ரத்தம் வழியும். யானை நடக்க முடியாமல் சிரமப்படும். அடுத்த சில நாட்களில் யானையின் நடமாட்டம் முடங்கிவிடும். நாளடைவில் அந்த காயம் அழுகி, சீழ் பிடித்து, யானையின் உயிரையே பலி வாங்கிவிடும்.ரோட்டோரங்களில் உடைந்த மதுப் புட்டிகளைப் பார்க்கிறபோதெல்லாம் எனக்கு காடுகளில் அந்த பாட்டில்கள் குத்தி, பலியாகும் யானைகளும், யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தியும், ஜெயமோகனும், நினைவுக்கு வருகிறார்கள்.(தொடரும்)