ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏன் ராக்கெட் ஏவப்படுகிறது தெரியுமா?

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா

இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மிக முக்கியமானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம். சமீபத்தில் இங்கிருந்து 'சந்திராயன் 3' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது தோன்றிய விஷயம்தான், ஏன் இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் எல்லா ராக்கெட்டுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது என்று. நாட்டில் ஸ்ரீஹரிகோட்டா மட்டுமல்லாமல் திருவணந்தபுரம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. ஆனால், பெரும்பாலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்விக்கான பதில்கள் தான் இவை...

1969ஆம் ஆண்டு முதல் முறையாக செயற்கைக்கோள் ஏவுவதற்கான ஏவுதளமாக ஸ்ரீஹரிகோட்டா தேர்ந்தெடுக்கபட்டது. ஸ்ரீஹரிகோட்டா 50 கி.மீ கடற்கரையுடன் சுமார் 43,360 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தீவாக உள்ளது.

விக்ரம் சாராபாய்
விக்ரம் சாராபாய்

இந்தியாவின் எதிர்கால ராக்கெட் ஏவுதலத்திற்கான தேடுதல் வேட்டை இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் 'விக்ரம் சாராபாய்' தலைமையில் நடைபெற்றது. அவர் தனது சக விஞ்ஞானியும், நெருங்கிய நண்பருமான ஏக்நாத் வசந்த் சிட்னிஸிடம் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் ஏவுதளத்திற்கான சிறந்த இடத்தை தேடும்படி கூறினார். 1968 மார்ச் மதம் சிட்னிஸ் ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய தொழில்துறை இயக்குநராக இருந்த அபித் ஹுசைனைத் தொடர்பு கொண்டார், அவர் ஸ்ரீஹரிகோட்டா உட்பட பல சாத்தியமான தளங்களுக்கான தகவல்களைப் பெறவும் வரைபடங்களைத் தயாரிக்கவும் உதவினார்.

ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பதற்கான சாத்தியமான தளங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இது பூமியின் சுழற்சியிலிருந்து கூடுதல் மையவிலக்கு விசையை வழங்கும்.

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா

இந்தியாவின் விண்வெளிப் பயணம் என்ற புத்தகத்தின்படி, ராக்கெட்டை கிழக்கு நோக்கி ஏவுவதன் மூலம், பூமியின் சுழற்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஏவுதளத்திற்கு, பூமியின் சுழற்சியின் காரணமாக வழங்கப்படும் வேகத்தின் அளவு சுமார் 450 m/s ஆகும், இது ஏவுகணையின் பேலோடின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். புவிநிலை செயற்கைக்கோள்கள்(Geostationary satellites) பூமத்திய ரேகைத் தளத்தில் இருக்க வேண்டும். எனவே, அத்தகைய செயற்கைக்கோள்களுக்கு, ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருந்தால் அது சிறந்தது.

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா

இது தவிர, ஸ்ரீஹரிகோட்டாவை செயற்கைக்கோள் ஏவுவதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. அது 'நிலையான புவியியல் தளம்' (Stable geographical platform) ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக நடைபெற, ஏவுதலின் போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் அளவுக்கு நிலம் திடமாக இருக்க வேண்டும். இஸ்ரோவின் வெளியீடு மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் தேவிபிரசாத் கர்னிக், நியூஸ் மினிட்டின் அறிக்கையில் விளக்கியபடி, ஸ்ரீஹரிகோட்டாவின் நிலப்பரப்பு வலுவான மண் கலவையுடனும், கடினமான பாறைகளுடனும் இருப்பதால் செயற்கைக்கோள் ஏவுதளத்திற்கான தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா

மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், ஸ்ரீஹரிகோட்டா வங்காள விரிகுடா கடற்கரையில் ஒரு தடுப்பு தீவு மற்றும் கடலுக்கு அருகில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் கிழக்கு நோக்கிப் பறந்து கடலுக்கு மேலே உயரும், ஒரு ராக்கெட்டின் பணி முடிந்ததும் அதன் தேவைப்படாத பகுதிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடுவிப்பதன் மூலம் காடலில் விழும். எதிர்பாராதவிதமாக ராக்கெட் ஏவப்பட்ட பிறகு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், ராக்கெட்டும் அதன் ஸ்கிராப்புகளும் கடலில் மட்டுமே விழும். மேலும், சில நேரங்களில், ஒரு பெரிய பேரழிவைத் தவிர்ப்பதற்காக ஒரு அழிவு கட்டளை (destruct command) கொடுக்கப்படுகிறது. கடலுக்கு மேல் செல்லும் ராக்கெட் சிதைவுக்குப் பிறகு அதன் ஸ்கிராப்புகளும் தண்ணீரில் விழுந்துவிடும், ஆகையால் உயிர் அல்லது உடைமைக்கு எந்த வித சேதமும் இன்றி தவிர்க்க உதவும்.

இது மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு அடுத்தபடியாக, ஸ்ரீஹரிகோட்டா தான் உலகின் இரண்டாவது சிறந்த விண்வெளி நிலையம் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com