இந்த வருட இசை விழாவில் இது புதுசு!

இந்த வருட இசை விழாவில் இது புதுசு!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

சினிமா டிக்கெட் போல இந்த வருட இசைவிழாவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் சௌகரியம் வந்துவிட்டது. சென்னையின் இசைவிழா கச்சேரிகளுக்கான   டிக்கெட் வாங்கிக் கொடுக்கும் சேவையை முதன் முதலில் துவக்கிய பெருமை சென்னையில் இருக்கும் “மியூசிக் ஆஃப் மெட்ராஸ்” நிறுவனத்துக்கே உரியது. இந்த வருடத்து சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளுக்கு  இவர்களின் இணையதளம் மூலமாகவே  டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.  

வலுவான தொழில்நுட்பத் திறன்  மற்றும் கடந்த ஐந்தாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில்  இந்த நிறுவனம் www.mdnd.in என்ற தனது  வலைத்தளத்தை இந்திய கலைகளுக்கான உலகளாவிய தளமாக உருவாக்கியுள்ளது.

இந்த வருட இசைவிழாவுக்கான நுழைவுச் சீட்டு சேவையை வழங்குவதற்காக  மியூசிக் ஆஃப் மெட்ராஸ் நிறுவனம் சென்னை மாநகரின்  பிரம்ம கான  சபா,  கர்நாடிகா, ஹம்சத்வானி, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி,  கலாக்ஷேத்ரா, கலாலயா அறக்கட்டளை, (அமெரிக்கா), கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், மெட்ரசனா,  மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நாத சுதா, நாரத கான சபா,   ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா ஆகிய சென்னையின் முக்கிய சபாக்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரசிகர்கள் தங்கள் கணினிகள் அல்லது ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தி www.mdnd.in    என்ற இணையதளத்துக்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள  “சீசன் டிக்கெட்ஸ்” என்ற பகுதிக்குச் சென்று சபாக்களின் பட்டியலைக் காணலாம். ரசிகர்கள் ஒவ்வொரு சபாவின் கீழும் சீசன் டிக்கெட்டுகள் அல்லது தனிப்பட்ட கச்சேரிக்கான  டிக்கெட்டுகளைத் தங்கள் விருப்பத்துக்கேற்ப  தேர்வு செய்து, சைபர்-பாதுகாப்பான சூழலில் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

கச்சேரிக்கு வரும் ரசிகர்கள் கேண்டீனிலும் ருசிக்க இதே இணையதளம் மூலமாக வழி செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள், சாஸ்தாலயா மற்றும் சாஸ்தா கேட்ரிங் சர்வீஸ் ஆகிய  கேண்டீன்களில்  உணவுக்கான டோக்கன்களையும் ஆன்லைன் மூலமாக வாங்க முடியும்.

 மேலும் உதவிக்கு,  ரசிகர்கள் வாட்ஸ்அப் மூலம்  'ஹாய்'  என்று 8072 336688  எண்ணுக்கு அனுப்பலாம்.  events@mdnd.in க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது வாட்ஸ்அப்  எண்கள் 9940152520 / 9841088390 களைத் தொடர்பு கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com