கோலம் முதல் கச்சேரி வரை: களைகட்டும் மயிலை திருவிழா - 2026!

cultural-events-in-chennai
mylapore-festival-2026
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

டந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக  சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியான மைலாப்பூரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் “மைலாப்பூர் திருவிழா” வை கோலாகலமாக நடத்தி வருகிறது.  வழக்கம்போல இந்த வருடமும் ஜனவரி மாதத்தில் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. இது மைலாப்பூர் திருவிழாவின் 22வது பதிப்பு ஆகும்.

2001ஆம் ஆண்டில் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகை விளையாட்டாக மைலாப்பூர் வாசிகளுக்கு கோலப்போட்டி ஒன்றை நடத்தியது.  அதுவே ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று இன்று பெரிய அளவில்  மைலாப்பூர் திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது.

இந்த விழா, சென்னை நகரத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை இசை, நடனம், பாரம்பரிய நடைபயணம், கோலம், வீதி  நாடகம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வகையான நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடுகிறது.

மைலாப்பூர் திருவிழா என்றாலே மயிலை கபாலீசுவரை கோவிலைச் சுற்றி அமைந்துள்ள நான்கு  மாட வீதிகளும், உபரியாக நாகேஸ்வர ராவ் பூங்காவும் களைகட்டிவிடும்.  இந்தப்பொது இடங்கள் கலை மற்றும் பாரம்பரியத்தின் உயிரோட்டமான மேடைகளாக புதிய பரிமாணம் பெற்றுவிடும்.

மைலாப்பூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி சென்னை மாநகரின் பலவேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களையும், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களையும் ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் பெருமை கொண்டது மைலாப்பூர் திருவிழா. இதன் மூலமாக  மைலாப்பூர்  சென்னை மாநகரத்தின் ‘கலாச்சாரத்தின் மையம்’ என்ற அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு, மைலாப்பூர் திருவிழாவின்போது சுந்தரம் ஃபைனான்ஸ் ப்ளூ கிரீன் மைல் என்ற புதிய சுற்றுச்சூழல் முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. இந்திய  சுற்றுச்சூழல் கழகத்தின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்துக்கு  “உங்கள் உணவை நீங்களே வளர்க்கலாம்” என்று பெயர். இந்தத் திட்டத்தின் மூலமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே “சமையலறை தோட்டம்”  அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படும். பங்கேற்பாளர்கள்  ப்ளூ கிரீன் கிளப் எனும் ஆன்லைன் சமூகத்தில் இணைவார்கள்.

இதையும் படியுங்கள்:
சென்னை 'உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்'! வாழ்ந்ததும்! வீழ்ந்ததும்!
cultural-events-in-chennai

மைலாப்பூர் திருவிழாவின்போது சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய திட்டத்தினை சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது கிளைகளின் மூலமாக நாடெங்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

மைலாப்பூர் திருவிழா பதினைந்தாவது ஆண்டாக “பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுப்போம்”  இயக்கத்தை முன்னெடுக்கிறது. இதன்படி, மைலாப்பூர் திருவிழா நடைபெறும் நாட்களில் 10,000 துணி பைகள்  பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கின்றன.

மேலும், மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமான சூழ்நிலை அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் “சுத்தமான மைலாப்பூர்” என்ற இயக்கமும் செயல்படுத்தப்பட உள்ளது.

மைலாப்பூர் திருவிழா குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோசன்   இந்த வருட “மைலாப்பூர் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள் பற்றிக்குறிப்பிட்டார்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், ஜனவரி 8 முதல் 11 வரை, காலை  ஏழு மணி முதல் எட்டு மணி வரை தினமும் கச்சேரிகள் நடைபெறும்.

லேடி சிவசாமி ஐயர் பள்ளியில் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் குழந்தைகள் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 8, 10, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி இடம்பெறும். இதைத் தவிர, காகித குவில்லிங், பானை ஓவியம் ஆகிய கைவினைப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
சிங்கத்தோடு நடப்பது எப்படி? சொல்லித் தருகிறார் சோம. வீரப்பன்!
cultural-events-in-chennai

ஆண்டுதோறும் மைலாப்பூருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் சேவை செய்துவருபவர்களுக்கு “ ஸ்பிரிட் ஆஃப் மைலாபூர்” என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம்ஸ்பிரிட் ஆஃப் மைலாபூர்” விருது பெறப்பாகிறவர் யார்? ஜனவரி 11 அன்று மாலை 6.30 மணிக்கு அது அறிவிக்கப்படும்.

மைலாப்பூர் திருவிழா இயக்குநர் வின்சென்ட் டி’சூசா
“இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நான்கு நாட்களில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். எட்டு பாரம்பரிய நடைபயணங்கள், கோலம் போட்டிகள், குழந்தைகளுக்கான சைக்கிள் சுற்றுப்பயணம் போன்றவை இடம்பெறும்” என்று தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com