

நேபாளம் பார்க்கப் போன
நேசமுள்ள எங் குடும்பம்
ஊர் வந்து சேரலையே
ஒரு தகவலும் தெரியலையே!
தாராளமா செலவு செஞ்சி
தன்னிச்சையா மலைமேல் ஏறி
மேலிருந்து கீழே பார்க்கப்போனாங்க
மெதுவாக எறங்கிடவே நெனச்சாங்க!
அதுக்குள்ள புயலாஅது வந்திடிச்சி
அங்கிருந்த அனைத்தையும் அடிச்சிடிச்சி!
அவங்கநெலை என்னன்னு தெரியல
அடிவயிற்றுக் கலக்கமது போகல!
டிவியிலே வீடியோவிலே பார்க்கையிலே
நெஞ்சுக்குள்ளே நெருப்பொன்னு பற்றுது!
இப்படியும் நாட்டிலே நடக்குமான்னு
இதயத்தில் துக்கம்வந்து அடைக்குது!
முன்னூறு நானூறு என்றவர்கள்
முழுதாய் இப்பொழுது ஆயிரத்தில்
இறந்தவர்கள் எண்ணிக்கை என்கிறார்கள்
இதுவும் தெளிவில்லை என்கிறார்கள்!
மலையும்மரமும் மண்ணும் சேறும்
ஒன்றாய்ச் சேர்ந்து உயரத்திலிருந்து
உயிரை விட்டிட குதித்ததைப்போல
ஏதோவொன்றுநடந்தது!என்னன்னு ஏதும்புரியல!
முன்பெப்பொழுதும் இதுபோல் இல்லை
முழுதாயெதுவும் புரியவும் இல்லை!
நடந்தது எதுவும் நல்லதாயில்லை
நாங்கள்நிற்பதோ துயரத்தின் எல்லை!
மண்ணும் நீரும் மரமுந்தானே
மனித உயிர்களின் உயிர்நாடியென்றும்!
அதுவே நம்மைக் காத்திடும்கவசம்
அழிப்பதும் அதுவென்றால் ஆச்சரியந்தானே!
எங்கோ மனிதன் தவறிழைக்கின்றான்
இயற்கையை மதிக்கத் தவறிடுகின்றான்
பொறுத்த அதுவும் பொங்கிடும்போது
புரியாமல் அவனும் தவித்திடுகின்றான்!
எப்படியேனும் அவர்கள் திரும்பினால்
இறைவா நாங்கள் மகிழ்ந்திடுவோமே!
உறவாய் இருந்தவர் இல்லையென்றாலே
உதிரமும் நமக்கு நடுங்கிடுந்தானே!