புறாக்கள் பறக்கும்போது கண்கள் என்ன செய்கின்றன? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ரகசியம்!

வானில் பறக்கும் புறாக்களின் கண்களில் மறைந்திருக்கும் ஆச்சரியமான தொழில்நுட்பம் பற்றி அறிவியலாளர்கள் கண்டறிந்த உண்மை.
புறாக்கள் | Pigeons
புறாக்கள் | Pigeons Image credit: Gemini AI
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on
Kalki Strip
Kalki Strip

புறாக்கள் வானில் சுதந்திரமாகப் பறப்பதைப் பார்க்கும்போது நாம் எளிய முறையில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், அவற்றின் அந்த அழகிய பறத்தலுக்குள் அதிநவீன தொழில்நுட்பத்தை மிஞ்சும் ஒரு வியக்கத்தக்க பார்வை அமைப்பு செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? புறாக்களின் கண்களில் மறைந்திருக்கும் அந்த இயற்கைத் தொழில்நுட்பம் என்ன? அது எதிர்கால அறிவியலுக்கு எவ்வாறு உத்வேகமாக மாறப் போகிறது? வாருங்கள், இந்த ரகசியங்களை இந்தக் கட்டுரையில் முழுமையாக அறிந்துகொள்வோம்!

நாம் வானில் பறக்கும் புறாக்களைப் பார்க்கும் போது அவை வெறுமனே இறக்கைகளை அசைத்து பறப்பதாகவே நினைக்கிறோம். ஆனால் அவற்றின் கண்கள் ஒவ்வொரு நொடியும் சுற்றுப் புறத்தை ஆராய்ந்து பறக்கும் பாதையை தீர்மானிக்கின்றன என்பது ஆச்சர்யமான உண்மை..

புறாக்கள் வானில் பறக்கும் போது அவற்றின் கண்கள் எவ்வாறு செயல்படுகிறது? அவை தொடர்ந்து சுற்றிப் பார்த்து கொண்டே இருக்குமா? அல்லது பறக்கும் திசையை நிலையாக வைத்துக் கொள்ள கண்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்குமா? இந்த கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட வித்தியாசமான ஆய்வு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..

புறாக்களின் கண் அசைவுகளை நேரடியாக கண்காணிப்பதற்காக விஞ்ஞானிகள் அவற்றின் தலையில் மிகவும் சிறிய கேமராக்களையும், உடலில் எடை குறைந்த மின்னணு சாதனங்களையும் பொருத்தினர்.. இந்த சாதனங்கள் புறாக்களின் இயல்பான பறக்கும் முறையைப் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.. இதன் மூலம் பறக்கும் நேரத்திலும் தரையிறங்கும் நேரத்திலும் புறாக்களின் கண்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்ய முடிந்தது..

இதையும் படியுங்கள்:
16 வயதிலேயே AI நிறுவனம்.. தந்தைக்கே ரூ 2 லட்சம் சம்பளம் வழங்கும் 'AI kid of India'!
புறாக்கள் | Pigeons

ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தன.. புறாக்கள் பறக்கத் தொடங்கியதும் அவற்றின் கண்கள் பெரும்பாலும் ஒரு நிலையான நிலையில் 'பூட்டப்பட்டவை' போல இருந்தன.. கண்கள் முற்றிலும் அசையாமல் இருப்பதில்லை என்றாலும் அவற்றின் அசைவுகள் மிகவும் மெதுவாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தன..

பறக்கும் போது சுற்றியுள்ள காட்சிகள் வேகமாக நகர்வதால் புறாக்களின் கண்களில் உருவாகும் காட்சித் தகவல்களை விஞ்ஞானிகள் 'ஆப்டிக் ஃப்ளோ' என்கிறார்கள்.. இந்தக் காட்சித் தகவலை பயன்படுத்தி புறாக்கள் தங்கள் வேகம், திசை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்கின்றன.. மேலும் பறக்கும் போது புறாக்களின் கண்கள் மெதுவாக வெளிப்புறத் திசையில் நகர்வது கண்டறியப்பட்டது..

ஆனால் தரையிறங்கும் போது நிலைமை மாறுகிறது.. அப்போது இருகண்களும் ஒரே இலக்கை நோக்கி உள்நோக்கி திரும்புகின்றன.. இதனால் தரையிறங்க வேண்டிய இடத்தின் தூரத்தை துல்லியமாக கணக்கிட முடிகிறது..

Pigeons | புறாக்கள்
Pigeons | புறாக்கள் Image credit: Gemini AI

இந்த ஆய்வு பறவைகளின் பார்வை பற்றிய நமது புரிதலை மாற்றி உள்ளது.. எதிர் காலத்தில் புறாக்களின் கண் செயல்பாடுகளைப் பின்பற்றி அதிக நுண்ணறிவுடன் செயல்படும் ட்ரோன்கள் மற்றும் தானியங்கி பறக்கும் இயந்திரங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்யலாம்..

சிறிய புறாக்களின் கண்களில் மறைந்திருக்கும் இந்த இயற்கைத் தொழில்நுட்பம் எதிர்கால அறிவியலுக்கு ஒரு பெரிய உத்வேகமாக மாறக்கூடும்.. இந்த ஆய்வில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் புறாக்கள் பறக்கும் போது அவற்றின் கண்கள் தொடர்ந்து வேகமாக அங்கும் இங்கும் அசைவதில்லை என்பது தான்.. மாறாக அவை தங்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரிக்க கண்களின் அசைவையும் தலையின் இயக்கத்தையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகின்றன..

பறக்கும் போது கீழே உள்ள தரை, அருகில் இருக்கும் பொருட்கள், மரங்கள், மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றின் நிலையை அவை கவனிக்கின்றன..

ஒரு புறா வேகமாக பறக்கும் போது அதன் சுற்றுப்புற காட்சிகள் கண்களுக்கு மிக வேகமாக மாறிக் கொண்டே இருக்கும்.. அப்போது கண்கள் பெறும் தகவல்களை மூளை மிக வேகமாக புரிந்து கொள்கிறது..

இதையும் படியுங்கள்:
சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் 10 ஜப்பானிய நுட்பங்கள்!
புறாக்கள் | Pigeons

இதன் மூலம் புறா தடைகளைத் தவிர்த்து சரியான திசையில் பறக்க முடிகின்றது.. திடீரென ஒரு பொருள் எதிரில் வந்தால் கண்கள் மற்றும் மூளையின் ஒருங்கிணைந்த செயல்பாடு உடனடியாக பறக்கும் பாதையை மாற்ற உதவுகிறது.. புறாக்கள் தங்கள் இருப்பிடத்தை அடையாளம் காணவும் கண்களைப் பயன்படுத்துகின்றன..

தங்களுக்கு பழக்கமான கட்டிடங்கள் மரங்கள் மற்றும் சாலைகள் போன்ற காட்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு நீண்ட தூரப் பயணங்களிலும் திசையைத் தீர்மானிக்கின்றன.. இதனால் புறாக்களின் பார்வை என்பது வெறுமனே பார்ப்பதற்கான கருவி மட்டும் அல்ல.. அவற்றின் பறக்கும் திறனின் முக்கியமான வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.

வாசகர்கள் புறாக்களின் பறக்கும் திறன் மற்றும் அவற்றின் கண்களில் உள்ள வியக்கத்தக்க இயற்கைத் தொழில்நுட்பம் பற்றிய அறிவியல் உண்மையை முழுமையாகப் புரிந்து கொண்டு செல்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com