-செ.கலைவாணி, மெல்போர்ன்.
எத்தொழில்
செய்வார்க்கும்
எவர்க்கும் தேவை
நாழி உணவேயது
நலத்தைத் தருவது.
உழுவார் உலகத்தார்க்கு
உணவை நல்குவர்.
உழவரே
எவ்வுயிரையும்
என்றும் தாங்குபவர்.
உழுதுண்டு வாழ்பவரே
உயிர் வாழ்பவராம்.
பிறரெல்லாம் உழவன்
பின் செல்பவராம்.
பலரையும் தன்கீழாய்ப்
பார்த்திடச் செய்வராம்.
விடியலில் விழித்தே
விரைந்தே ஏகுவர்
புழுதியாய் நிலம்
உழுது உணக்குவர்.
பயிரோடு, களையும்
பயிராய் வளரும்.
களையை அகற்றி
களைப்போடு ஏகுவர்.
நீர் பாய்ச்சி
நித்தமும் உழைப்பர்.
வயலை நினைத்தே
வாட்டமாய் இருப்பர்.
பிறரிடம் இரக்காது
பிறர்க்கு ஈபவராம்.
உழவினார் கைமடக்க
உணவே இல்லையாம்.
பசிப்பிணி போக்கி
புசிக்க உணவிடும்
உழவர் இன்றேல்
உயிர்களும் இல்லாதாகும்.