நெடுங்கதை: இரவின் துயர் - அத்தியாயம் 4

தாமரைச்செல்வி
Grandma and Grandpa - Tamil Mega Story
Iravin Thuyar - Tamil Mega StoryImage Credit: Chris Nallaratnam
Published on

அறை மூலையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மெலிந்த வெளிச்சத்தில் அவர் கீழே பார்த்தார்.

“ என்ன சத்தம்..”. பூரணி பதற்றத்துடன் ஓடி வந்தாள்.

“ இல்லை.. கால் தடக்கி கதிரை* (chair) விழுந்திட்டுது. அதுதான்..”

அவர் குனிந்து கீழே விழுந்து கிடந்த கதிரையை எடுத்து நிமிர்த்தி வைத்தார்.

“ சத்தம் கேக்க நான் பயந்திட்டன். கவனமப்பா”

“ சார்ஜரைத் தேடிப் பார்க்கிறன் ..பொறு.”

அவர் மேஜை மீது பார்த்து விட்டு இழுப்பறைகளையும் திறந்து தடவினார்.

“ காணேலை. எங்க வைச்சன் என்றும் நினைவில இல்லை. “

“ சரி. விடுங்கோ. இங்கால வாங்கோ. நாளைக்குப் பகல் வெளிச்சத்தில தேடி எடுக்கலாம். “

அவர் கையைப் பிடித்து வெளியே கூட்டி வந்தாள்.

“ தம்பி எப்பிடியும் போன் பண்ணியிருப்பான். நான் எடுக்கேலை எண்டதும் சரியாய் கவலைப்படப் போறான். இரவு முழுக்க பிள்ளை யோசிச்சுக் கொண்டிருக்கப் போகுது. மத்தியானமே கவனிச்சு சார்ஜ் போட்டு வைச்சிருக்க வேணும். சே.. விட்டிட்டன். என்ன மறதியோ…”

புலம்பும் அவரைக் கவலையுடன் பார்த்தாள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com