

என் முதற்கண் வணக்கம் -
'முதுமை' எய்திடும் மாந்தருக்கு!
முக்கியமாக கீழ்க்கண்ட ...
'முகவரி'யில் 'வாழும் என் அன்பான-
'மதிப்பிற்குரிய மூத்தக் குடிமக்களுக்கு'!
முகவரி1/3: நீங்கள் வாழும் 'பெற்றப் பிள்ளைகளின் இருப்பிடம்'!
முகவரி2/3: உங்களின் 'சொந்த வீட்டில்' நீங்கள் பெற்றப் பிள்ளைகளுடன் வம்சமுறையே வாழுமிடம்!
முகவரி3/3: பெற்றப் பிள்ளைகள் உங்களை சற்று தள்ளி தங்கவைக்கும் இடமான -'முதியோர் இல்லம்'!
முகவரி எதுவானாலும் - வயோதிகம்
மறவாமல் வந்தடையும் உங்களை தங்கு தடையின்றி!
முகவரி அறிவான் ஆண்டவன், நம்மை ஆள்பவன் அறிவான் மேலிருந்துக்கொண்டு!
முதுமை - தீண்ட வரும் கொடிய நாகமன்று! - அஃது
முழுமனதுடன் கொண்டாடப்பட வேண்டிய 'பழுத்த பழமொன்று'!
'மூது'வது மறவாமல் வாய்க்கும்-
முண்டகன் படைத்த உயிர் அனைத்துக்கும்!
முயன்றாலும் அதற்கு-
முடிவெழுத முடியாது யாரும் முன்னமே!
முன்வந்து வாங்குதலோ- பின்தள்ளி போடுவதோ-
'முதுமை' எனும் காலக்கட்டாய நிகழ்விடம் -
முடிசூடியவனே ஆனாலும் அது எடுபடாது!
முதாரி விளைக்கும் வினையனைத்தையும் -
முறைக்காமல் ஏற்றுக்கொள்ளுவதே சம்பிரதாயம்!
மூர்த்தசமும் மெய் மயிரும் நரையாக மாறுவது நிச்சயம்;
மூலிகையும் மருந்தும் கைவசம் கட்டாயம்;
முழுங்க மாத்திரை நித்திரைக்கு முன்;
முன்பற்கள் விழுந்தால் முகவாயுள் பொய்பல் கட்டும்;
மூன்றாம் காலாக நடை தடியும்;
முழுவதையும் மறப்பதும், மறதியால் தடுமாற்றமும்;
முயலாக ஓடியாடியவன் ஆமையாக மாறுவதும் -
முயலாமையால் தவிப்பதும்;
முதுகெலும்பும் சாய்வதற்கு தேடும் மதில் ஒன்றினை;- இப்படிப்பட்ட
முறியடிக்க முடியாத மேலும்பல வேதனைகள்- இவையாவும்
'முதுமை காலத்தின்' அனுபவிக்க வேண்டிய அம்சங்கள்!
மூட்டுவலி முதுகுவலி முன்னங்கால் வலி-
மூக்குச்சளி இரத்தழுத்தம் சர்க்கரை வியாதி
மூச்சுத்திணறல் என்று...
முடிச்சுப் போட்டும் முடிச்சுப் போடாமலும்
முதுமைக்கு முன்னும் பின்னும்
முன்னுரிமை பெறவேண்டி...இவை
முந்தக்கூடிய உபாதைகள்!
மூக்குக் கண்ணாடி -
மூக்கின் மேல் கண்டிப்பாக உட்கார வேண்டி ;
மூக்குப் பொடியும் சிலரின்-
மூக்கடைப்பிற்கு செய்யும் உபகாரம்!
முள்ளங்கி முளைக்கீரை மணத்தக்காளி
முட்டை முட்டைகோசு
முருங்கை மாங்காய் மாதுளை - இவற்றை
'முணங்காமல்' உணவோடு சேர்த்துக்கொண்டால்-
'முடங்காமல்' சுறுசுறுப்பாக இருக்கலாம்!
முடிந்தால் முட்டுச்சந்து வரை தெம்பாக போய் வரலாம்!
மூட நம்பிக்கை பெருகலாம் அல்லது சிறிது தளரலாம்;- ஏனெனில்
மூடனும் மற்றும் அறிந்தவனும் நம்புவது
முக்கண்ணுடைய சிவனை அல்லது
முருகனை அல்லது திருமால்மருகனை!
மூத்தவர்கள் ஆரோக்கியமாக...
மூத்தவர்கள் திடகாத்திரமாக...
மூத்தவர்கள் ஆனந்தமாக...
மும்முர்த்திகளின் அருளால்-
மனதளவிலும் உடலளவிலும் சிறந்தாலும்;
மூத்தவர்களால் 'முளைத்த' வாரிசுகளால் –
'முளைக்கக் காண்போம்'-பெரும்பாலும்
'முகம் சுளிக்க வைக்கும்' சம்பவங்கள்; -அவைகள்
முற்றிலும் ஏற்கத் தகாத-
'முரண்பாடுகள்'!
மூத்த பிள்ளையும் சரி;
'மொத்த' பிள்ளைகளும் சரி-
'முதிர்ச்சியின் முகவாசல் நுழையும்'...
முத்தமிட்டு வளர்த்த அம்மை அப்பனை-
முப்பது வருடமானதும்-ஒதுக்கிவைத்து;
'முதியோர்' என்ற 'முத்திரை'யை அவர்கள் மேல் பதியவைத்து-
'முதியோர் இல்லம்' நாடுவர் அக்கறையோடு;
முத்தமிட்டு அரவணைத்து வளர்த்த
முதன்மை சொந்தங்களை- தள்ளி வைக்கும் குறிக்கோளோடு!
முறைப்படி வாழ்வோரை-
முதுமையது பயமுறுத்தாது.
மூட்டைத் தூக்கி பிழைக்கும்-
முனுசாமி அகவை அறுபதிலும்;
'முத்தாக' கூலி வேலை செய்வான்;- அல்லது அலட்டும் ஆசாமியான
முத்துசாமி அகவை நாற்பதில்-தன்
முன்நிற்கும் கணினிமூலம் குளிரறையில் வேலை பார்த்தாலும்;
முன்னறிவிப்பின்றி திடீர் மரணம் அடைவான்!
முதற்கண்: 'நல்லொழுக்க வாழ்முறை'ஆனது...
முதுமை காணும்
மூத்தக் குடிமக்கள் யாவரையும்-
முடங்காமல் மேலும் சில ஆண்டுகள் ‘மேன்மைப்படுத்தி’-
முகத்தில் சிரிப்புடனும்;
மனத்தில் திடமுடனும் 'வழிநடத்தி';- அவர்கள் வருடமொரு முறை
'முன்னெச்சரிக்கையாக'மேற்கொள்ளும்-
'முழுஉடல் பரிசோதனையிலும்' நிச்சயமாக ஜெயிக்கவைக்கும் ஒரு சக்தி!
மூன்று காலங்களாக தினசரியளவில் பிரிக்கப்படும்...
முழிக்கும் காலமான காலைப்பொழுது;
முழித்திருக்கும் காலமான இடைவேளை;
முடியும் காலமான நித்திரை பொழுது!-அம்
முறையே, நம் வாழ்நாள் காலமும்;
முதலாவதாக - மழலை முதல் வாலிப பருவம்;
முன்னுக்கு பின் தொடரும்- இல்லற வாழ்க்கை படலம்;
முடிவாக - முதுமை 'முளைத்தும்'பின்னம்
'முடிவினை' ஏற்கும் படலம் .
முடியுரையாக...
மூத்த குடிமகனாக மொழிவேன்:
'முக்கியமானது உடல்நலம் பேணல்' என்றாலும்;
'முதன்மை' பெறுவது 'நம் நல்லொழுக்கமே'!
'மூத்தவரவர்' நம்மைப் பெற்றவராவர்- ஏன் வீண்
முரட்டுப்பிடிவாதம் அவர்களிடம்?
முரண்படும் பிடிவாதம் உனக்கு பெற்றவரிடம்?
முதியோரான பெற்றோரைப் பேணி வாழ்தல் -நீர்
"முக்தி அடைய"அது ஓர் அரிய உக்தியாக திகழும் உனக்கு!
முழுமுதற் கடவுளான
மூஷிகவாகனனும்... இளையோன்
முருகனை; - ஞாலமதை மயில் மேல் சுற்றிவர-
முயன்ற ஞானவேலனை; விநாயகன் போட்டியில் ஜெயித்து-
முதல் நிலைப் பெற்று-
முருகனை வென்றது...எவ்வாறு?
மோதகப்பிரியனுக்கு- ஞாலமாக தோன்றியது...
முக்கண்ணுடைய தன் தகப்பனும் அம்மையாரும்- அதனால்
'மூன்று முறை' அக்கறையுடன் வலம் வந்தான் அவர்களை அவ்வாறு!
உன் வாழ்விலும் கட்டாயம் நிகழும் 'தேய்பிறை' நாட்கள்;
உன்னையும் தாங்க கட்டாயம் வேண்டும் உன் 'தலைமுறை' பிள்ளைகள்!
உள்ளன்போடு உறவாடு உன் பெற்றோரோடு!- அதனால்
'உவப்பும்', 'ஊக்கமும்' இணையும் உன் இல்லறத்தோடு!