கவிதை: கரைகளற்ற வானம்!

Sky
Sky
மகாலிங்கம் இரெத்தினவேலு

I am working as Lecturer in District Institute of Education and Training, Palayampatti, Virudhunagar District. I am regular contributor of Tamil Wikipedia. I also contributed to Tamil Quora. I am interested in Tamil Literature. I am eager to create short stories and poems in Tamil.

Updated on

கரைகளற்ற வானம்

பேரண்டத்தின்

பரவெளி

முதலும் முடிவுமில்லா

ஒரு வெளி!

இல்லை ஆனால்

இருக்கிறது

நீளமான நீலம்!

உலகம் முழுமைக்கும்

விரிந்து நிற்கும்

ஒரே போதி மரம்!

தலை கோதித்

தாயாய்

அந்தி வானம்!

குயிலோடு

பூபாளம் பாடி

துயிலெழுப்பும்

ஞானகுருவாய்!

வைகறை வானம்!

வறுமையாய்

வெறுமையாய்

வெற்று நன்பகல் வானம்

தோளோடு

தோள்சேர்த்து

சோகமது பகிர்ந்திடும்

நண்பனாய்

கடற்கரை வானம்!

கவிஞருக்கும்

காதலருக்கும்

ஈரமிகு

எழில் களமாய்

கார்கால வானம்!

நிலா தேவதை

நகர்வலம் போக

இராஜபாட்டையாய்

பால் வீதி வானம்!

கரைகளற்ற

வானமென்று

அறியாத

வயதிலும்

கரைகளற்ற

வானமென்று

அறிந்திட்ட

வயதிலும்

விரிந்திடும்

வியப்பிற்கோர்

எல்லையே

இல்லையே!

இதையும் படியுங்கள்:
கவிதை : காதலெனும் பேரெழுதி...
Sky
logo
Kalki Online
kalkionline.com