குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 1

Ambush
Ambush
Published on

ந்த அடர்ந்த காட்டுக்குள் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 37 புரட்சியாளர்கள் சுட்டுக் கொலை, 55 பேர் சரண், 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல், புரட்சிக் குழுவின் முகாம் தரைமட்டம், முக்கிய புரட்சிப்படை தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தடதடக்கின்றன.

மத்தியப் படைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மின்சாரம், தண்ணீர் எதுவுமில்லாத ஒரிசாவுக்கும் ஆந்திராவுக்கும் நடுவில் உள்ள இந்த பெரிதும் சிறிதுமாய் பரவிக்கிடக்கும் மலையடிவாரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் புழு, பூச்சி, பாம்புகளுடன் கடந்த 2 வருடமாய் பாடாய்ப்பட்ட 77வது பட்டாலியனின் 120 பேர்கள் கொண்ட இந்தப் பிரிவிற்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இந்த வெற்றிக்கு 77வது படைப்பிரிவு நிறைய விலை கொடுத்திருக்கிறது. இந்த சண்டையோடு சேர்த்து இதுவரை 30  சிப்பாய்களின் உயிர் போயிருக்கிறது. கை, கால், செவித்திறன், கண் என தொலைத்தவர்கள் எண்ணிக்கை ஐம்பத்தைத் தாண்டும்.

மொத்த பட்டாலியனும் போய் 2 வருடமாகிறது. கடிதம் வருவதிலும் போவதிலும் ரொம்ப சிரமம். போன் இல்லை, குடும்பம் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். உணவு தயாரித்து சாப்பிடுவது முதல் காலைக்கடன் கழிப்பது வரை படும் வேதனைகள் எல்லாம் விளக்கிச் சொல்லவே முடியாத ஒன்று.

நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அந்தரான காட்டிலிருந்து இனி விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிப்பாய் முதல் அதிகாரிகள் வரை மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்தப் போர்ப் படையில் வாழ்வோ, சாவோ அங்கு மது ஒன்றே தேவன். தலைமை அதிகாரி மது விருந்துக்கு உத்தரவிடுகிறார். ‘‘குடிக்காத பசங்க 4 பேர் இருப்பார்களே, அவங்க பேர் என்ன? டோப்பு மேஜர், இஸ்மாயில், சிவநேசன், கிஷன் சிங். அவங்களை பாதுகாப்புக்கு நிறுத்திடுங்க” மது விருந்தை ஆரம்பிக்கச் சொல்கிறார் அதிகாரி. எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இந்த 4 பேரும் பட்டாலியனின் செல்லப் பிள்ளைகள். இவர்களுக்கு ‘தியாகி டீம்’  என்ற பட்ட பேர்.  மைனஸ் 15 டிகிரி குளிரில் கூட இவர்கள் குடிப்பதில்லை. டோப்பு ஹவில்தாருக்கு 55 வயதாகிறது. மெஸ் கமாண்டர் - அண்ணாபூரணி.

மற்ற மூவரும் சிப்பாய்கள். கிஷன் சிங் தண்ணி வண்டியின் ஹெல்ப்பர். பக்கத்து கிராமத்தில் போய் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இஸ்மாயிலும் சிவநேசனும் எல்லோருக்கும் டூட்டி போடுவது, லீவ் கணக்கு, சம்பளக் கணக்கு என அலுவலக வேலை.

இவர்கள் எப்போதாவது இதுபோன்ற தருணத்தில் பட்டாலியனை பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் மொத்த பட்டாலியனும் தூங்குகிறது. நாலு பேரும் நாற்பது பேருக்கு சமம்.  ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய முடியாது.

நாலு பேரும் நல்ல நண்பர்கள். டோப்பு மேஜர் ராஞ்சியை சேர்ந்தவர். கிஷன் சிங் பாட்னா, இஸ்மாயிலும் சிவநேசனும் தமிழ்நாடு. நாலு பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இணைப்புப் பாலம் குடும்ப பாசம், அக்கறை. நாலு பேர் வீட்டிலும் நாலு விதமான பிரச்னைகள் இவர்களை தூங்க விடுவதில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com