தொடர்கதை: ஈரமில்லாத இதயங்கள் - அத்தியாயம் - 1

Iramillatha Ithayangal - தொடர்கதை
Iramillatha Ithayangal - தொடர்கதைImage Credit: ChatGPT
மைதிலி ராமையா

நான் எழுதிய பல கதைகள், கவிதைகள், நாடகங்கள் வானொலியிலும், ராணி, பாக்யா, குங்குமம், பத்மா, மங்கையர் மலர் மற்றும் மின்னிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. புலனக்குழுக்களில் கதைப்பயிற்றுனராகவும், நடுவராகவும் பணியாற்றி வெற்றியாளர்களை உருவாக்கவும் தேர்வு செய்யவும் உதவி வருகிறேன். எனது சிறுகதைத் தொகுப்புநூலும், கவிதை தொகுப்புநூலும் கின்னஸ் சாதனையாக வெளியிடப்பட்டது. வென்ற விருதுகளில் சில - குறிஞ்சிக் கவி, தமிழினியாள், கண்ணதாசன் விருது, பூவையர் பாமணி, அம்பேத்கார் விருது, காமராசர் விருது, ஆகச்சிறந்த எழுத்தாளர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

ஈரமில்லாத இதயங்கள் அத்தியாயம் - 1

“சாவித்திரி! மழை வரும்போல இருக்கு. நான் இன்னைக்கு திண்ணையில படுக்க முடியாதுன்னு நினைக்கிறேன். காத்து வேற பலமா வீசறதால சாரல் அடிக்குது” என்ற சிவராமனிடம்,

“ஆமாமாம் உள்ளேயே படுங்க சாரல்ல படுத்துட்டு அப்பறம் சளி புடிச்சிட்டு அவஸ்தைப்பட முடியாது,” என்றாள் சாவித்திரி.

“அது சரிதான் ஆனா நம்ப லஷ்மி பசு இன்னிக்கு கன்னு போட்டுடும்னு தோணுது. ஒரு மாதிரியா சொணக்கமா நிக்குது அதான் வேலுவை ராத்திரிக்கு வந்து இங்கேயே படுக்கச் சொன்னேன். அவனையும் இன்னும் காணும். நானும் உள்ளே படுத்திட்டா சரியா வருமான்னுதான்..” என்று இழுத்தவர், “சரி அந்த டார்ச் லைட்டைக் கொஞ்சம் கொண்டு வந்து கொடேன் ஒரு எட்டு கொட்டகைக்குப் போய் பார்த்திட்டு வந்திடறேன்,” என்றார்.

“இந்தாங்க” என லைட்டுடன் குடையையும் நீட்டினாள் சாவித்திரி, “மழையில நனைஞ்சுடாதீங்க” என்றபடி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com