

“அந்தப் பகையால ஊருக்கு ஆஸ்பத்திரி கொண்டு வர முயற்சியையும் கிடப்பில போட்டுட்டாங்க இரண்டு தரப்பும். ஆஸ்பத்திரி இருந்திருந்தா உன் தங்கச்சியையும் காப்பாத்தி இருக்கலாம். ஏதோ அந்த சிவராமன் மனுசத்தன்மையோட எதைப் பத்தியும் கவலைப்படாம உதவி பண்ணினதாலதான் உங்க அம்மா உயிரையும் காப்பாத்த முடிஞ்சுது. இல்லைன்னா நீயும் தாயில்லாப் பிள்ளையா நின்னிருக்க வேண்டியதுதான்” என்று சொல்லும் போதே தொண்டை அடைத்தது முருகனுக்கு.
இந்தக் கதையெல்லாம் எத்தனை முறை மகனிடம் சொல்லி இருப்பார் மனிதர் என்பதற்கு கணக்கு வழக்கு கிடையாது. அவனும் சும்மா சொல்லக்கூடாது எத்தனை முறை கேட்டாலும் அப்போதுதான் முதல் முறை கேட்பது போல ரொம்ப சுவாரஸ்யமாக இடையில எந்தக் கேள்வியும் கேட்டு குறுக்கிடாமல் மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.