

"பாத்தியா, இருட்டுல இருந்துகிட்டு டிராக்டர்ல யாரு போறாங்கன்னு ஏகாம்பரம் நோட்டம் இடறான். இருக்கட்டும். வெச்சுக்கிடறேன் அவனுக்கு" என்று கூறியவர் பாதங்களில் விழுந்து அழுதுகொண்டே இருந்தனர் பகுத்தறிவும் பைந்தமிழும்.
பெரியவர் இருவரையும் தூக்கி நிறுத்தினார். “தம்பி ஒண்ணு புரிஞ்சுக்கோ. காலம் எப்போதும் ஒரே சீராத்தான் ஒடிட்டு இருக்கு. இதுல நல்லகாலம் கெட்டகாலம்னு எதுவும் கிடையாது. நமக்கு மனசுக்கு நல்லது நடந்துச்சுன்னா, நல்லகாலம். மனசுக்கு பிடிக்காத வருத்தமோ, துக்கமோ நிகழ்ந்தா, அப்ப கெட்டகாலம்.
நமக்கு நிகழற ஒவ்வொரு செயலுக்கும் மக்கள் காலத்தைதான் குத்தமாக்கிறாங்களே ஒழிய, அது காலத்தால் அல்ல, அது நம் முன்வினையின் பலன் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இந்த அளவுக்குத்தான் நம் நாட்டில சிந்திக்கும் திறன் இருக்கு. என்னப்பா செய்யறது உங்களுக்கு இனி நடப்பது எல்லாமே நல்லதாதான் இருக்கும். ‘முதலில் சிந்தனை ஓட்ட எண்ணங்களை அழி. கிடைப்பதை ஏற்றுக்கொள்’ என்று உத்வேகப்படுத்தி இந்த வேம்பு உங்களையும் நல்வழி ஏற்படுத்தி அனுப்புவான்” என்றார், ஒரு உணர்ச்சியுடன்.