சிறுகதை: வாழ நினைத்தால்...

வெளிநாட்டு வாழ்க்கையின் தனிமையை எப்படி எதிர்கொள்வது? பெற்றோர்களின் மனமாற்றம் குறித்த உணர்வுபூர்வமான சிறுகதை
சிறுகதை | An elderly man is standing by the window, looking worried
சிறுகதை | An elderly man is standing by the window, looking worriedAI Image
பவானி உமாசங்கர்

இலக்கியம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பர். அதன் படி என்னுடைய படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி அதிகமாக எழுத விருப்பம். நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த பத்து வருடங்களாக பத்திரிகைகளுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன். இதுவரை 150 சிறுகதைகள் எழுதி உள்ளேன். இரண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். சிறார்களுக்காக நல்வழி கதைகள் புராணக் கதைகள் எழுதி வாசித்து சமூக ஊடகமான Spotify யில் வெளியிட்டுள்ளேன். பள்ளியில் கல்வியோடு வாழ்க்கை பாடத்தை கதை வடிவில் கற்பிப்பது என் வழக்கம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

கமலத்துக்குப் பெருமை பிடிப்படவில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கும் அவள் மகன் சுந்தர், கமலமும் அவள் கணவர் ஜெயராமனும் அமெரிக்கா வர விமான டிக்கெட் வாங்கிவிட்டான் என்பதைக் கேட்டதிலிருந்து அவளுக்கு மகிழ்ச்சியில் கால் தரையில் படவில்லை.

அன்று முதல் பரபரப்பாக வெளிநாட்டுப் பயணத்துக்குத் தங்களுக்குத் தேவையான சிலவற்றையும் மகன் மருமகளுக்குக் கொடுக்க எனவும் கமலம் பொருட்களை வாங்கிக்குவித்தாள். ஒருவழியாக எல்லாம் பேக் செய்து பயணம் செல்ல குறித்த நாளும் வந்தது.

முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் சொந்தபந்தங்கள் விமான நிலையம் வந்து வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். சென்னையில் புறப்பட்டு இருபத்தி எட்டு மணி நேரம் பயணித்து அமெரிக்காவின் நாஷ்வில் நகருக்கு வந்து சேரும்போது இருவரும் மிகவும் சோர்ந்துதான் போனார்கள். மகனையும் மருமகளையும் விமான நிலையத்தில் பார்த்ததும்தான் உற்சாகமடைந்தனர். இருவருக்கும் அந்தப் புதிய காலசூழ்நிலை ஊரின் வனப்பு, எங்கு நோக்கினும் சுத்தம், மாறுதலான மனிதர்கள் என அனைத்தும் மிகுந்த வியப்பை அளித்தன.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com