பவானி உமாசங்கர்
இலக்கியம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பர். அதன் படி என்னுடைய படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி அதிகமாக எழுத விருப்பம். நான் ஓய்வு பெற்ற ஆசிரியை.கடந்த பத்து வருடங்களாக பத்திரிகைகளுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன். இதுவரை 150 சிறுகதைகள் எழுதி உள்ளேன். அவற்றில் சில கதைகள் பிரபல தமிழ் வார பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. இணைய தள பத்திரிகை ஒன்றில் என்னுடைய சிறுகதைகள் இரண்டு பரிசு பெற்று புத்தகங்களில் வெளி வந்துள்ளன. இரண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். ஒன்று இணைய இதழில் தொடராக வெளி வருகிறது. சிறார்களுக்காக நல்வழி கதைகள் புராணக் கதைகள் எழுதி வாசித்து சமூக ஊடகமான Spotify யில் வெளியிட்டுள்ளேன். பள்ளியில் கல்வியோடு வாழ்க்கை பாடத்தை கதை வடிவில் கற்பிப்பது என் வழக்கம்.