சிறுகதை: மாயப் போர்வைக்குள்...

தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ கட்டணமும், மருந்துக் கட்டணமும் ஒரு சாதாரண மனிதனை எப்படி வதைக்கிறது? என விளக்கும் கதை
தமிழ் கதை |தமிழ் கதை |A sad man stand ICU ward outside with hospital bills
தமிழ் கதை |A sad man stand ICU ward outside with hospital billsImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

ஆம்புலன்ஸின் ஒலியுடன் வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது.

“சார், பேஷண்ட் மாடியிலா இருக்காங்க? இல்ல கீழேயா?”

“வாங்க, கீழேதான் இருக்காங்க.”

“உடம்புக்கு என்ன சார்?”

“பக்கவாதமுங்க.”

“தம்பி, நான் தலைப்பக்கம் பிடிக்கிறேன். சார், நீங்க காலை பிடிங்க. தம்பி, நீ முதுகுப் பகுதியைப் பிடிப்பா. ஒன், டூ, த்ரீ—சேர்ந்து தூக்கி ஸ்ட்ரெச்சரில் வையுங்க,” என்று ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்னவுடன், மூவரும் அம்புஜத்தம்மாளைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தனர்.

சைரன் ஒலி விண்ணைப் பிளந்துகொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் மருத்துவமனை நோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தது.

முகப்பில் வண்டி நின்றதும், ஸ்ட்ரெச்சரை இறக்கி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர்.

டூட்டி டாக்டர் கேட்டார்.

“ஏங்க, அம்மாவுடைய கேஸ் ஹிஸ்டரி இருக்கா? இருந்தா கொடுங்க.”

“ஆமாம், இருக்கு டாக்டர். இந்தாங்க,” என்று சீனிவாசன் கோப்பைக் கொடுத்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com