

உச்சி வெயில் சுட்டு எரித்தது. சிமெண்ட் கலைவையும், செங்கல்லையும் அடுக்கி வைத்தபடி, "ஏய்! வேலு, குடிக்க தண்ணி கொண்டு வா" என்று தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பையனை பார்த்து சொன்னான் நாற்பத்தைந்து வயதான கொத்தனார் இராமு.
அவன் மனைவி, இருவருக்கும் விட்டுக்கொடுக்கும் மனபான்மை குறைய, குறைய அவர்களுக்குள் வாழ்க்கை முடிச்சுகள் விழ, கடைசி கட்டத்தில் அவனுடன் வாழ விரும்பாமல் அவனைவிட்டு பிரிந்து போய்விட்டாள். சொந்தம், பந்தம் கூட அவனை விட்டு விலகியே இருந்தனர்.
தெரிந்தது கொத்தனார் வேலை! அதில் கிடைக்கும் கூலி அவனுக்கு தேவையான டீ, பீடி, சாப்பாடு, பின் இரவு நேரத்தில் மிதமுள்ள பணத்துக்கு டாஸ்மாக்ல சரக்கு, இரவு சாப்பாடு என்று செலவழித்து விடுவான். பல நேரங்களில் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விடுவான். திருமணமான இரண்டு வருடங்களில் அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து விட, அப்போதிலிருந்து அதிகமானது குடிபழக்கம்; இன்று வரை தொடர்கிறது.