

வந்திருந்தவர்கள் அனைவரும் உலகின் மிக முக்கிய விஞ்ஞானிகள்.
ஜப்பானில் இருந்து வந்த விஞ்ஞானி பேசினார். “இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தில் மின்சாரத்துக்குப் பிறகு வந்த அதிரடி கண்டு பிடிப்பு என நான் கருதுகிறேன்.. ஸ்மார்ட் ஃபோன் மனித வாழ்வில் நுழையாத இடங்கள் மிகச் சிலவே.. வெகு நாள் நாம் விவாதித்தது என்ன..? அடுத்து எந்த கண்டுபிடிப்பு வந்து பெரிய பாதிப்பை நிகழ்த்தும் என்று.. இதோ அதன் விடை தான் இன்று ஏஐ… செயற்கை நுண்ணறிவு.. குவாண்டம் கணினிகளுக்குள் ஏஐ நுழைந்து விட்டது.. பல ஆயிரம் வருடங்கள் நமது தற்போதைய நவீன சூப்பர் கம்ப்யூட்டர்கள் போடக் கூடிய ஒரு கணித வினாவை சில நொடிகளில் ஏஐ போட்டு விடுகிறது.