சிறுகதை: அக்காவின் கமுக்கம்!

Brother and Sister
Brother and SisterAI Image
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on
Kalki Strip
Kalki Strip

நாடெங்கும் பரவி இருந்த கொரோனா காலகட்டத்தில் அவனுடைய ஊரிலும் கொரோனா பரவி இருந்தது. வேலையில்லாமல் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடந்த கால கட்டம் அது.

அவனுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. வறட்டு இருமல், இடைவிடாத காய்ச்சல், வாந்தி, உடம்பு வலி இவ்வாறு இருந்தது.

மெடிக்கலில் மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தான். எந்த ஒரு பலனும் அளிக்கவில்லை. அவனுடைய தாய்மாமா வண்டியில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் ஊசிப் போட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார்.

காய்ச்சல் கொஞ்சம் குறைந்து இருந்தது. வீட்டில் எப்பொழுதும் படுத்த படியே கிடந்தான். அம்மாவும் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை போட்டுக் கொடுத்தார். அதைக் குடித்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com