

"அஜந்தா" தனியார் கம்பெனியில் கடிகாரம் மாலை 5 மணியை இசைத்து அறிவிக்க, காலையில், இளவரசனுக்கு மேனேஜர் கொடுத்த சுறுசுறுப்பு 'கீ' இன்னமும் அவனை இயக்கியது அதிவேகமாய்.
'கண்ணுக்கு மை அழகு' மனைவி பத்மாவின் அலைபேசி அழைப்பு.
“ஹ.. என்ன பத்மா?”
“எ.. என்னங்க, இப்பத்தான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். வீட்டு முன்வாசல் திறந்து கிடக்குது. உங்கப்பாவைக் காணும்” சன்னமான குரலில் கூற,
“அ.. அப்பாவைக் காணோமா? அய்யய்யோ. மீண்டும் இரண்டாம் முறையா?” ‘குப்’பென ஏறிய இரத்த அழுத்தத்தில் சற்றே நடுங்கினான் இளவரசன்.
“ஆமாங்க. நல்லவேளை நான் முன் யோசனையா அவரை முன்அறையிலேயே விட்டுட்டு, மற்ற அறைகளை பூட்டிட்டு போனேன். இல்லேன்னா, வீட்டில பொருட்கள் எல்லாமே களவு போயிருக்குமே?” கவலையாய் பத்மா.
“நீ.. நீ, என்ன பேசற? இப்ப அப்பா முக்கியமா? பொருட்களா? போனை வை. நான் முன் அனுமதி கேட்டுட்டு, உடனே வீட்டுக்கு வரேன்”. அடுத்த அரைமணியில் வீட்டில்.