சிறுகதை: மதிப்பு!

Mom and Son
Mom and Son
வேலு இராஜகோபால்

சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் உண்டு. எழுதுகிற பழக்கமும் உண்டு. நாற்பதாண்டுகள் மைய அரசில், டெல்லியில் பணியாற்றிவிட்டு, தென்காசியில் வசிக்கிறேன். கல்கி ஆன்லைன், நவீன விருட்சம், அமுதசுரபி, அம்ருதா, இணையத்தில் நடுகல், மயிர், சிறுகதைகள்.காம், காக்கைச் சிறகினிலே என்று பல இதழ்களில் எழுதிவருகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதுண்டு.

Updated on
Kalki Strip
Kalki

பதினேட்டு மணி நேரம் விமானத்தில் உட்கார்ந்தே வந்த பிரயாணக் களைப்பு கண்களை அழுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் தூங்க முடியவில்லை. ராஜீவ் மல்ஹொத்ரா, டெல்லி விமான நிலையத்திலிருந்து மயூர்விகார் காலனிக்குச் சென்று கொண்டிருந்தார். மணியைப் பார்த்தார். 12:20 இன்னும் அரைமணி நேரத்துக்கு மேலாகும். மாலையில்தான் இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியும் என்று சாச்சா (சித்தப்பா)வின் மகன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். கண்ணை மூடவில்லை. செல்போன் அடிக்கத் தொடங்கியது. முதலில் அம்மா பேசினார். பிறகு சாச்சாவின் மகன் சந்தீப், பிறகு குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர், செயலாளர். இன்னும் என்னென்னவோ பெயர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com