சிறுகதை: நாடும் நாட்டு மக்களும்!

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது...
Workshop worker
Workshop workerAI Image
சாந்தி ஜொ

என் இயர்பெயர் ரகுநாத், நாமக்கல் மாவட்டம். தற்போது கொழும்பு, இலங்கையில் வசிக்கும் நான் 'சாந்தி ஜொ' என்ற பெயரில் கதைகள் எழுதுகிறேன். சிறுவயதில் என் கையை பிடித்து நூலகத்திற்கு கூட்டிச்சென்ற என் அப்பா மறைந்தாலும் அவர் காட்டிய புத்தகங்கள் தான் எனக்கு வாழ வழிகாட்டுகின்றன. நான் எழுத்தாளனாக உருவாக காரணமான எழுத்தாளர்கள் அகிலன், அலெக்ஸ் ஹேலி அவர்களும் தான். வாசிப்பை ஊக்குவிப்பதற்க்காக வசிக்கும் தெருவில் நூலகம் அமைக்க புத்தகங்களை சேகரித்து கொண்டு இருக்கிறேன்.

Updated on
Kalki strip
Kalki strip

“நீ நல்லா படிக்கணும் கௌரி. எதையும் நினைச்சு வருத்தப்படாம படிப்புல மட்டும் கவனத்த செலுத்து, எனக்கு அது போதும்.”

“அய்யோ... அதெல்லாம் சரி மாமா. நீ ஆசைப்பட்டபடி நான் படிக்கிறேன். அதுக்குன்னு இப்படியெல்லாம் நீ கஷ்டப்படணுமா சொல்லு. உடம்பு எப்படி கொதிக்குது பாரு. இந்த காய்ச்சலோட வேலைக்கு போறேன்னு சொல்ற... இப்படியெல்லாம் நீ கஷ்டப்பட்டு சம்பாரிக்கணுமா?” என்றாள் கௌரி.

“போன வாரமும் லோன் கட்டல கௌரி. இந்த வாரமும் கட்டலனா நல்லா இருக்காது” என்று அந்த உடல் வலியிலும் வேலைக்கு செல்ல தயாரானான் பிரபா.

“அதுக்குனு என்ன மாமா. போனவாரம் பாழாப்போன காய்ச்சல் எனக்கு வந்ததால மருந்து வாங்க பேங்க்குக்கு கட்ட வேண்டிய காச செலவு செஞ்ச. இப்ப உனக்கு காய்ச்சல். இரண்டு நாளா குறையாம இருக்கு. சொன்ன கேளு, இன்னைக்கு ரெஸ்டா இரு மாமா” என்றாள் கௌரி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com