சிறுகதை: ஒரு நண்பகல் நேரத்து மயக்கம்

Tram
Tram
ஜி. சியாமளா கோபு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 “PRESIDENT OF INDIA” SHRI PRANAB MUKERJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம். மாண்பிமிகு அய்யா மறைந்த திரு.அருணோதயம் அருணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் என்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். அநேக சிறுகதைகள் வல்லினம், திண்ணை, பதாகை, குட் புக், My vikatan ல், Amazon kindle, Pustaka, கல்கி ஆன்லைன் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல சிறுகதைகள் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளன. அது போக என் பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டவள்.

Updated on
Kalki Strip
Kalki

“மாலா ஃபேனை பன்னெண்டுல வெய்டி. எரியுது” என்று சூரியனே கதறும் அளவிற்கு வெளியே அனல் அடித்துக் கொண்டிருந்தது. 'பிற்பகல் பதினொன்றில் இருந்து மூன்று மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது யாரும் வெளியே வர வேண்டாம்' என்று அரசாங்கம் பொதுமக்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறது. மக்கள் மசிந்தால் தானே! அவரவர் போக்கில் சுற்றிக் கொண்டுதானிருக்கின்றனர். கொரோனா காலம் போல பிற்பகலில் லாக்டவுன் போடலாமா என்று அரசின் உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணி புரிந்து ஓய்வூதியம் பெறும் பொறியாளரான எனக்கு வெளியே போக வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. மதியம் அருமையான தயிர் சாதமும் ஊறுகாயும் சாப்பிட்டேன். குளிரூட்டியை அதிகபட்சமாக்கியவன் தொலைக்காட்சியை முடுக்கி விட்டு ஈஸிசேரில் சாய்ந்தேன்.

தொலைக்காட்சியில் இரண்டு நிமிட தலைப்புச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com