

மாலைப்பொழுது வானம் லேசான மேகமூட்டத்துடன் இருந்தது. ஐயங்கார் பேக்கரியில் கோபி தனது நண்பன் கவினோடு சேர்ந்து, டீ குடித்துக் கொண்டிருக்கிறான். இருவரும் டீ குடித்து முடித்துவிட்டு, டீ கிளாஸ்சை டேபிளில் வைக்கிறார்கள். கிளாஸ்சை எடுப்பதற்காக ஒரு சிறுவன் வருகிறான்.
அந்த சிறுவனை பார்த்து கோபி, “என்னடா தம்பி இங்க தான் வேல பாக்குறியா.. ஸ்கூலுக்கு போறியா..!” என்ற ஒரு தாழ்ந்த குரலில் கேட்கிறான்.
அதற்கு அந்த சிறுவனோ, “இங்க பக்கத்துல உள்ள கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் பத்தாவது படிக்கிறேன்.. ஸ்கூல் முடிச்சுட்டு அப்படியே வேலைக்கு வந்துருவேன்..!” என்றபடி டீ கிளாசை எடுத்துக் கொண்டு செல்கிறான்.
கோபி கவினை பார்த்து, “பாத்தியாடா மச்சான், இந்த சின்ன வயசுலயும் வீட்டுக்காக எப்படி கஷ்ட படுறான்னு..!நானும் தான் இருக்கேன தண்டமா வீட்டுக்கு.. இன்னமும் ஒரு நல்ல வேல கெடக்க மாட்டேங்குதடா..!” என்று புலம்புகிறான்.
“விடுடா கோபி.. எல்லாருக்கும் எல்லாமே கிடைச்சிடாதுதடா.. அது கிடைக்கிற வரைக்கும் நாம தா கொஞ்சம் பொறுமையா இருக்கணும்..!” என்று கவின் சமாதானப்படுத்துகிறான்.