

“என்னடா மகனே.. உங்க அம்மாவைப் பத்தி வர்ஷிகாகிட்ட எதுவும் சொல்லலையா..?” எனப் புன்னகைத்தார் சேதுராமன்.
தலை சொறிந்தான் விமல்.
“பாரும்மா... யசோதா இருக்காளே அவ நம்மளைப்போல இல்லை. வேற மாதிரி உயிரினம்...! ராத்திரி எட்டரை மணிக்குத் தூங்கி காலையில நாலரை மணிக்கு எந்திரிக்கிற க்ரூப். புடவை, நகை பிடிக்காது. சீரியல்ன்னா வெறுப்பு. வீட்டுல லட்ச ரூபாய்க்கு மேல புஸ்தகங்க இருக்கு. அசைவம் சாப்பிடமாட்டா. பதினஞ்சு வருசமா அதே அறுபது கிலோ. தினம் மூணு கிலோ மீட்டர் தூரம் நடப்பா. பத்து கேள்விகளுக்கு ஒரு வார்த்தைதான் பதில். ஆனா அந்தப் பத்து கேள்விகளுக்கும் அவளோட அந்த ஒத்தை வார்த்தையிலேயே பதில் இருக்கும்...”
“இன்ட்ரஸ்டிங்..” வியந்தாள் வர்ஷிகா. “எனக்கு அவங்களை உடனே பார்க்கணும்போல இருக்கு..”