நோபல் பரிசு தெரியும்... அதென்ன ஏபெல் பரிசு?

Abel prize
Abel prize
Published on
kalki strip

Abel prize: கணித உலகின் இந்த மதிப்புமிக்க விருது குறித்து ஒரு சிறு பயணம் செய்வோமா?

ஏபெல் பரிசு, கணிதத்தில் அசாதாரண பங்களிப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகளாவிய அங்கீகாரம். நார்வேயைச் சேர்ந்த புகழ்பெற்ற கணிதவியலாளர் நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் நினைவாக, 2002 முதல் நோர்வே அறிவியல் மற்றும் இலக்கிய அகாடமி இந்தப் பரிசை வழங்குகிறது. கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லாததால், இது "கணிதத்தின் உயரிய விருது" எனப் புகழப்படுகிறது.

ஒஸ்லோவில் வழங்கப்படும் இந்த விருது, 7.5 மில்லியன் நார்வே குரோனர் (தோராயமாக 750,000 அமெரிக்க டாலர்கள்) பரிசுத் தொகையுடன் வருகிறது. இயற்கணிதம், இடவியல், நிகழ்தகவு கோட்பாடு, பகுதி வகைக்கெழு சமன்பாடுகள் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உதாரணமாக, 2023-ல் லூயிஸ் கஃபரெல்லி நேரியலற்ற பகுதி வகைக்கெழு சமன்பாடுகளுக்காகவும், 2024ல் மைக்கேல் தலாக்ராண்ட் நிகழ்தகவு கோட்பாடு மற்றும் செயல்பாட்டு பகுப்பாய்வில் முக்கிய பங்களிப்புகளுக்காகவும், 2025-ல் மசாகி காஷிவாரா டி-மாட்யூல்கள் கோட்பாடு மற்றும் கிரிஸ்டல் அடிப்படைகள் கண்டுபிடிப்பிற்காகவும் இந்தப் பரிசைப் பெற்றனர்.

srinivasa S.R.varadhan
srinivasa S.R.varadhan

நம்ம சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா எஸ்.ஆர். வரதன் 2007-ல் இந்த விருதைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 1940-ல் சென்னையில் பிறந்த இவர், நிகழ்தகவு கோட்பாடு மற்றும் பகுதி வகைக்கெழு சமன்பாடுகளில், குறிப்பாக "பெரிய விலகல் கோட்பாடு" உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இவரது ஆய்வுகள் இயற்பியல், பொறியியல், பொருளாதாரம், நிதியியல் துறைகளில் பயன்பட்டன. நோர்வே அகாடமி கூறியது: "வரதனின் பணிகள் அறிவார்ந்த வலிமையும் நீடித்த அழகும் கொண்டவை. அவரது கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்கால ஆராய்ச்சிகளைத் தூண்டும்."

இதையும் படியுங்கள்:
‘மதராஸி’ Vs ‘காந்தா’: நடிகர் சிவகார்த்திகேயன் உடன் மோதும் துல்கர் சல்மான்!
Abel prize

வரதனின் பணிகள் கணிதத்தை நடைமுறையுடன் இணைத்து, புதிய ஆய்வு வழிகளைத் திறந்தன. சென்னையில் வளர்ந்து, இந்தியக் கலாச்சாரத்துடன் பயணித்த இவர், அமெரிக்காவில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது வெற்றி சென்னை மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. ஏபெல் பரிசு, கணிதத்தின் அழகையும் முக்கியத்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைத்து, இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது.

வரதனைப் போல, எதிர்காலத்தில் மேலும் பல இந்தியர்கள் இந்த உயரிய மேடையில் பளிச்சிடுவார்கள் என நம்புவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com